பூஜை அறையில் இந்த சிலைகளை மட்டும் மறந்தும் கூட வைத்து வழிபடாதீர்கள். குடும்பத்திற்கு துன்பம் வந்து சேரும்.

- Advertisement -

வீட்டில் மற்ற இடங்களை விட, பூஜை அறைக்கு நாம் எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுப்போம். ஏனென்றால் பூஜை அறை என்பது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பெருக்கவும், மன நிம்மதியை அடையவும், குடும்பம் தழைக்கவும் நம்முடைய குடும்பத்தின் ஒவ்வொரு நலனுக்காகவும் இறைவனை வணங்கும் இடம்.  இதனாலே அந்த இடத்தை நாம் அதிகமான பராமரிப்புடன் வைத்திருந்து அங்கு இறை சக்தியை அதிகப்படுத்தி வைத்திருப்போம். ஆனால் அங்கு வைக்கும் ஒரு சில தெய்வ சிலைகளால் நம் குடும்பத்திற்கு நன்மைக்கு பதிலாக தீமை விளைவிக்கும் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பூஜை அறையில் மற்ற படங்களை வைத்திருந்தாலும் கூட, நம் குல தெய்வத்தின் படத்தை வைத்திருப்பது அவசியம். குலதெய்வ படத்தை மற்ற படங்களுக்கு மேல் பிரதானமாக வைத்து, அவர்களுக்கு என தனியாக ஒரு தீபம் ஏற்றி வணங்கும் போது குலதெய்வத்தின் அருளானது நம் வீட்டில் எப்போதும் நிலைத்திருக்கும்.

- Advertisement -

பூஜை அறையில் வைக்க கூடாத தெய்வங்கள்
இந்த பூஜை அறையில் நாம் விக்கிரகங்களை வைத்து வழிபடும் வழக்கங்களையும் வைத்திருக்கிறோம். இதை அனைவரும் வைத்து வழிபடுகிறார்களா என்றால் கிடையாது. விக்ரகங்களை வைத்து வழிபடுவதற்கு என்று சில வழிமுறைகள் உண்டு. அதை நாம் சரியாக கடைபிடிக்கா விட்டால், நம் குடும்பத்திற்கு நன்மையை தரக் கூடிய இந்த பூஜை அறையின் இறை சக்தியானது, துன்பத்தை தரும் சக்தியாக மாறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

பூஜை அறையில் நாம் பசுவுடன் கன்றும் இருக்கும் காமதேனு சிலை, அன்ன புராணி தாயார், மகா லட்சுமி தாயார், விநாயகர் போன்ற தெய்வங்களின் விக்கிரகங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த தெய்வங்களையும் நாம் ஒரு அங்குலம் அளவிற்கு தான் வைக்க வேண்டும். அதற்கு மேல் உள்ள தெய்வத்தை வைத்து வணங்க கூடாது.

- Advertisement -

இந்த தெய்வங்களை பெரிய விக்கிரகங்களாக வைத்து வணங்கும் போது அவற்றிற்கான வழிபாடுகளை முறையாக செய்ய வேண்டும். தினமும் அவர்களுக்கு பூஜை செய்து நெய்வேத்தியமும் படைத்து வணங்க வேண்டும். இதை சரியாக செய்ய முடிந்தால் மட்டுமே விக்ரகங்களை வைத்து வழிபட வேண்டும். விக்கிரகங்களை வாங்கி வைத்து அவற்றை சரியான முறையில் பூஜிக்கா விட்டால் நிச்சயம் அது நம் குடும்பத்திற்கு துன்பத்தை தேடி தரும்.

அதே போல பூஜை அறையில் நீங்கள் எத்தனை விளக்கு ஏற்றினாலும், கட்டாயமாக ஒரு அகல் விளக்கு ஏற்றி வாருங்கள். இத்துடன் குத்து விளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. ஒரு குத்து விளக்கு ஏற்றும் போது அங்கு முப்பெரும் தேவியரின் அருளும் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் திடீரென கெட்ட வாடை அடித்தால் என்ன பலன்? பொல்லாத திருஷ்டிகளும், பொறாமை கண்ணேறுகளும் நீங்க என்ன செய்யணும்?

இந்த பதிவில் பூஜை அறையில் எந்த தெய்வங்கள் வைத்து எப்படி வணங்குவது என்பதை குறித்து தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். உங்கள் வீட்டில் இது போல விக்கிரகங்களை வைத்து இருந்தால், இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதை போல் நீங்களும் பூஜித்து வழிபட்டு நல்ல வளமான வாழ்க்கை வாழுங்கள்.

- Advertisement -