உங்களுடன் மனதிற்கு பிடித்தவர்கள் பேசாமல் பிரிந்து இருக்கிறார்களா? 1 ஸ்பூன் கடுகு போதும் பிரிந்தவர்கள் ஒன்று சேர! எளிய பரிகார குறிப்பு.

couple-fight-kadugu
- Advertisement -

வெண்கடுகு மற்றும் சாதாரண கடுகு இரண்டும் வெவ்வேறு பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். வெண்கடுகு கண் திருஷ்டியை போக்க வல்லது, ஆனால் சாதாரண சமையலுக்குப் பயன்படும் கடுகு ஆன்மீக ரீதியாக என்ன மாதிரியான பலன்களை நமக்கு கொடுக்கும்? கடுகை வைத்து தாந்த்ரீக பரிகாரங்கள் பல செய்யப்பட்டாலும், மனதிற்கு பிடித்தவர்கள் நம்மை விட்டு பிரிந்து இருக்கும் பொழுது அவர்கள் நம்மிடம் மீண்டும் வந்து இணைய இது போல் பரிகாரம் செய்யப்படுவது உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர நாம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பது எளிமையான தாந்த்ரீக முறையில் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

உங்கள் மனதிற்கு நெருங்கியவர்கள், பிடித்தவர்கள், கணவன்-மனைவி, ரத்த சொந்த உறவுகள், சகோதரர்கள், நண்பர்கள் என்று யாராக இருந்தாலும் உங்களிடம் பேசாமல் பிரிந்து இருந்தால் இந்த பரிகாரத்தை தேய்பிறையில் செய்யலாம். தேய்பிறையில் ஆரம்பித்து ஒன்பது முறை எப்போது வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒன்பது முறை நீங்கள் செய்வதற்குள் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் என்கிற ஐதீகம் உண்டு.

- Advertisement -

தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை அல்லது அஷ்டமி, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகளில் துவங்குவது சிறப்பு. தேய்பிறையுடன் கூடிய இந்நாட்களில் துவங்கி நீங்கள் 9 முறை இடை விடாமல் செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்களால் எப்பொழுது முடியுமோ அப்போது செய்து கொண்டால் போதும். குறிப்பாக வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் செய்து வருவது ரொம்பவே விசேஷமானது. மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஏழு மணிக்கு மேல் துவங்குவது உசிதமானது.

ஏழு மணியிலிருந்து பனிரெண்டு மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். இது ரொம்பவே எளிமையான பரிகாரம் தான். நீங்கள் சாம்பிராணி தூபம் போடுவது போல விறகு அல்லது தேங்காய் சிரட்டை ஆகியவற்றை நெருப்பில் இட்டு எரிய விட்டுக் கொள்ளுங்கள். இந்த பரிகாரம் செய்யும் பொழுது விறகு மற்றும் தேங்காய் சிரட்டை உடன் சேர்த்து வேறு எந்த பொருட்களையும் எரிக்கக் கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவை எரிந்து முடிந்ததும் உங்களுடைய கையில் ஒரு டீஸ்பூன் சாதாரண சமையலுக்குப் பயன்படுத்தும் கடுகு எடுத்து கொள்ளுங்கள். யாரை பிரிந்து இருக்கிறீர்களோ, யாருடன் மீண்டும் சேர விரும்புகிறீர்களோ அவர்களுடைய பெயரை இப்போது உச்சரிக்க வேண்டும். நெருப்பின் முன்பு நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ கையை மார்புக்கு நேரே வைத்து இறுக மூடிக் கொண்டு மனதார அவர்களுடன் சேர வேண்டும் என்கிற பிரார்த்தனையை கூறி கண்களை மூடி வேண்டிக் கொள்ளுங்கள்.

நீங்கள் அவர்களை எப்படி கூப்பிடுவீர்களோ அந்த பெயரை சொல்லி எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை உச்சரிக்க வேண்டும். உங்களுடைய மனதில் உண்மையாகவே அவர்களுடன் சேர வேண்டும், அவர்கள் நம்முடன் மீண்டும் வந்து பேச வேண்டும், இணைய வேண்டும் என்கிற உத்வேகம் வர வேண்டும். அதுவரை நீங்கள் அவர்களுடைய பெயரை உச்சரிக்க வேண்டும். பின்பு கையிலிருக்கும் கடுகை நெருப்பில் இட்டு பொரித்து விடுங்கள். கடுகு படபடவென பொரிந்ததும் உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேற துவங்கும். இது போல் ஒன்பது முறை ஏதாவது ஒரு நாட்களில் நீங்கள் தொடர்ந்து செய்து வர விரைவிலேயே அவர்கள் உங்களை வந்து சேருவார்கள். தாந்த்ரீக பரிகாரங்கள் பலவும் இது போல எளிமையானது தான். முழு மனதுடன் செய்யும் பொழுது தான், அதனுடைய பலன்கள் கிடைக்கின்றன என்பதை நினைவில் கொண்டு செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -