நீங்கள் நினைத்தவை யாவும் நினைத்தவுடன் உங்களை வந்தடைய ஒரு டம்ளர் பாலை இந்த மரத்தடியில் ஊற்றி வந்தால் போதும். உங்கள் தலையெழுத்தையே மாற்றக் கூடிய சக்தி இந்த ஒரு டம்ளர் பாலிற்கு உண்டு.

man milk
- Advertisement -

மனிதனின் எண்ண ஆற்றலானது எண்ணற்ற சக்திகளை கொண்டது. ஒரு மனிதன் எதுவாக மாற வேண்டும் என்று நினைக்கிறானோ அதுவாகவே மாற பிரபஞ்சம் அருள் செய்யும் என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு முதலில் நாம் எதுவாக மாற வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். அதை நோக்கியே நம்முடைய பயணத்தையும் தொடங்க வேண்டும். நம்முடைய இந்த எண்ண ஆற்றலை பிரபஞ்சத்தில் கொண்டு சென்று நம்முடைய வாழ்க்கையை மேலும் வளர்ச்சி அடைய செய்ய இந்த பரிகாரம் பெரிதாக உதவி செய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த பதிவில் இந்த தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய ஆழ்மனம் எப்போதும் எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கும். அதில் நல்லதும் கெட்டதும் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் எந்த எண்ணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அந்த எண்ணம் தான் பிரபஞ்சத்திடம் சென்றடைந்து உங்களுக்கான பலனாக மாறும். எனக்கு கடன் பிரச்சினை நிறைய இருக்கிறது, பண பிரச்சினை இருக்கிறது எப்போதும் பிரச்சினை குறித்தே யோசித்துக் கொண்டிருந்தால் மேலும் அது தொடருமே அன்றி குறையாது.

- Advertisement -

இந்த கடனை நான் அடைத்து விடுவேன், நான் நல்ல நிலைக்கு மாறி விடுவேன், நான் இதை செய்து முடித்து விடுவேன் என்பது போன்ற நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் போது, இந்த எண்ணங்கள் பிரபஞ்சத்தில் சென்று நமக்கானதாக அது திரும்பத் தரும் என்று சொல்லப்படுகிறது. இப்போது நான் எண்ணங்கள் ஈடேற கூடிய இந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நினைத்தது நிறைவேற பரிகாரம்
இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டும். அதற்கு ஒரு டம்ளர் காய்ச்சாத பாலை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு கண்ணாடி டம்ளர் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் மற்ற எந்த டம்ளர் பயன்படுத்தி கூடாது. இந்த பாலை நீங்கள் இரவு உறங்கும் போது உங்கள் தலை பக்கத்தில் கை படாதவாறு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலையில் தூங்கி விழித்தவுடன், குளித்து முடித்த பிறகு இந்த பாலை ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அல்லது கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த பாலை கொண்டு சென்று கருவேல மரத்தின் அடியில் ஊற்ற வேண்டும். இந்த மரத்தின் அடியில் எண்ணற்ற கிராம தேவதைகள் வாசம் செய்வதாகவும், நவகிரகங்களின் நட்சத்திர மரங்களில் இந்த மரமும் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் பாலை ஊற்றும் போது உங்களுடைய எந்த எண்ணம் ஈடேற வேண்டும் என்பதும் வேண்டிக் கொள்ள வேண்டும். இதை செய்யும் போது ஒரே ஒரு ஊதுபத்தியை மட்டும் இங்கு ஏற்றி வைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுங்கள்.

இந்த ஒரு டம்ளர் பாலை தினமும் நீங்கள் இரவு தலை பக்கத்தில் வைத்து படுக்கும் போது உங்களுக்கு தெரியாமல் உங்களிடம் இருக்கும் எதிர் எண்ணங்களை எல்லாம் இது ஈர்த்துக் கொண்டு நேர் மறை எண்ணங்களை தந்து உங்களை வாழ்க்கையின் உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பது தான் இந்த தாந்திரீக பரிகாரத்தின் முக்கிய நோக்கம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் அதிர்ஷ்டம் தரும் ஒலிகள் என்னென்ன? இந்த சத்தம் எல்லாம் வீட்டில் கேட்டால் துரதிஷ்டம் நீங்கி அதிர்ஷ்ட கதவு திறக்குமாம்!

இந்த பரிகாரத்தை எத்தனை வாரம் செய்ய வேண்டும் என்ற கணக்கு கிடையாது. உங்கள் எண்ணங்கள் ஈடேற ஈடேற ஒவ்வொரு வேண்டுகோளாக வைத்துக் கொண்டே கூட சொல்லலாம். இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் இதை செய்து கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -