உங்கள் வீட்டில் பெருமாளை இப்படி வைத்து வழிபாடு செய்தால், உங்களுக்கு பண கஷ்டம் வருவதை நிச்சயமாக யாராலும் தடுக்க முடியாது.

perumal
- Advertisement -

ஒருவருக்கு பணக்கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமென்றால் பெருமாளை வழிபாடு செய்யவேண்டும், பெருமாளை வழிபாடு செய்தால் பணக்காரர்களாக இருப்பார்கள் என்றுதானே அனைவரும் சொல்லுவார்கள். இது என்ன புது விஷயமாக இருக்கிறது. பெருமாள் படம் வீட்டில் இருந்தால் பணத்திற்கு கஷ்டம் வருமா? எல்லோருடைய மனதிலும் இப்படி ஒரு கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். ஆம், பெருமாளின் படம் இப்படி இருந்தால் நிச்சயமாக வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பெருமாளின் திருஉருவ படத்தினை நம்முடைய வீட்டில் எப்படி வைக்க வேண்டும். எப்படி வைக்கக்கூடாது என்பதை பற்றிய சில சாஸ்திர ரீதியான தகவல்களை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

perumal

நம்முடைய நேரம் நன்றாக இருக்கும்போது நாம் செய்யக் கூடிய எந்த தவறுகளும், நம்மிடம் இருக்கும் எந்த குறைபாடுகளும் நமக்கு பாதிப்பினை கொடுக்காது. அதே, நம் நேரம், கொஞ்சம் தடுமாறினாலும் ‘எதனால் நமக்கு இத்தனை கஷ்டங்கள்’ என்று நாம் செய்யக்கூடிய தவறுகளை ஒவ்வொன்றாக தோண்டி பார்க்க ஆரம்பித்து விடுவோம். உங்களுடைய வீட்டிலும் கஷ்டம் இருந்தால், இந்த மாற்றத்தை கொஞ்சம் கொண்டு வந்து பாருங்கள் நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டத்திற்கு, குறிப்பாக பண கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கும்.

- Advertisement -

பொதுவாகவே பெருமாள் வழிபாடு செல்வ செழிப்புக்கு உகந்தது. அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் இந்த உலகத்தில் பெருமாளுக்கு தான் அதிகப்படியான கடன் உள்ளது. குபேரனிடம் கடன் வாங்கியவர் பெருமாள். இது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தானே. பெருமாள் திருமணத்திற்கு முன்பாக கடனாளியாக தான் இருந்தார். இப்போது கடனாளியாக தான் இருக்கின்றார். இதுவரை பெருமாள் வாங்கிய கடனுக்கு, குபேரருக்கு வட்டி கட்டி வந்து கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது. ஆனால் பெருமாள் மகாலட்சுமியின் கரங்களைப் பிடித்து பின்பு மகாலட்சுமியை திருமணம் செய்த பின்பு செல்வ செழிப்போடு இருப்பதாகவும் சாஸ்திரம் சொல்கிறது.

perumal1

பெருமாளை தனியாக வைத்து வீட்டில் வழிபாடு செய்தால் அந்த வீட்டில் பண கஷ்டம் வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது பெருமாளும் தாயாரும் கட்டாயம் சேர்ந்து இருக்க வேண்டும். அதாவது மகாலட்சுமியோடு சேர்ந்த பெருமாள் படம் வீட்டில் இருப்பது அதிகப்படியான நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

சில பேர் வீடுகளில் மிகவும் பிரம்மாண்டமாக பெருமாளின் திருவுருவப்படம் இருக்கும். ஆனால் அந்த பெருமாளுடன் மகாலட்சுமி தாயார் இருக்கமாட்டார்கள். பெருமாளுக்கு இத்தனை ஐஸ்வரியங்கள் கிடைப்பதற்கு காரணம் மகாலட்சுமி அவர்களை கரம் பிடித்ததால் தான். மகா லட்சுமி விடுத்து பெருமாளை மட்டும் நம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

perumal2

உங்களுடைய வீட்டில் பெருமாள் மட்டும் தனியாக இருந்தால், அந்த பெருமாளின் சிலைக்கு பக்கத்திலோ பெருமாளின் திருவுருவப்படத்திற்கு பக்கத்திலோ ஒரு மகாலட்சுமி திருஉருவ படத்தினை வாங்கி வைத்து விடுங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு விடிவுகாலம் கிடைக்கும். ஒரே நாளில் எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடும் என்று சொல்ல வரவில்லை. உங்களுக்கு கஷ்டம் இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய வீட்டில் இந்த விஷயத்தை மாற்றிப் பாருங்கள். நிச்சயமாக அதன் மூலம் உங்களுக்கு படிப்படியாக நல்ல மாற்றம் தெரியும்.

- Advertisement -