சுக்கிர பகவானுக்குரிய இந்த தானியத்தை வைத்து வெள்ளிக்கிழமை தோறும் இந்த மந்திரத்தை கூறி பரிகாரம் செய்தால் நமக்கு வந்த பிரச்சனைகள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போகும்.

sukkiran mochchai
- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருபவர் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரின் அம்சமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிர பகவானுக்குரிய தானியமாக கருதப்படுவது மொச்சை. இந்த மொச்சையை வைத்து மகாலட்சுமியின் மந்திரத்தை நாம் வெள்ளிக்கிழமை தோறும் கூறுவதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் எப்பேற்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அந்தப் பிரச்சனை நம்மை விட்டு விலகி ஓடும் என்று கூறப்படுகிறது. அது என்ன மந்திரம்? எப்படி அந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த ஆன்மீக பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

அனைவருக்கும் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அந்த பிரச்சனையில் இருந்து நாம் வெளியில் வருவதற்கு நம்முடைய முயற்சிகளை எடுப்பதோடு, தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் இயன்ற அளவு விரைவில் அந்தப் பிரச்சினையில் இருந்து வெளியில் வர முடியும். எப்பேர்ப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி நம்முடைய பிரச்சனையை நாம் மனதில் நினைத்து ஆறு வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய மொச்சையை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகிறோம். வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலை 6 முதல் 7 மணிக்குள், மதியம் 1 முதல் 2 மணிக்குள், அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். 20 மொச்சையை எடுத்து, அதில் சிறிது வெல்லம் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து அதில் வேகவைத்த இந்த மொச்சையை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இப்பொழுது நம்முடைய பூஜை அறையில் மகாலட்சுமியின் புகைப்படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அன்னைக்கு வாசனை மிக மலர்களை சூட்டிக்கொள்ள வேண்டும். பிறகு இந்த மூட்டையை நம்முடைய உள்ளங்கையில் வைத்து நம்முடைய பிரச்சினையை மனதார நினைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மந்திரம்:
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஶ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஶ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ”

இந்த மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். பிறகு அந்த மூட்டையை நீர் நிலைகளில் போட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விட வேண்டும். வீட்டிற்குள் வருவதற்கு முன்பாக முகம், கை, கால்களை சுத்தமான நீரால் கழுவி விட்டு பிறகு வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் சாமி கும்பிடுவது போல கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா? உடனே இதை செய்யுங்கள் ஜாக்பாட் தான்!

இவ்வாறு நாம் தொடர்ந்து ஆறு வாரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த பரிகாரத்தை எந்த பிரச்சனை தீர வேண்டும் என்று நினைத்து செய்கிறோமோ, அந்தப் பிரச்சனை தீர்வதற்குரிய நல்ல வழியை மகாலட்சுமி தாயார் நமக்கு காட்டுவார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

- Advertisement -