பித்ரு தோஷ பரிகார கோயில்

- Advertisement -

ஜாதகத்தில் பித்ரு சாபம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்லி பலரும் கேட்டிருப்பார்கள். பித்ருக்கள் என்றால் சமஸ்கிருத மொழியில் முன்னோர்கள் என்பது பொருள். முன்னோர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்கள் மறைந்த பின்பும் சரி அவர்களது சந்ததியினர் மீது அவர்களுக்கு ஏற்பட்ட மன வருத்தங்களே பித்ரு சாபமாக மாறுகிறது. ஜாதகத்தில் ஏற்படுகின்ற இத்தகைய பித்ரு சாபங்கள் நிவர்த்திக்குரிய பரிகார தலங்கள் நாடு முழுவதும் பல உள்ளன. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க பித்ரு தோஷ பரிகார கோயில்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

பித்ரு தோஷம் நீங்க பரிகார கோயில்கள்

பித்ரு தோஷம் செய்யத் தகுந்த மிக சிறப்பான புனித தலங்களாக இருப்பது இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கின்ற வாரணாசி மற்றும் பீகார் மாநிலத்தில் இருக்கின்ற கயா ஆகும். இந்த இரண்டு தலங்களும் கங்கை நதிக்கரை தீரத்திலேயே அமைந்துள்ளதால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள், மறைந்த தங்களின் முன்னோர்கள் அருளாசி கிடைக்க, அவர்களுக்கு இந்த இரண்டு தளங்களிலும் பித்ரு தோஷ பூஜைகளை செய்கின்றனர். இங்கே நாம் முன்னோர்களுக்கே செய்கின்ற பித்ரு தோஷ பூஜை பலனாக முன்னோர்களின் சாபம் நீங்கி, நம் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

- Advertisement -

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ திரயம்பகேஸ்வரர் திருக்கோயில். இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக விளங்குகின்ற இந்த திரயம்பகேஸ்வரர் திருக்கோயிலில் ஒருவரின் ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பித்ரு தோஷங்கள் நீங்க பூஜைகள் செய்து வழிபாடு செய்வதால் பித்ரு தோஷம் நீங்கும்.

பித்ரு தோஷ நிவர்த்தி பூஜையை செய்வதற்குரிய மற்றொரு சிறந்த புனித தலமாக கர்நாடக மாநிலத்தில் இருக்கின்ற கோகர்ணம் ஸ்ரீ மகாபலேஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது. அரபி கடற்கரையோரம் அமைந்திருக்கின்ற புண்ணிய தலமான இத்திருக்கோயிலிலும் மறைந்த நம் முன்னோர்களுக்கான பித்ரு தோஷ நிவர்த்தி பூஜைகளை செய்து கொள்வதால் நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கின்ற கூத்தனூர் எனும் ஊருக்கு சற்று அருகில் அமைந்துள்ளது. சிதலபதி அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில். திருக்கோயிலின் இறைவனான சிவபெருமான் முக்தீஸ்வரர் என்கிற பெயரிலும், அம்பாள் பொற்கொடி நாயகி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர், தங்களின் ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பித்ரு தோஷங்கள் நீங்க இத்திருக்கோவிலுக்கு சென்று முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுவதால், பித்ரு சாப தோஷங்கள் நீங்கி வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: சனி தோஷ பரிகாரம்

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஸ்ரீவாஞ்சியம் அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி மங்கள அம்பிகை சமேத திருக்கோயிலிலும் நமது ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பித்ரு தோஷத்தை நீக்குவதற்குரிய பரிகார பூஜைகளை மேற்கொள்வதால் இத்ர தோஷம் நீங்கி சிவபெருமான் அம்பாள் அருளால் வாழ்வில் நற்பலன்கள் உண்டாகும்

- Advertisement -