உங்களை பிரிந்தவர்களை மீண்டும் உங்களை தேடி வர வைக்க இந்த ஒரு இலை போதும். பிரிந்த உறவுகளை மீண்டும் நம்மிடம் சேர்க்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்.

- Advertisement -

எந்த ஒரு உறவிலும் பிரிவு என்பது கொடுமையான விஷயம் தான். சில பிரிவுகள் தெரிந்தே நடப்பவை, சில பிரிவுகள் நம்மை அறியாமல் நடந்து விடும். இப்படி எந்த காரணத்தினால் பிரிந்திருந்தாலும் சரி, பிரிந்த எந்த உறவானாலும் சரி இந்த பரிகாரத்தை செய்து வரும் போது நிச்சயமாக அவர்களே நம்மை தேடி வந்து சேர்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிரிந்த உறவு என்றவுடன் அது கணவன் மனைவியை மட்டும் குறிப்பது அல்ல. அண்ணன் தங்கை, தாய் தந்தையர் மற்ற எந்த உறவுகளாகாவும் இருக்கலாம். இப்படி யார் பிரிந்திருந்தாலும் அவர்கள் ஒன்று சேர்க்க வேண்டும் என நினைத்து மற்றவர்கள் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுதும் நிச்சயம் அது நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்று பார்க்கலாம்.

- Advertisement -

பிரிந்த உறவுகள் ஒன்று சேர:
இந்த பரிகாரத்திற்கு வன்னி மரத்தின் இலை தேவை. இந்த மரத்தை ஷமி விருட்சம் என்று கூறுவார்கள். சனி தோஷத்தின் பாதிப்பில் இருப்பவர்கள் இந்த மரத்தை வழிபாடு செய்து வரும் போது நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மரத்தின் இலையை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் வேண்டும். இந்த பரிகாரத்தை சிவாலயத்தில் தான் செய்ய வேண்டும். வன்னி மர இலைகள் எடுத்துக் கொள்ளுங்கள். இது சிவாலயத்தில் கண்டிப்பாக இருக்கும்.

அங்கு சென்று எடுக்கும் போது கோவில் உண்டியலில் 11 ரூபாய் காணிக்கையாக செலுத்தி விட்டு வன்னி மரத்திடம் இந்த உறவு என்னை விட்டு பிரிந்து விட்டது. அந்த உறவு என்னை சேர்வதற்காக உன்னை சிவபெருமானிடம் சமர்ப்பித்து வேண்டிக் கொள்ளப் போகிறேன் என சொல்லி அந்த இலைகளை எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த இலைகளை நீங்களே நேரடியாக சிவபெருமானுக்கு, சிவலிங்கத்திற்கு வைத்து பூஜை செய்ய முடிந்தால் செய்யலாம். அல்லது கோவில் அர்ச்சகர் இடம் கொடுத்து அவரின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். அதே போல் இதை காலை அல்லது மாலை உங்கள் வசதிக்கேற்ப எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை 21 நாட்கள் இடையில் தடங்கள் இல்லாமல் தொடர்ந்து செய்ய வேண்டியது அவசியம். பெண்கள் இதை செய்யும் போது அவர்களுக்கான அந்த மாதவிலக்கு நாட்கள் முடிந்த பிறகு தொடங்கினால் சரியாக இருக்கும்.

ஒருவரின் மனநிலையை மாற்றும் சக்தி வாய்ந்த மனோகாரகனாக விளங்குபவர் சந்திர பகவான். அந்த சந்திர பகவானையே தன் சிரசில் கொண்டிருப்பவர் சிவபெருமான். எனவே தான் இவருக்கு சந்திர மௌலி என்றொரு பெயரும் உண்டு. இந்த வன்னி மரத்தின் இலையை சிவபெருமானின் பாதத்தில் வைத்து நாம் வணங்கும் போது நம்மை விட்டு பிரிந்த உறவுகளின் மனநிலையானதை மாற்றி நம் மீது இருக்கும் கோபம், வருத்தம் அனைத்தையும் நீக்கி, நம்மிடம் சேர வேண்டும் என்று எண்ணத்தை அவர்கள் மனதிலே தோன்றி நம்மிடம் சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இனி விளக்கு ஏற்றும் போது இதை மட்டும் மாற்றிப் பாருங்கள். மகாலட்சுமி தாயார் உங்கள் இல்லம் தேடி வந்து அருள் புரிவாரிவதோடு பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவார்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு பிரிந்த அந்த உறவின் மீது உங்களுக்கு உண்மையான அன்பும் ,பாசமும் இருக்க வேண்டும். அத்தோடு இந்த பரிகாரத்தின் மூலம் நாம் இணைவோம் என்று நம்பிக்கை முழுவதுமாக இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் செய்யும் எந்த ஒரு முயற்சியும் வீணாகாது. இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பிரிந்த உறவுகளுடன் இணைந்து வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -