வாழ்க்கையில் பணக்கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. தினமும் பெருமாளுக்கு முன்பு இந்த 1 பொருளை நிவேதனமாக வைத்து வேண்டிக் கொண்டால்.

perumal
- Advertisement -

வாழ்க்கையில் நமக்கு பண கஷ்டம் என்பதே வரக்கூடாது என்றால் முதலில் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். சோர்ந்து போய், வேலை செய்யும் நேரத்தில் ஓய்வு என்ற வார்த்தைக்கு இடம் கொடுக்கக் கூடாது. குறிப்பாக பணத்தின் மீது வெறுப்பு வரக்கூடாது. வெறுப்போடு நாம் இஷ்டம் இல்லாமல் பணம் சம்பாதித்தால், வரக்கூடிய வருமானம் நிச்சயமாக நல்ல வழியில் செலவாகாது. வீண் விரையம் ஆகிக்கொண்டே தான் இருக்கும். ஆகவே பணம் சம்பாதிக்கும் போது, ஒரு ஆர்வத்தோடு ஆசையோடு அந்த வேலையை செய்யுங்கள்.

என்னடா இது தலையெழுத்து இந்த பணத்தை சம்பாதிக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா, என்று நினைக்க கூடாது. பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியை ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கின்றானே என்று நினைத்து மன நிறைவோடு வேலை செய்ய வேண்டும். வரக்கூடிய வருமானம் நிச்சயம் இரட்டிப்பாகும். இது முதல் விஷயம். முயற்சி செய்து பாருங்கள் வருமானத்தில் வித்தியாசத்தை உணர்வீர்கள். வந்த வருமானம் செலவாகும் போதும் நல்ல வித்தியாசம் தெரியும். வீண் விரயங்கள் குறையும்.

- Advertisement -

இது தவிர ஒரு வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். பணத்தை கொட்டிக் கொடுக்கக்கூடிய கடவுள் என்றால் அது பெருமாள். இது நம்மில் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். தினம் தினம் பெருமாள் வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். பெருமானின் திருவுருவப்படம் எல்லோர் வீட்டிலும் இருக்கும் அல்லவா. அவருக்கு காலையில் ஒரு கைப்பிடி இந்த பொருளை நிவேதனமாக வைத்துவிட்டு, பிறகு உங்களுடைய வேலையை தொடங்குங்கள். அது எந்த பொருள்.

அவல் தாங்க அந்த பொருள். சுலபமாக மலிவாக கிடைக்கக்கூடிய இந்த பொருளை வாங்கி சுத்தமான ஒரு டப்பாவில் கொட்டி மூடி வைத்து விடுங்கள். இதை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி இந்த பரிகாரத்தை செய்யலாம். யாராவது ஒருவர் காலையில் குளித்துவிட்டு ஒரு சிறிய எச்சில் படாத பாத்திரத்தில், ஒரு கைப்பிடி அவல் போட்டு பெருமாளின் பாதங்களில் வைத்துவிட்டு, ஒரு விளக்கு ஏற்றி மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வருமானம் அதிகரிக்க வேண்டும். வருமானத்திற்கு உண்டான வழி கிடைக்க வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு பணக்கஷ்டம் என்பதே வாழ்நாளில் வரக்கூடாது. அப்படியே கஷ்டம் வந்தால் கூட, அந்த கஷ்டம் சீக்கிரம் சரியாகிவிட வேண்டும் என்று நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பெருமாளை வழிபாடு செய்து விட்டோம். வருமானம் கிடைப்பது உறுதி. நாமும் குபேரராக போது உறுதி. என்ற நம்பிக்கையோடு அன்றைய நாளை தொடங்குங்கள். தினம் தினம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பெருமாளுடைய பாதங்களில் வைத்த அவலை சிறிது நேரம் கழித்து எடுத்து வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட்டு விடலாம். உங்கள் வீட்டில் நாட்டு சர்க்கரையோ வெல்லமோ இருந்தால் அதை, இந்த அவலோடு கொஞ்சம் சேர்த்து கூட வைக்கலாம். தவறு கிடையாது.

தினமும் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றம் தெரியும். தினமும் உங்களால் இதை செய்ய முடியவில்லை என்றாலும் வாரத்தில் புதன்கிழமை, சனிக்கிழமை கட்டாயம் இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். வாழ்வில் நீங்களும் பணக்காரர் ஆவீர்கள் என்ற கனவு நிச்சயம் நிறைவேறும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் புதன்கிழமையும் சனிக்கிழமை செய்யும்போது நிச்சயமாக அசைவம் சாப்பிடக்கூடாது. சில பேர் புதன்கிழமை அசைவம் சாப்பிடும் பழக்கம் வைத்திருப்பார்கள். அப்படி இருந்தால் சனிக்கிழமை மட்டும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். இதே போல பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு கொடுக்கும் துளசி இலைகளை சிறிதளவு கொண்டு வந்து நகை வைக்கும் பெட்டியில், பீரோவில் வைக்க வேண்டும். அது உங்களுக்கு நிறைவான லட்சுமி கடாட்சத்தை தேடி கொடுக்கும் என்ற இந்த கருத்தோடு இன்றைய பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -