பூஜை அறையில் நமக்கு தெரியாமலேயே வைத்திருக்கக் கூடிய இந்த 1 பொருள் உங்கள் பூஜைக்கான பலனை கெடுத்து விடும். உங்க வீட்டு பூஜை அறையில் இந்த பொருள் இருக்குதான்னு ஒரு முறை பாத்துக்கோங்க.

pooja-room-vilakku
- Advertisement -

நமக்கே தெரியாமல் நாம் செய்யக்கூடிய ஒரு சில தவறுகள் கூட நம்முடைய பூஜையின் பலனை நமக்கு முழுமையாக கொடுக்காது. உங்க வீட்டு பூஜை அறையில் பின் சொல்லக்கூடிய தவறுகளை நீங்கள் செய்து இருந்தால் அதை திருத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்க இந்த சில மாற்றங்களும் கை கொடுக்கும். இறை நம்பிக்கை உள்ளவர்கள், ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பின் சொல்லக் கூடிய விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

பொதுவாகவே பூஜை அறையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லுவார்கள். இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களை நாம் பூஜையறையில் வைக்க மாட்டோம். ஆனால் எவர்சில்வர் சம்பந்தப்பட்ட பொருட்களை பூஜை அறையில் பயன்படுத்துவோம். இன்றைக்கு வரக்கூடிய எவர்சில்வர் பாத்திரங்கள் இரும்பு கலந்த தான் விற்கப்படுகின்றது. உதாரணத்திற்கு ஊதுபத்தி ஸ்டாண்ட், காமாட்சியம்மன் விளக்குக்கு கீழே வைக்கக்கூடிய தட்டு, கிண்ணம், இப்படிப்பட்ட பொருட்களை எவர்சில்வரில் வைக்க வேண்டாம்.

- Advertisement -

அடுத்தப்படியாக இறைவனுக்கு நிவேதியம் வைப்பதற்கு, பால் வைப்பதற்கு எவர்சில்வர் டம்ளரை, தட்டை பயன்படுத்தக் கூடாது. பித்தளை, செம்பு, வெள்ளி, தங்கம், போன்ற பொருட்களை பயன்படுத்தலாம் எல்லோராலும் வெள்ளி பொருட்கள் தங்க பொருட்கள் வாங்க முடியாது. செம்பு பித்தளை பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துங்கள். எதுவுமே முடியவில்லை என்றால் வாழை இலையில் நெய்வேதியம் வைப்பது மிக மிக சிறப்பு. கிச்சன் படாத புது கண்ணாடி டம்ளரில் பால் நிவேதனமாக வைக்கலாம்.

காமாட்சி அம்மன் விளக்குக்கு கீழே வைப்பதற்கு ஒரு பித்தளையில் தாம்பல தட்டு சிறிய அளவில் வாங்கிக் கொள்ளுங்கள். வெள்ளி காமாட்சி அம்மன் விளக்காக இருந்தாலும் பித்தளை தட்டின் மேல் வைத்து ஏற்றலாம் தவறு கிடையாது. அடுத்தபடியாக பூஜை அறையில் எப்போதுமே சில இலைகளின் பச்சை வாசனை இருப்பது நிறைவான நேர்மறை ஆற்றலை உண்டு பண்ணும். உதாரணத்திற்கு வெற்றிலை இல்லாமல் இறை வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். வெற்றிலையின் மேல் விளக்கு வைத்து ஏற்றுவது சிறப்பான அற்புதமான பலன்களை நமக்கு கொடுக்கும்.

- Advertisement -

செம்பருத்தி இலையின் மேல் விளக்கு வைத்து ஏற்றுவதும் சிறப்பான பலன்களை கொடுக்கும். இப்படி இலைகளின் மேல் மண் அகல் விளக்குகளை வைத்து ஏற்றி வையுங்கள். வீட்டில் மன நிம்மதி ஏற்படும். அதேபோல மகாலட்சுமியின் பாதங்களில் எப்போதுமே ஐந்து மருதாணி இலைகள் இருக்கட்டும். இந்த இலைகள் காய்ந்தாலும் பரவாயில்லை. வாரத்திற்கு ஒருமுறை அதை மாற்றிக் கொள்ளலாம். மருதாணி இலைகளை தனித்தனியாக பறித்து ஒரு சின்ன மாலையாக கட்டி அதை மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு போடும்போது நம்முடைய வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும். மன நிம்மதி அதிகரிக்கும். கடன் படிப்படியாக குறைய தொடங்கும்.

இதோடு சேர்த்து வீட்டில் இருக்கும் பெண்கள் கையிலும் அந்த மருதாணியை கொஞ்சம் அரைத்து வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது அந்த பூஜையில் கிடைக்கக்கூடிய பலனும் இரட்டிப்பாக அதிகரிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பின்பற்றி பாருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -