உங்கள் அன்பிற்குரியவர்கள் உங்களிடம் கோபம் கொண்டு பேசாமல் இருக்கிறார்களா? இந்த இலையை வைத்துக்கொண்டு ஒரு மந்திரத்தை கூறினால் ஒரே வாரத்தில் அவர்களே உங்களைத் தேடி வந்து பேசி விடுவார்கள்.

leaving couple neem
- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு உறவு இருக்கத்தான் செய்யும். அது பெற்றவர்கள், கூட பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்ற எந்த உறவாக இருந்தாலும் ஏதாவது ஒரு உறவு கண்டிப்பாக இருக்கும். உறவுகள் அற்ற மனிதன் என்று யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது. அதிலும் சிலர் மிகவும் நெருக்கமான உறவாக இருப்பார்கள். அந்த உறவில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டு கோபத்துடன் பிரிந்து சென்று விட்டால், அதனாலேயே நம் மனம் உடைந்து விடும். அப்படிப்பட்ட சூழலில் அவர்களே நம்மை தேடி வந்து நம்மிடம் பேசுவதற்கு எந்த இலையை வைத்து பரிகாரம் செய்து எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் உறவிற்குள் சண்டை ஏற்பட்டு விட்டால் உறவு கசந்து விட்டது என்று கூறுவார்கள். அதே போல் வீட்டில் கசப்பான பொருட்களை சமைத்தோம் என்றால் சண்டை வந்துவிடும் என்று சொல்லும் வழக்கமும் இருந்து வருகிறது. சண்டைக்கும், கசப்பிற்கும் அந்த அளவுக்கு சம்பந்தம் இருக்கிறது. அதேபோல் உறவினர்களுடன் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது வீட்டில் இனிப்புகளை செய்து வைப்பார்கள்.

- Advertisement -

இனிப்பிற்கும், கசப்பிற்கும் அவ்வளவு மகத்துவம் இருக்கிறது. இப்பொழுது நாம் நம்மிடம் கோபம் கொண்டு பேசாமல் பிரிந்து சென்ற நபரே நம்மை தேடி வந்து பேசுவதற்கு கசப்பான ஒரு இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். கசப்பான இலை என்றதும் நம் நினைவிற்கு வருவது வேப்ப இலை தான். ஆம், ஒரே ஒரு இலையை எடுத்துக்கொண்டு அதில் நம்மிடம் யார் வந்து பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களின் பெயரை கருப்பு நிற மை கொண்ட பேனாவால் எழுத வேண்டும்.

எழுதிய பிறகு அந்த வேப்பிலையை நம் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு கீழ்காணும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
மந்திரம்:
ஓம் நமோ பால மோஹினி (அவர்களின் பெயர்) மம வசம் குரு குரு ஸ்வாஹா.
என்று கூற வேண்டும். 108 முறை கூறிய பிறகு ஒரு கிண்ணத்தில் தேனை ஊற்றி, அந்த தேனில் நாம் பெயர் எழுதி வைத்திருக்கும் வேப்பிலையை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் திங்கட்கிழமை அன்றுதான் ஆரம்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒரு வாரம் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு வாரம் முடிந்த பிறகு நாம் கிண்ணத்தில் வைத்திருக்கும் தேனையும், வேப்பிலையையும் ஓடுகின்ற நீரில் சேர்த்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு மந்திரத்தை நாம் உச்சரிப்பதால் நம்முடைய வாழ்க்கை நிலையே மாறும். தற்போதைய நிலையில் இருந்து ராஜ நிலையை அடைவதோடு, வேலை வாய்ப்புகளும் சிறந்து விளங்கும்.

இவ்வாறு நாம் யார் பேச வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்களின் பெயரை வேப்பிலையில் எழுதி அவர்களின் பெயரை அந்த மந்திரத்தில் உச்சரித்து பரிகாரத்தை செய்வதன் மூலம் அவர்களே விரைவில் நம்மை தேடி வந்து பேசுவார்கள்.

- Advertisement -