பிரிந்த கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து நன்றாக வாழ வேண்டுமா? இந்த ஒரு பொருளை நெருப்பில் போட்டு பொசுக்கி விடுங்கள் போதும்.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை யாரிடமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையே இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் அடுத்தவர் இடத்தில் இருந்து பார்த்தாலே போதும் பாதி பிரச்சனை சரியாகிவிடும். நாம் எந்த ஒரு விஷயத்தையும் நம்முடைய கோணத்தில் நின்று ஆராய்ந்து கொண்டிருந்தோமானால் அதற்கான தீர்வு எப்போதுமே கிடைக்காது. அது கணவன் மனைவியாகட்டும், சகோதரர்களாகட்டும், நட்பு வட்டாரமாகட்டும், உறவினர்களாகட்டும் யாராக இருந்தாலும் சிறிது நேரம் அவர்கள் நிலையிலிருந்து அவர்கள் செய்தது சரியா, தவறா என்று யோசித்தாலே போதும். ஆனால் நாம் அப்படியெல்லாம் யோசித்து நடந்து கொள்வதில்லை. ஒரு வார்த்தை வந்து விட்டால் அதற்கு நாம் பதில் நான்கு வார்த்தை கொடுத்து விட வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறோம். இதன் மூலம் அந்த உறவுகளுக்குள் பிளவு ஏற்பட்டு மனக்கசப்பு, வருத்தங்கள் தான் மிஞ்சும். இதைப் பற்றி எல்லாம் நாம் எப்போதுமே யோசிப்பதில்லை. குறிப்பாக இப்படிப்பட்ட பிரச்சனை எல்லா கணவன் மனைவிக்கிடையேயும் உள்ளது.

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சிறிது நேரம் மனம் விட்டு பேசினாலே சரி செய்து விடலாம். ஆனால் நாமோ பேசி பேசியே சின்ன விசயத்தை கூட பெரிதாக ஆக்கி விடுவோம். சரி இப்போது இது போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் நம்மை விட்டு பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்க ஒரு சின்ன பரிகாரத்தை தான் நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

இதற்கு நமக்கு இரண்டு கிராம்புகளும், கொஞ்சம் நெய்யும் இருந்தால் போதும். இதற்க்கு கிராம்பு நல்ல மொட்டுடன் இருக்க வேண்டும் உடைந்திருக்கக் கூடாது. இதை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். ஏன் என்றால் உடைந்த உறவை சேர்க்கத்தான் இந்த பரிகாரம். அதில் முக்கியமாக பொருள் இந்த கிராம்பு தான் அது கொஞ்சம் கூட உடைந்து இருக்க கூடாது.

இந்த பரிகாரம் செய்வதற்கு நாம் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் பூஜை அறைக்கு சென்று காலை பூஜையை முடித்து கொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டு கிராம்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கிராம்பினை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் யாரிடம் சேர வேண்டுமோ அந்த நபரின் பெயரை மூன்று முறை சொல்லி அந்த நபர் உங்களோடு சேர வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சமாக நெய் எடுத்து கொள்ளுங்கள். இந்த இரண்டு கிராம்புகளையும் நெய்யில் நன்றாக முக்கி எடுத்து விளக்கு தீயில் காட்டி எரித்து சாம்பலாக்கி விட வேண்டும். இப்படி எரிக்க சிரமமாக இருந்தால் சாம்பிராணி தூபமோ அல்லது கப் சாம்பிராணி போன்றவைகளை ஏற்றிவிட்டு அதில் இந்த கிராம்பை போட்டு எரித்து விடுங்கள். ஆனால் கட்டாயமாக கிராம்பு முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விட வேண்டும். கிராம்பு எரிந்த சாம்பல் இருக்கும் அல்லவா. அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கரைத்து விடுங்கள். அவ்வளவு தான்.

- Advertisement -

சுலபமாகவே படிகாரம் முடிந்துவிட்டது. இதே போல வாரம் ஒரு முறை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். ஐந்து வாரம் இந்த பரிகாரத்தை செய்து வரும் போதே உங்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஒரு நல்லது நடக்கும். இந்த பரிகாரத்தை செய்யும் போதே யாருடன் நீங்கள் பேசாமல் இருக்கிறார்களோ, யார் உங்களை விட்டுப் பிரிந்து இருக்கிறார்களோ அவர்கள் உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று உங்கள் குலதெய்வத்திடமும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை நம் வீட்டு பூஜை அறையில் தான் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நாள் கிழமை எதுவும் கிடையாது. ஆண், பெண் யார் வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள், இதற்கு முன் பிரிந்தவருடன் சேர்வதற்கான முயற்சிகள் எடுத்திருந்து அது நடக்காமல் போனாலும் கூட, இந்த பரிகாரம் செய்யும் நேரத்தில் அதற்கான முயற்சிகளை தொடர்ந்தீர்கள் என்றால் கட்டாயமாக அதற்கு பலன் உண்டு. இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர இதற்கான பலன் மிக விரைவிலேயே உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்தப் பிரச்சனை அடிக்கடி உங்க வீட்டில் வருமா? அப்படி என்றால் குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்க ஏதோ ஒரு இடையூறு இருக்கிறது என்று தான் அர்த்தம்.

இந்த பரிகாரத்தை தவறான எந்த ஒரு விஷயத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. நிச்சயம் அதற்கான பலன் கிடைக்காது அதுமட்டும் இல்லாமல் அது விபரீதமாகவும் முடியும். பரிகாரங்கள் அனைத்தும் நம் வாழ்வில் நன்மைக்காகவும் நாம் செய்யும் சிறு சிறு அறியா தவறுகளை சரி செய்து நம் குடும்பத்தை சரியான முறையில் கொண்டு செல்லவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடுத்தவருக்கு துன்பம் தரும் நோக்கில் எந்த பரிகாரத்தை மேற்கொண்டாலும் அதற்கான பலன் கிடைக்காது. மாறாக நம்முடைய துன்பம் இரட்டிப்பாகும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -