இனி நீங்கள் வேலையைத் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை, இந்த ஏஞ்சல் எண்ணை சரியாக பயன்படுத்தினால் போதும், நீங்கள் நினைத்த வேலை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

- Advertisement -

இந்த காலத்தில் வேலை கிடைப்பது என்பதெல்லாம் பெரிய குதிரை கொம்பான விஷயம் தான். எவ்வளவு தான் செலவு செய்து படித்தாலும், அதற்கான திறமைகள் இருந்தாலும், சரியான வேலை கிடைப்பதில்லை. வேறு வழியின்றி சூழ்நிலையை சமாளிப்பதற்காக கிடைத்த வேலையை செய்யும் கட்டாயத்தில் தான் அனைவரும் இருக்கிறோம். இந்த பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக ஆன்மீத்தில் சில எளிய பரிகார முறைகள் உள்ளது. அதை எப்படி நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எந்த வேலையை நாம் தேடுவதாக இருந்தாலும், அல்லது செய்ய விரும்புவதாக இருந்தாலும் முதலில் அதற்கான முயற்சிகளை நாம் சரியான முறையில் எடுக்க வேண்டும். அது மட்டும் இன்றி அந்த வேலை செய்வதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்த பிறகும் சிலரின் நேரம், வேறு பல காரணங்களால் அந்த வேலை கிடைக்காமல் தட்டி செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதை சரி செய்ய தான் இந்த வழிமுறைகள். இதை நீங்கள் எந்த ஒரு நேர்காணலுக்கு செல்லும் முன்னரோ அல்லது வேலை வேண்டி யாரையாவது பார்க்க போக போவதாக இருந்தாலும் அந்த நேரங்களில் இதையெல்லாம் செய்த பிறகு சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

பிடித்த வேலை கிடைக்க எளிய பரிகாரம்
வேலை தேடி வெளியே செல்லும் போது கட்டாயமாக நமக்கு பிடித்த தெய்வத்தை வணங்கிய பிறகு தான் செல்வோம். அப்படி வணங்கி செல்லும் வேளையில் அவர்களுடன் சேர்த்து ஆஞ்சநேயரையும் வணங்கி செந்தூரத்தை நெற்றியில் அணிந்து செல்லும் போது நமக்கும், நம்மை சுற்றி நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து நாம் செல்லும் இடத்தில் நமக்கான வாய்ப்புகளை அதிகரித்து தரும் என்று சொல்லப்படுகிறது.

அடுத்து மிக மிக எளிமையான பரிகாரம் தான். இந்த பரிகாரத்தை செய்ய ஒரு ஏலக்காய் போதும். இந்த ஏலக்காய் பணத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது. நாம் வேலைக்கு செல்வதே பணம் சம்பாதிப்பதற்காகத் தான். எனவே நீங்கள் வேலை விஷயமாக வெளியில் செல்லும் போது ஒரு ஏலக்காயை சாப்பிட்டு விட்டு சென்றால் நிச்சியமாக நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். ஒரு வேளை உங்களால் பச்சையாக ஏலக்காவை சாப்பிட முடியவில்லை என்றால், ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரில் ஏலக்காய் தட்டி போட்டு அதன் சாறு இறங்கிய பிறகு அந்தத் தண்ணீரை குடிக்க வேண்டும். இது கூட வேறு எதையும் சேர்த்து குடிக்க கூடாது. அது மட்டுமின்றி இந்த ஏலக்காய் போட்ட தண்ணீரை குடித்த பிறகு வேறு எதையும் சாப்பிடாமல் நீங்கள் செல்லும் இடத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும். இது மிகவும் கவனமாக செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரம்.

- Advertisement -

இவை அனைத்திலும் விட ஒரு முக்கியமான பரிகாரம் ஏஞ்சல் எண்களை பயன்படுத்துவது. வேலை தேடி வெளியே செல்லும் போது, நம் உடம்பில் இடது பக்கத்தில் 45 45 45 என்ற இந்த எண்களை இப்படி இடைவெளி விட்டு பச்சை நிற பேனாவால் எழுத வேண்டும். இந்த எண்ணாது நம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சத்திடம் இருந்து நமக்குத் தேவையான ஆற்றலை ஈர்த்து தரும் சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது

இந்த எண்கள் உங்கள் உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் சின்னதாக எழுதிக் கொண்ட பிறகு நீங்கள் வேலை தேடி சென்றால், நேர்காணலில் தடுமாற்றம் இன்றி பேசவும், மற்றவர் முன் உங்கள் ஆளுமை திறன் வெளிப்பவும் இது உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சம்பாதிக்கும் பணம் இரட்டிப்பாக கண்ணாடியை என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வீட்டில் இந்த சத்தம் கேட்டால் வீண் விரயமாகாமல் மென்மேலும் செல்வம் சேருமாம்!

இனி நீங்கள் வேலை தேடி அல்லது வேலை விஷயமாக எங்கு செல்வதாக இருந்தாலும், அந்த வேலைக்காக உங்களை தயார் படுத்திக் கொண்ட பிறகு, இந்த மூன்று விஷயங்களை சரியாக பின்பற்றினால் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல வேலையை தேடி வாழ்க்கையில் நல்ல ஒரு நிலைக்கு செல்ல எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -