உங்களை பிரிந்தவர் மீண்டும் உங்களிடம் வந்து சேர, உங்கள் குடும்பம் உறவுகளுடன் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக வாழ பசுமாட்டிற்கு இந்த 2 பொருட்களை சேர்த்துக் கொடுத்தாலே போதும்.

pasu
- Advertisement -

சுயநலம் நிறைந்த இந்த உலகத்தில் இப்போதெல்லாம் யாருமே குடும்ப ஒற்றுமையைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. யார் எப்படி போனால் என்ன, நானும் என்னுடைய குடும்பமும் மட்டும் நன்றாக இருந்தால் சரி என்ற நிலைமையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யாரையும் குறை கூறவில்லை. நாம் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம் என்று தான் சொல்லவேண்டும். காரணம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பணத்திற்கு பிரதான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. உறவுகள் என்பது இரண்டாம் பட்சம் ஆகிவிட்டது.

fight-1

கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர் பிள்ளைகள் என்றாலும் சரி, உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, இது தவிர மற்ற நெருங்கிய உறவுகளாக இருந்தாலும் சரி உறவுகளுக்கு என்று மதிப்பு கொடுப்பது கிடையாது. அந்த இடத்தில் பணம் தான் உறவுக்கான மரியாதையை நிர்ணயிக்கின்றது.

- Advertisement -

சரி, இதெல்லாம் போகட்டும். எங்களுக்கு பணத்தோடு சேர்த்து உறவுகளும் முக்கியம் தான். நல்லது கெட்டது என்று வரும்போது உறவுகள்தான் உடனிருந்து ஆறுதல் சொல்லும் என்று நினைப்பவர்கள் உறவுகளுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது.

vellam

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பிரிந்த உறவுகள் ஒன்று சேர வேண்டும் என்றாலும் மனப்பூர்வமாக இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து வாருங்கள். நிச்சயமாக உங்களுடைய குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக ஒற்றுமை இருக்கும். சண்டை சச்சரவுகள் குறையும். அது என்ன பரிகாரம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பசுமாட்டிற்கு இரண்டு பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற விஷயம் தலைப்பை படித்த உடனேயே எல்லோருக்கும் புரிந்திருக்கும். அது என்ன பொருள். தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசி, இனிப்பான வெல்லமும் தான் அந்த 2 பொருட்கள். தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசியுடன் வெல்லத்தை கலந்து பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும் . இந்த பச்சரிசியையும் வெல்லத்தையும் எதற்காக பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் என்பதற்கான உள் அர்த்தத்தையும் தெரிந்து கொள்வோமா.

pachcharisi

பொதுவாகவே பச்சரிசிக்கும் வெல்லத்திற்கும் நினைவூட்ட கூடிய சக்தி அதிகமாக இருப்பதாக சொல்லப் பட்டுள்ளது. அதாவது இந்த பச்சரிசியையும் வெள்ளத்தையும் பசுமாடு என்று மட்டும் கிடையாது. பசுமாடு தவிர நீங்கள் வேறு எந்த ஜீவராசிக்கும் சாப்பிடுவதற்காக உணவாக கொடுத்தாலும், அந்த ஜீவராசி உங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ளும். எடுத்துக்காட்டிற்கு ஆடு கோழி பூனை இப்படி எந்த உயிரினத்திற்க்கு நீங்கள் உங்கள் கையால் இந்த பச்சரிசியையும் வெல்லத்தையும் கொடுத்தீர்கள் என்றால், அந்த உயிரினும் உங்களை என்றைக்குமே மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுமாம்.

- Advertisement -

pasu-agathikeerai

இதனடிப்படையில் தான், வெல்லத்தையும் பச்சரிசியையும் பசுமாட்டிற்கு கொடுக்கவேண்டும் என்று சொல்லி உள்ளார்கள். சரி குறிப்பாக பச்சரிசியையும் வெள்ளத்தையும் எதற்காக பசுமாட்டிற்கு கொடுக்கச் சொல்கிறார்கள். பசுமாட்டில் தான் முப்பத்துமுக்கோடி தேவர்களும் மகாலட்சுமியும் வசிப்பதாக நம்முடைய சாஸ்திரம் சொல்லுகிறது. அப்படியிருக்கும்போது இந்த இரண்டு பொருட்களையும் நீங்கள் பசுமாட்டிற்கு கொடுத்தால் எல்லா தெய்வங்களும் அந்த பிரசாதத்தை ஏற்றுக் கொண்ட பலன் கிடைக்கும்.

banana-for-cow

உங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து நீங்கள் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பசுமாட்டிற்கு கொடுக்கும்போது, அந்த பசுமாட்டில் வசிக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமியும் விஷ்ணு பகவானும் இன்னும் எல்லா தெய்வ சக்திகளும் உங்களை நினைவில் வைத்துக் கொண்டு, உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்கும் என்பது தான் இந்த பரிகாரத்தின் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

cow

உங்களுக்கு இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் முழுமனதோடு எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் வெல்லத்தையும் பச்சரிசியையும் கலந்து பசுமாட்டிற்கு கொடுக்கலாம். உங்கள் குடும்பம், உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளிலும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -