கடன் இல்லாமல், நஷ்டம் இல்லாமல் சொந்தத் தொழிலில் கோடி கோடியாக லாபம் சம்பாதிக்க வேண்டுமா? பெருமாளுக்கு புதன்கிழமை இந்த நைவேத்தியத்தை வையுங்கள் போதும்.

perumal
- Advertisement -

நிறைய பேருக்கு சொந்த தொழிலில் கடன் இல்லாமல் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முதலில் சொந்தத் தொழிலை ஆரம்பிக்கும் போது கடன் வாங்கி தான் முதலீடு செய்வார்கள். ஆனாலும் அந்த கடனை எல்லாம் சீக்கிரத்திலேயே அடைத்து நஷ்டம் ஏற்படாமல் நிறைய லாபத்தை சம்பாதிக்கக்கூடிய சூட்சமம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது. தொழில் தொடங்கும் எல்லோரும் வெற்றி பெறுவது கிடையாது. இதற்கான காரணம் வெற்றி அடைபவர்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய விடாமுயற்சியும் கடின உழைப்பும் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

ஆனால் ஒரு சிலரால் உண்மையாக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சொந்த தொழிலில் முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு ஜாதகரீதியாக சில பிரச்சினைகளும் உண்டு. ஜாதக கட்டத்தில் புதனும் சுக்கிர பகவானும் வலுவிழந்து காணப்படும் போது நாம் என்ன தான் முட்டி மோதினாலும் நம்மால் சொந்த தொழிலில் வெற்றி காண முடியாது. ஜாதகத்தில், சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் இல்லை என்றாலும் சொந்த தொழிலில் முன்னேற ஜோதிட ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம். ஒரு சின்ன பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

புதன்கிழமை அன்று பெருமாளுக்கு பச்சை பயிரால் பாயாசம் செய்து வைக்க வேண்டும். பச்சை பயறு தானியத்தை வாங்கி ஊற வைத்து வெல்லம், ஏலக்காய், நாட்டு சர்க்கரை, சேர்த்து நெய் ஊற்றி சுவையான பாயாசம் தயார் செய்து உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நிவேதனமாகப் படைத்து அந்த பாயாசத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுத்தாலும் சரி, அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டிலேயே இருக்கும் பெருமாளுக்கு இந்த பாயசத்தை வைத்து, வீட்டின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், குழந்தைகளுக்கு இந்த பாயசத்தை தானமாக கொடுத்தாலும் சரி, அது உங்களுடைய ஜாதகத்தில் புதன் பகவானே வலுவாக்கி விடும்.

அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை பசும் பாலில், ஏலக்காய், நெய், டைமண்ட் கற்கண்டு, சேர்த்து மணக்க மணக்க பால் பாயசம் செய்து ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் மகாலட்சுமிக்கு நிவேதனமாக வைத்து அந்த பாயாசத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட்டு வரவேண்டும். இதை செய்யும் போது சுக்கிரன் வலுவடைகின்றார்.

- Advertisement -

வாரம்தோறும் வரக்கூடிய புதன்கிழமை அன்று வெள்ளிக்கிழமை அன்றும் இந்த இரண்டு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்து வருபவர்கள் தொடங்கக்கூடிய தொழிலாக இருக்கட்டும், அல்லது நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தொழிலாக இருக்கட்டும் நிச்சயம் வெற்றிகரமான லாபத்தை கொடுக்கும்.

சரி நிறைய லாபத்துடன் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாமா? நிச்சயமாக செய்யலாம். செய்யும் தொழிலில் மேலும் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே செல்லும். லாபம் இன்னும் பல மடங்கு உயரும். நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு 11 வாரங்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து தான் பாருங்களேன். அதுவும் குறிப்பாக புதன் கிழமை அன்று புதன் ஓரை வரும்போதும் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரை வரும்போதும் இந்த பரிகாரத்தை செய்வது இரட்டிப்பு பலனை கொடுக்கும்.

- Advertisement -