இந்த ஒரு மந்திரத்தை நாம் உச்சரிப்பதால் நம்முடைய வாழ்க்கை நிலையே மாறும். தற்போதைய நிலையில் இருந்து ராஜ நிலையை அடைவதோடு, வேலை வாய்ப்புகளும் சிறந்து விளங்கும்.

job manthiram
- Advertisement -

வாழ்க்கை என்பது முன்னேற்றத்தை குறிக்கிறது. பிறந்த குழந்தையின் முதல் வயதான முதியவர் வரை ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் அவருடைய நிலையில் இருக்கக்கூடிய முன்னேற்றம் ஆகும். வயதிலும், உருவத்திலும் மட்டும் முன்னேறாமல், தன்னுடைய நிலையை மேலும் மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆசையாக இருக்கிறது. அவ்வாறு தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்கு எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் அவருடைய வாழ்க்கையில் அவருக்கு பணத்தை சம்பாதிக்கும் திறன் அதிகரிக்க வேண்டும். அவ்வாறு பணத்தை சம்பாதிப்பதற்கு அவர் செய்யக்கூடிய வேலை சிறப்பாக இருக்க வேண்டும். அந்த சிறப்பான வேலையை தருவதற்கு நமக்கு உதவி செய்யக்கூடிய தெய்வமாக இருப்பவர் தான் அம்பிகை.

- Advertisement -

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று வடிவங்களும் ஒரு சேர இருக்கக்கூடிய தெய்வமாக அனைத்து பெண் தெய்வங்களும் விளங்குகின்றன. குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதில் முதல் பங்கு வகிக்கக்கூடியவர் அந்த குழந்தையின் தாய் தான். அதே போல் நம்முடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்கு முதலில் வருபவர்களும் பெண் தெய்வங்கள் தான்.

அதிலும் குறிப்பாக நம்முடைய வேலை சம்பந்தப்பட்ட அனைத்து விதமான வேண்டுதல்களையும் நிறைவேற்றக்கூடிய தெய்வமாக திகழக் கூடியவள் தான் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி. அவளின் பெயருக்கு ஏற்றவாறு நம்முடைய நிலையை ராஜ நிலைக்கு ஒப்பாக உயர்த்தக்கூடிய ஆற்றலும் அந்த அன்னைக்கு இருக்கிறது.

- Advertisement -

ராஜராஜேஸ்வரி படம் இருந்தால் சிறப்பிற்குரியது இல்லாத பட்சத்தில் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பெண் தெய்வ புகைப்படத்திற்கு முன்பாக ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை நாம் மனதார நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு “ராஜயோகி நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அம்மனின் பாதத்தில் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு அந்த குங்குமத்தை பத்திரமாக ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டு நாம் எந்த வேலை விஷயமாக எங்கு சென்றாலும் அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் நாம் செல்லுகின்ற காரியம் நலமோடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே இந்த “ராஜ யோகி நம” என்னும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

எவரொருவர் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கிறாரோ அவருடைய வாழ்க்கையில் அவர் மேற்கொள்ளும் அனைத்து நல்ல முயற்சிகளும் வெற்றி அடையும் என்றும், அவருக்கு சாதகமான நிலையில் அவரின் முன்னேற்றப் பாதை அமையும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வியாழக்கிழமை இந்த மூன்று பொருள்களை ஒன்றாக சேர்த்து கையில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொன்னால், வீட்டில் பணமழை பொழிவதை யாராலும் தடுக்க முடியாது.

மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை எப்பொழுதும் நம் மனதில் நாம் உச்சரித்து நம்முடைய வாழ்க்கையில் அளவில்லாத வெற்றிகளையும் நல்ல முன்னேற்றத்தையும் அடைவோம்.

- Advertisement -