பொங்கலுக்கு வாங்கிய கரும்பையும் மஞ்சளையும் இப்படி செய்தால் போதும். உங்கள் குடும்பத்திற்கு இந்த வருடம் சந்தோஷத்திற்கு ஒரு துளி அளவும் குறைவிருக்காது.

- Advertisement -

அனைவரது வீட்டிலும் இந்த வருட பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கும். பொங்கலுக்கு வாங்கிய கரும்பும், மஞ்சளும் வீட்டில் நிறைவாக இருக்கும். தை திருநாளான இந்த பொங்கல் அன்று, உங்களுடைய வீட்டில் எப்படி சந்தோஷம் பொங்கி வழிந்ததோ, அதே போல ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷத்தோடு இருக்க சுலபமான முறையில், ஆன்மீக ரீதியான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொங்கலுக்கு வாங்கிய கரும்பையும் மஞ்சளையும் வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

அளவில்லா சந்தோஷம் உங்கள் குடும்பத்தில் இருக்கும். இந்த உலகத்தையே காத்த காமாட்சியம்மன் நிரந்தரமாக உங்கள் வீட்டில் அமர்ந்து நித்தம் நித்தம் உங்கள் குடும்பத்திற்கு தேவையான நல்லதை பார்த்து பார்த்து செய்து கொடுப்பாள். அப்படிப்பட்ட பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்பிக்கையோடு உங்களுடைய வீட்டில் இந்த வருடம், இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். அடுத்த வருடத்திற்குள் நீங்களே எதிர்பார்க்காத பல நன்மைகள் உங்கள் வீட்டில் நடக்கும்.

- Advertisement -

காமாட்சியம்மன் தன்னுடைய கைகளில் வைத்திருக்கும் கரும்பை தான் இன்று நாம் எல்லோரது வீட்டிலும் இருக்கின்றது. மங்களத்திற்கு உரிய மஞ்சளும் வீட்டில் இருக்கின்றது. அதுவும் சுத்தமான பச்சையான மஞ்சள் கிழங்குகள். கரும்பில் இருந்து ஒரு சிறிய துண்டை எடுத்து, அதில் இருக்கும் ஈரப்பதம் போக வெயிலில் உலர வைத்துக் கொள்ளுங்கள்.

மஞ்சளையும் ஒரு சிறிய துண்டு எடுத்து ஈரப்பதம் போக உலர வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் ஒரு சிறிய மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டிக்கொள்ளுங்கள். இந்த முடிச்சை அப்படியே பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும். ஆணியில் மாட்டி தொங்க விட்டால் கூட போதும். (உங்களால் எப்போது முடிகிறதோ அப்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்தக் கிழமையில் இந்த நேரத்தில் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.)

- Advertisement -

தினமும் வீட்டில் தீபம் ஏற்றும் போது காமாட்சி அம்மனை நினைத்து தீபம் ஏற்றிவிட்டு, பூஜை அறையில் ஊதுவத்தி காண்பிக்கும் போது நீங்கள் கட்டி வைத்திருக்கும் மஞ்சள் முடிச்சுக்கும் ஊதுவத்தி காண்பித்து காமாட்சி அம்மனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் கட்டிய இந்த முடிசினை இந்த முடிவினை அடுத்த வருடம் வரக்கூடிய போகி அன்று தான் பூஜை அறையில் இருந்து எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அடிக்கடி எடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முடிச்சை அவிழ்க்க வேண்டாம். இந்த முடிச்சு உங்கள் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் நிச்சயமாக கஷ்டம் என்பது இருக்காது. பொங்கல் அன்று எத்தனை சந்தோஷத்தை, உங்கள் மனதில் நீங்கள் அனுபவித்தீர்களோ அதே அளவு சந்தோஷத்தை தினம் தினம் உங்களால் அனுபவிக்க முடியும். அந்த அளவிற்கு நன்மைகள் உங்களை தேடி வரும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நம்பமுடியாத எதிர்பாராத பல நன்மைகளை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -