பொன் பொருள் சேர பௌர்ணமி வழிபாடு

pournami4
- Advertisement -

இன்று சித்ரா பௌர்ணமி. அந்த பௌர்ணமி நிலவு போல உங்களுடைய வாழ்க்கையும் பிரகாசமாக மாற வேண்டும் என்றால், இன்று இரவு இந்த பரிகாரத்தை மறக்காமல் செய்து விடுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை இன்று இரவு நீங்கள் செய்துவிட்டால் போதும்.

அடுத்த நாளிலிருந்து உங்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் விடிவு காலம் பிறந்துவிடும், வீட்டில் வருமானம் பெருகும். வீட்டை பிடித்த தரித்திரம் விலகும். அடமானத்தில் வைத்திருந்த நகையை எல்லாம் சீக்கிரம் மீட்டு எடுக்கலாம். கடன் பிரச்சனை குறையும். அந்த அளவுக்கு பொருளாதார ரீதியாக எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க போகும் அந்த பரிகாரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பொன் பொருள் சேர பௌர்ணமி பரிகாரம்

ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக்கோங்க. அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ரூபாய் நாணயம், உங்களிடம் இருக்கும் தங்க நகை சின்ன மோதிரம், மூக்குத்தி எது இருந்தாலும் போடுங்க. வெள்ளியில் ஏதாவது நகை வைத்திருந்தாலும் அதை இந்த தண்ணீரில் போடவும். வெள்ளை நிற வாசம் நிறைந்த பூ ஒன்று.

ஒரே ஒரு மல்லி பூ, ஒரே ஒரு ஜாதி மல்லி இருந்தாலும் இந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். மாரியம்மன் நினைத்து ஒரு கொத்து வேப்ப இலையை உருவி இதில் போடுங்கள். இந்த டம்ளர் தண்ணீரை நிலவு ஒளி வரும் இடத்தில் வைக்க வேண்டும். உங்கள் வீட்டு மொட்டை மாடி, பால்கனி அல்லது ஜன்னல் பக்கம், நிலவு வந்தாலும் சரிதான்.

- Advertisement -

அந்த இடத்தில் இந்த டம்ளரை வைத்துவிட்டு இந்த டம்ளர் தண்ணீருக்கு முன்பாக அமர்ந்து நேர்மறையாக பிரார்த்தனை வையுங்கள். எங்களுடைய வீட்டில் பண வரவு, செல்வ வளம் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். நிறைய பணம் சேரனும். நிறைய தங்க நகைகள் சேரணும். வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கணும் என்று வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். 5 லிருந்து 10 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

ஜாக்கிரதையாக இந்த டம்ளர் தண்ணீருக்கு உள்ளே இருக்கும் நகைக்கு எந்த பிரச்சனையும் வராது என்றால் சிறிது நேரம் நிலவு ஒளியில் இந்த டம்ளர் அப்படியே இருக்கட்டும். 1 மணி நேரத்தில் இருந்து, 2 மணி நேரம் நீங்களும் அந்த நிலவு ஒளியில் இருக்கலாம். இந்த டம்ளர் தண்ணீரும் நிலவு ஒளியில் இருக்கட்டும். பிறகு நீங்க அந்த டம்ளர் தண்ணீரை வீட்டுக்குள் கொண்டு வந்து விடுங்கள். பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து இந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். நகைகளை எல்லாம் பத்திரமாக எடுத்து வைத்து விடுங்கள். கொஞ்ச தண்ணீரை எடுத்து நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். மீதம் இருக்கும் தண்ணீரை நாளைய தினம், புதன்கிழமை வீடு முழுவதும் இந்த தீர்த்தத்தை தெளித்து விடுங்கள்.

உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் எல்லாம் நீங்கி, உங்கள் வீடு சுபிட்சம் அடையும். அந்த சந்திர பகவானின் அருள் ஆசி உங்கள் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும். நீருக்குரிய கிரகம் சந்திரன். அந்த தண்ணீரை சித்ரா பௌர்ணமி தினத்தில், சந்திர பகவானின் நிலவு ஒளியில் வைத்துவிட்டு, பரிகாரத்திற்காக நாம் பயன்படுத்தும் போது உங்களுக்கு அபரிவிதமான பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: குடும்ப சந்தோஷத்திற்கு சித்ரா பௌர்ணமி வழிபாடு

அதில் ஒரு துளி கூட சந்தேகம் வேண்டாம். நம்பிக்கை உள்ளவர்கள் இன்று மாலை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நம்ப முடியாத நிறைய மாற்றங்கள் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -