பெரிய பெரிய காயங்களை உண்டாக்கும் கடன் கூட, நொடி பொழுதில் காணாமல் போகும். 21 நாட்கள் குளிக்கும் தண்ணீரில் இந்த ஒரு பொருளை போட்டு குளித்தால்.

kadan
- Advertisement -

சில பேருக்கு தகுதிக்கு மீறிய கடன் பிரச்சனை இருக்கும். அந்த கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத சூழ்நிலை இருக்கும். கடனை வாங்கிவிட்டு எப்படி திருப்பி தருவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் திடீரென்று எந்த ரூபத்திலாவது ஏதாவது ஒரு யோகம் அடித்து, அந்த கடனை அடைக்க கூடிய நேரம் காலம் வந்துவிடும். எல்லோருக்கும் இந்த அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சிலருக்கு இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்கும். இந்த அதிர்ஷ்ட காற்று நமக்கும் வீச வேண்டும் என்றால், நம்மை சுற்றி இருக்கும் துர்சக்திகள் நம்மை விட்டு விலக வேண்டும். அப்போது தானே நல்லது நடக்கும். அதற்கான ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுக்கும் கடனை அடிப்பதற்கான அதிர்ஷ்ட யோகம் அடிக்க வேண்டும் என்றால் இந்த ஒரு குளியல் போதும்.

பெரிய பெரிய காயங்களை எல்லாம் கூட சரி செய்ய கூடிய, மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருள்தான் பெருங்காயம். அதாவது நம் உடலை சுத்தம் செய்யக்கூடிய சக்தி இந்த பெருங்காயத்திற்கு உண்டு. உடலில் இருக்கும் தேவையற்ற வாயுக்களை வெளியேற்றும். உடலுக்கு உள்ளே இருக்கும் பெரும் காயங்களுக்கு, கண்ணுக்கே தெரியாத உடல் உபாதைகளுக்கு கூட இது மருந்தாக அமைகிறது.  இப்படிப்பட்ட மருத்துவ குணாதிசயங்கள் அடங்கியிருக்கும் பெருங்காயத்திற்கு, மகத்துவமும் அதிகம் இருக்கிறது.

- Advertisement -

21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இரண்டு சிட்டிகை பெருங்காயத்தை போட்டு நன்றாக கலந்து விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் கழித்து இந்த பெருங்காய தண்ணீரில் குளிக்க வேண்டும். தலைக்குத்தான் குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேலுக்கு மட்டும் குளித்தால் கூட போதும். ஆக மொத்தத்தில் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இந்த பெருங்காயத்தூள் கலந்து இருக்க வேண்டும். நீங்கள் குளிக்கும் போது கிழக்கு பார்த்தவாறு குளித்துக் கொள்ள வேண்டும்.

யாருக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கிறதோ, குறிப்பிட்ட அந்த நபரே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 21 நாட்கள் இந்த பெருங்காயம் கலந்த தண்ணீரில் குளித்து வரும்போது உங்களுடைய கடன் அடைவதற்கான ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள். நம்ப முடியவில்லையா. நம்பிக்கையுடன் 21 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு எந்த நஷ்டமும் ஏற்பட போவது கிடையாது.

- Advertisement -

முழு நம்பிக்கையோடு முயற்சி செய்து உங்களுக்கு நன்மை நடந்தால் அது லாபம். நம்மை நடக்கவில்லை என்றால், தினமும் நீங்கள் செலவு செய்த 2 சிட்டிகை பெருங்காயத்தால் எந்த நஷ்டமும் ஏற்படப்போவது கிடையாது. இந்த பரிகாரத்தை செய்து விட்டு முழு மூச்சோடு கடனை திருப்பி அடைவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் கடன் அடையும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

அடுத்து ஒரு சிறிய மஞ்சள் நிற துணியில் ஒரு கட்டிப் பெருங்காய துண்டு, மூன்று மிளகு இந்த இரண்டு பொருட்களையும் வைத்து சிறிய முடிச்சாக கட்டி நிலை வாசலில் தொங்க விட்டு விடுங்கள். இது உங்களுடைய வீட்டிற்குள் துர் சக்தி வருவதை தடுத்து நிறுத்தும். மீண்டும் மீண்டும் பண பிரச்சனை, கடன் தொல்லைகள் வீட்டிற்குள் வராமல் இருக்கவும் இந்த ஒரு சிறு முடிச்சு உதவியாக இருக்கும். கடன் வருவதற்கு காரணம் என்ன. கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள்தான் நமக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கிறது. ஆக கெட்ட சக்திகளை விலக்கி விட்டாலே நல்லது தானாக நம்மை தேடி வரும். அதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் தான் இது. முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்ற கருத்துடன் இன்றைய பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -