இந்த 2 பொருட்களை வைத்து முன்னோர்களை வழிபாடு செய்தாலே போதும். முன்னோர்களின் கோபம் தணிந்து, அவர்களுடைய ஆசிர்வாதத்தை முழுமையாக பெற்றுவிடலாம்.

malli-poo
- Advertisement -

முன்னோர்களின் கோபம் முன்னோர்களின் சாபம் எதனால் வருகிறது? நமக்கு முன்னால் வாழ்ந்து இறந்த முன்னோர்களை, நாம் நினைவு கூறாமல் அப்படியே மறப்பதால் தான், இந்த பிரச்சனை எல்லாம் நம்முடைய குடும்பத்திற்கு வருகிறது. பித்ருக்களின் சாபமும் கோபமும் நம்முடைய குடும்பத்தை பெரியதாக பாதிக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்து சாஸ்திரப்படி முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணம் சரியாக செய்யாதவர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் நிச்சயம் இருக்கும். அதை உங்களுடைய ஜாதக கட்டமே சொல்லும்.

உங்களுடைய குடும்பத்திலும் பித்ரு சாபம், பித்ரு தோஷம், முன்னோர்களின் கோபத்திற்கு ஆளானதாக ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி எங்களுடைய குடும்பத்திற்கு எதுவுமே இல்லை. இனி வரக்கூடிய அடுத்த தலைமுறைகளுக்கும் இப்படி பித்ரு சாபம், பித்ரு தோஷம் ஏற்படக்கூடாது என்றாலும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம்.

- Advertisement -

பித்ரு சாபம் நீங்க செய்ய வேண்டிய வழிபாடு:
பித்ரு சாபம் நீங்க வேண்டும் என்றால் பெரிய அளவில் செலவு செய்து அவர்களுக்கு நாம் எந்த ஒரு பரிகாரத்தையும் தனியாக செய்ய வேண்டாம். தினமும் விளக்கு ஏற்றி குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யக்கூடிய தருணத்தில், வாழ்ந்து மறைந்த முன்னோர்களையும் ஒரு முறை நினைவு கூற வேண்டும்.

இப்படி தினமும் அவர்களை நினைத்துக் கொண்டாலே, அவர்களுடைய மனம் குளிரும். அவர்கள் தெய்வமாக நின்று உங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுவார்கள். (நீங்கள் அவர்களை மறந்து விட்டாலும், அவர்கள் உங்கள் மீது கோபப்பட போவது கிடையாது. ஆனாலும், நம்மை இவர்கள் நினைக்க மறந்து விட்டார்களே! என்ற அவர்களின் ஏக்கம் தான் நமக்கு சாபமாக மாறுகிறது). மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை திதி, வருடத்தில் அவர்கள் இறந்த திதி அன்றும், அவர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணத்தை சரியான முறையில் செய்து வர வேண்டும்.

- Advertisement -

இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதையும் தாண்டி ஒரு அறிய தகவலை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் இறந்தவர்களின் திருவுருவப்படம் இருந்தால், அதை கவனிக்காமல் அப்படியே ஒரு மூலையில் போட்டு வைக்கக் கூடாது. மறைந்த முன்னோர்களின் படம் உடைந்து இருக்கக் கூடாது. அந்த படத்தில் தூசு தும்புகள் நிறைந்து இருக்கக் கூடாது. சுத்தமாக துடைத்து இறந்தவர்களுடைய திரு உருவப்படத்தை பராமரித்து வர வேண்டும்.

அந்த திருவுருவப்படத்திற்கு மல்லிகை பூ, வாங்கி போட்டு 1 டம்ளர் தண்ணீரை வைத்து, ஒரு ஊதுவத்தியை தனியாக ஏற்றி வைத்து வணங்க வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அந்த பூக்களை மாற்றிக் கொள்ளுங்கள். எப்போதும் மல்லி பூ கிடைக்காது. மல்லிப்பூ சீசனில் கிடைக்கும் போது, இந்த மல்லி பூவை இறந்தவர்கள் படத்திற்கு கட்டாயம் வாங்கிப் போட்டு வழிபாடு செய்தால், முன்னோர்களை நினைவு கூர்ந்தால் அவர்களுடைய மனம் குளிரும். மல்லிபூ வாசத்திற்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் நிச்சயம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் நினைத்தவை யாவும் நினைத்தவுடன் உங்களை வந்தடைய ஒரு டம்ளர் பாலை இந்த மரத்தடியில் ஊற்றி வந்தால் போதும். உங்கள் தலையெழுத்தையே மாற்றக் கூடிய சக்தி இந்த ஒரு டம்ளர் பாலிற்கு உண்டு.

பித்ரு தோஷம், பித்ரு சாபம் உங்கள் குடும்பத்திற்கு இருந்தால் கூட அந்த தாக்கத்திலிருந்து, அந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட இந்த மல்லி பூ பரிகாரமும் நல்லதொரு வழியை காட்டித் தரும். பித்ரு சாபத்தால் தான் எங்கள் குடும்பத்தில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்றால், மல்லி பூவை வாங்கி தொடர்ந்து 48 நாள் அந்த இறந்தவர்களுடைய படத்திற்கு போட்டு 1 டம்ளர் தண்ணீரை தினமும் மாற்றி வைத்து, அவர்களை மனதார நினைத்து வழிபாடு செய்துதான் பாருங்கள். தீராத அந்த துயரத்திற்கு கூட தீர்வு கிடைக்கும். அப்படி ஒரு சக்தி வாய்ந்த வழிபாடு தான் இது. மிக மிக எளிமையான வழிபாடு. எல்லோராலும் செய்யக்கூடிய வழிபாடு. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் விஷயங்களை பின்பற்றி பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -