பாடாய்படுத்தி எடுக்கும் பண பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபட, ஒரு நாள் இப்படி குளிச்சு பாருங்க.

cash-mahalakshmi
- Advertisement -

சாதாரணமாக ஒருவருக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினை என்பது வேறு. பாடாய்படுத்தி எடுக்க கூடிய பணப் பிரச்சனை என்பது வேறு. சில பேருக்கு அடிக்கடி மன கஷ்டம் வரும். ஆனால் ஏதாவது ஒரு வகையில் சரியாக விடும். ஆனால் சில பேர் வீட்டில் நிரந்தரமாக வறுமை வாட்டி வதைக்கும். பத்து ரூபாய்க்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருவார்கள். உதாரணத்திற்கு காலம் காலமாக ஒரு சொந்த வீட்டில் தான் வசித்து வருவார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர்களுக்கு ஒரு வேலை சாப்பிட வருமானம் இல்லாமல் இருக்கும். குழந்தைக்கு புது ஆடை வாங்கி கொடுக்க வழியில்லாமல் இருக்கும். ஏதோ அவர்கள் செய்த புண்ணியம் பாட்டன் முப்பாட்டன் கட்டிய பழைய வீட்டில் குடியிருப்பார்கள்

ஒரு வீடு இருப்பதன் மூலம் அவர்களுடைய பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடுமா. வீட்டில் கணவனுக்கு வருமானம் இருக்காது. பணம் இல்லாததால் சதா வீட்டில் சண்டை சச்சரவு இருக்கும். ஏதேதோ முயற்சி செய்து பார்த்தும் பணம் சம்பாதிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அந்த வீட்டில் இருக்கும் பெண் மூன்று வேலை சமைப்பதற்கு தேவையான உணவு பண்டங்களை வாங்க கூட கையில் காசு இல்லாமல் கஷ்டப்படுவாள். இப்படிப்பட்ட கஷ்டம் என்பது மிக மிகக் கொடுமையானது. இப்படிப்பட்ட கஷ்டம் இன்றளவும் நிறைய பேர் வீடுகளில் இருந்து தான் வருகிறது.

- Advertisement -

இந்த பணக்கஷ்டத்தில் இருந்து வெளிவர ஒரு சுலபமான மந்திரத்தையும் சுலபமான பரிகாரத்தையும் தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம். நீங்கள் வருமானம் இல்லாமல் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பின்பு அதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கி விடுவீர்கள்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம், அல்லது இரண்டு பேரும் இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது. காலையில் எழுந்து குளிக்கும் போது கொஞ்சமாக தயிரை எடுத்து உங்களுடைய முகம் கை கால் உடம்புகளில் லேசாக பூசி விட்டு அதன் பின்பு குளிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை இந்த தயிர் சேர்த்து குளியலை மேற்கொள்ளும் போது, நம் உடலில் இருக்கும் பீடை விலகும். தரித்திரம் விலகும். லட்சுமி கடாட்சம் பிறக்கும்.

- Advertisement -

இந்த முறையில் செவ்வாய் கிழமையும், வெள்ளிக்கிழமையும் குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அமர்ந்து மனதார உங்கள் பணக்கஷ்டம் தீரவேண்டும் என்று குபேரரையும் மகாலட்சுமி தேவியையும் குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்து கொண்டு, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 27 முறை உச்சரித்து நமஸ்காரம் செய்து கொண்டு, பிறகு உங்களுடைய வேலைகளை தொடங்குங்கள். உங்களுக்கான பணக்கஷ்டத்தை தீர்க்கும் மந்திரம் இதோ.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் குபேர கமல தாரணியை
மகாலட்சுமியை நமஹ.

மந்திரத்தை முழுமனதோடு நம்பிக்கையுடன் உச்சரித்து மேல் சொன்ன வழிபாட்டை செய்து வருபவர்களுக்கு நிச்சயம் பணக்கஷ்டம் தீரும். முடிவில்லா கஷ்டங்களுக்கு கூட சீக்கிரத்தில் விடிவு காலம் பிறப்பதற்கு அந்த இறைவன் ஒரு நல்வழியை காட்டி தருவான். நம்பிக்கையோடு செய்து தான் பாருங்களேன். கண்முன்னே நல்லது நடக்கும் போது நிச்சயம் நீங்கள் இறை சக்தியை உணர்வீர்கள் என்ற இந்த ஒரு நம்பிக்கையுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -