பிரிந்தவர்கள் ஒன்று சேர, மனதிற்கு பிடித்தவர்கள் மீண்டும் நம்மிடம் வந்து சேர வெற்றிலையை என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

couple-fight-vetrilai
- Advertisement -

நம் மனதிற்கு பிடித்தவர்கள் அல்லது கணவன், மனைவிக்குள் இருக்கும் சண்டையால் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். வெற்றிலையை கொண்டு செய்யப்படும் இந்த சுலபமான பரிகாரம் பிரிந்த தம்பதியினரை ஒன்று சேர்த்து வைக்கும் அல்லது மனதால் ஒன்றிணைந்து ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து இருப்பவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது. வெற்றிலைக்கு அதீத சக்தி உண்டு. இந்த வெற்றிலை கொண்டு எப்படி பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கப் போகிறோம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வெற்றிலைக்கு இருக்கும் சக்தி ரொம்ப மகத்துவமானது. மற்ற இலைகளை காட்டிலும் இதற்கு துவர்ப்பு சுவை உண்டு. வெற்றிலை மங்களகரமான பொருளாகவும் பார்க்கப்படுகிறது. எல்லா சுபகாரியங்களுக்கும் பயன்படுத்தப்படும் இந்த வெற்றிலை வீட்டில் வளர்த்து வந்தால் சுப காரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. வெற்றிலையை எப்பொழுதும் தனியாக வளர்க்கக்கூடாது. வெற்றிலை கொடியுடன் சேர்த்து வேறு சில செடிகளையும் வளர்த்து வந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படாது என்று கூறுவார்கள்.

- Advertisement -

வெற்றிலை பூக்காத தாவரம் என்பதால் சிலர் இதை வளர்த்து வந்தால் குடும்பத்தில் வம்ச விருத்தி தடைபடும் என்று கூறுவார்கள் எனவே வெற்றிலையை தனியாக வளர்க்காமல் சேர்த்து வளர்த்தால் இந்த பிரச்சனையை நீங்குவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய வெற்றிலை இலையில் இரண்டு இலைகளை நன்கு சுத்தமானதாக, பச்சையாக இருக்கக் கூடியதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக இரண்டு வெற்றிலைகளும் முற்றியதாக இருக்க வேண்டும். இளம் வெற்றிலைகளை பயன்படுத்தாமல் முற்றிய இரண்டு வெற்றிலைகளை காம்புடன் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது ஒரு கொட்டை பாக்கு வையுங்கள். கொட்டை பாக்கு தான் வைக்க வேண்டும், வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது. பின்னர் அதனுடன் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்து நான்காக மடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அதை ஒரு மஞ்சள் நூல் கொண்டு கட்டிக் கொள்ளுங்கள். அப்போது தான் உள்ளே இருக்கும் பொருட்கள் வெளியில் வராது. பின்னர் இதை பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பூலத்தில் வைத்து நீங்கள் எப்பொழுதும் வழிபடுவது போல மற்ற தெய்வங்களை வழிபட்டு, இந்த வெற்றிலைக்கும் தூபத்தை காண்பிக்க வேண்டும். தினமும் இந்த வெற்றிலைக்கு தூபத்தை காண்பித்து வந்தால் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.

எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது தான் அதற்கு பலனும் உண்டு எனவே உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மீண்டும் உங்களை வந்து சேருவதற்கு வெற்றிலை பரிகாரத்தை முறையாக ஒவ்வொரு நாளும் வெற்றிலை காய்ந்து போகும் வரை செய்து வாருங்கள். தினமும் இதற்கு தூபம் காண்பிக்க வேண்டும் என்பது முக்கியமானது. வெற்றிலை காய்ந்ததும் அதை ஓடும் நீரில் விட்டு விட வேண்டும். மீண்டும் வேறு ஒரு இரண்டு வெற்றிலைகளை இதே போல செய்து மனதார வழிபட வேண்டும். இது போல தொடர்ந்து ஒரு மண்டலம் வழிபட்டால் எப்படிப்பட்டவர்கள் பிரிந்து இருந்திருந்தாலும் மனதால் ஒன்று பட்டு இருந்தால் நிச்சயம் அவர்கள் ஒன்று சேருவார்கள்.

- Advertisement -