பிரிந்த உறவுகள் உண்மையான பாசத்தோடு மீண்டும் ஒன்று சேர இதை நெற்றியில் வைத்துக் கொண்டாலே போதும்.

fight
- Advertisement -

சொந்தம் பந்தம் பாசம் பற்று உறவு என்ற வார்த்தைகளுக்கு எல்லாம் இன்று அர்த்தம் தெரியாமலேயே போய்விட்டது. ஒருவரின் மேல் ஒருவர் வைக்கக்கூடிய அன்பு கூட போலியாக இருக்கின்றது. உண்மையான பாசம் மறைந்து, ஊருக்காக பாசம், உறவுக்காக பாசம் என்று மாறிவிட்டது. அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள், தாத்தா பாட்டி சிற்றப்பன் பெரியப்பன் என்ற சொந்த பந்தங்களுக்கு உள்ளே இருந்த உண்மையான பாசம் பற்று இன்று கிடையாது. காரணம் இன்றைய உலகம் சுயநலமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. தான் வாழ்ந்தால் மட்டும் போதும். தன் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற அளவிற்கு சென்றாகிவிட்டது.

இன்னும் ஒரு படி மேலே சொல்லப்போனால் நம்முடைய பிள்ளைகளுக்கு திருமணம் ஆகும் வரை தான் பெற்ற தாய் தந்தை பாசம் கூட. திருமணமாகி விட்டால் நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கை வேறு, பெற்ற தாய் தந்தை வாழ்க்கை வேறாக மாறிவிடுகிறது. என்ன செய்வது. எல்லாம் சூழ்நிலை. எல்லோரையும் இப்படி குறை கூறி விட முடியுமா. நிச்சயமாக முடியாது. இந்த பூலோகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றால், உண்மையான அன்பும் பாசமும் காதலும் ஒரு காரணம்தான். இன்னும் ஒரு சில ஜீவன்கள், ஒரு சில உயிர்களின் மீது உண்மையான பாச பற்று பந்தங்களை வைத்திருக்கின்றது. அதனால் தான் அந்த கடவுள் இந்த பூமியை விட்டு வைத்திருக்கின்றான்.

- Advertisement -

சரி போகட்டும். இன்றைய பதிவிற்கு செல்லலாம். உங்களுடைய உறவுகள், உங்களின் மேல் பாசமாக இருக்க ஒரு சின்ன பரிகாரம் இதோ. பெற்றவர்கள் பிள்ளைகளின் பாசத்தை பெறவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பிள்ளைகள் பெற்றவர்களின் பாசத்தை பெற இந்த பரிகாரத்தை செய்தலாம். இது தவிர உங்களுடைய நெருங்கிய உறவுகள் யாரேனும் உங்களுடன் பாசமாக இருக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும் இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு முருங்கை பிசின் மற்றும் வசம்பு தேவை. முருங்கை பிசின் வசம்பு இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். வசம்பை நெருப்பில் சுட வேண்டும். ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி அதில் இருக்கக்கூடிய நெருப்பில் வசம்பை வைத்து நன்றாக சுட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சுட்ட இடம் கருகி இருக்கும் அல்லவா. அந்த கருப்பு நிறத்தில் லேசாக நெய்யை தொட்டு விரல்களால் துடைத்து எடுத்தால் கருநிறம் கையில் ஒட்டிக் கொள்ளும். அந்த வசம்பு மையை ஒரு சிறிய டப்பாவில் சேகரித்துக் கொள்ளுங்கள். இந்த வசம்பு மையோடு சிறிதளவு முருங்கை பிசின் கலந்து தினம்தோறும் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது நீங்கள் யாருடன் பாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, உங்களுடன் யார் பாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த நபரின் பெயரை சொல்லி இதை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

முருங்கை பிசின் என்பது ஜவ்வு மிட்டாய் போல தான் இருக்கும். லேசாக தண்ணீரைத் தொட்டு அதன் மேல் வைத்தால் கொழ கொழப்பு தன்மை நமக்கு வந்து விடும். இப்படி தினமும் யாரை நினைத்து இந்த பொட்டை உங்கள் நெற்றியில் இட்டு வருகிறீர்களோ அவர்கள் உங்களிடம் வெறுப்பு காட்டாமல் அன்பாக நடந்து கொள்வார்கள். வெறுப்பு காட்டுவதற்கு ஏதாவது காரணம் இருந்தால் கூட அந்த காரணங்கள் சரியாகிவிடும்.

எந்த உறவுகள் ஒன்று சேர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தவறாக யாரும் யாரையும் வசியம் செய்வதற்காக இந்த பரிகாரத்தை பிரயோகம் செய்ய முடியாது. தப்பான எண்ணத்தோடு பரிகாரத்தை முயற்சி செய்தால், பரிகாரம் பலிக்காது. நீங்கள் தெரிந்தே செய்த தவறுக்கான தண்டனையும் கிடைக்கும் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -