உங்கள் வீட்டின் பூஜை அறையில் இதுபோன்ற செயல்களை தவறியும் செய்துவிடாதீர்கள். இவற்றை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்

poojai
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது முக்கியமான ஒரு இடமாகும். வீட்டில் சிறிய இடம் இருந்தாலும் அங்கு ஏதேனும் ஒரு சிறு பகுதியை பூஜை செய்வதற்காக கிழக்கு திசை நோக்கி வைத்திருப்பார்கள். இவ்வாறு அனைவரும் இறைவனை வணங்குவதற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அவ்வாறு இறைவழிபாடு செய்யும் பூஜை அறையை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு வீட்டில் பூஜை அறை மற்றும் சமையலறையை பார்த்து தான் அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள். அவ்வாறு நமது பூஜை அறை எப்படி சுத்தமாகவும், தெய்வாம்சம் பொருந்தியதாகவும் இருக்கிறதோ அதுபோல நமது வீடும், நமது முகமும் லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும். இதன் மூலம் ஐஸ்வர்யம் பெருகும், பணவரவு உண்டாகும். இவ்வாறு லக்ஷ்மி கடாட்ஷம் நிறைந்திருக்க பூஜை அறையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பு :1
ஒரு சிலர் தங்கள் பூஜை அறையில் பலவிதமான விளக்குகளை வைத்து தீபம் ஏற்றுவார்கள். அவை எத்தனை எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். தீபம் ஏற்றும் பொழுது அந்த தீபத்தின் ஒளி எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ அவ்வாறு அந்த வீடும் பிரகாசமாக இருக்கும். எனவே இதற்கு வைப்பதற்கான எண்ணிக்கைகள் என்று எதுவும் கிடையாது. ஆனால் பலவித விளக்குகள் வைத்தருப்பதோடு ஒரு அகல்விளக்கும் நிச்சயம் இருக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பு: 2
முதலில் இந்த அகல் விளக்கை ஏற்றிய பின்னரே மற்ற தீபங்களை ஏற்ற வேண்டும். அதுபோல சாம்பிராணி, ஊதுபத்தி, தசாங்கம் மற்றும் சூடம் இவை அனைத்தையும் இந்த அகல் விளக்கின் ஒளியில் இருந்து ஏற்றிக்கொள்ளலாம். ஆனால் தவறியும் காமாட்சி அம்மன் விளக்கில் இருந்து மற்ற அனைத்தையும் ஏற்றுவதென்பது தவறான செயலாகும்.

குறிப்பு: 3
வாரம் தோறும் பூஜை செய்து வழிபடும் பொழுது வெற்றிலை பாக்கு மற்றும் வாழைப்பழம் வைத்து வழிபடுவது அனைவரின் வழக்கமாகும். இந்த வெற்றிலை பாக்கும் இரட்டை படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அதன் மீது பெரும்பாலும் கொட்டைப்பாக்கு அல்லது நிஜாம் பாக்கு வைக்க வேண்டும். அதன் மீது வைக்கப்படும் வாழைப்பழம் காம்புடன் இருக்க வேண்டும். வெற்றிலையும் காம்புடன் இருக்க வேண்டும். வெற்றிலை பாக்கின் மீது எப்போதும் ஒரு மலரை அவசியம் வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

குறிப்பு: 4
பூஜைக்காக தேங்காய் உடைக்கும் பொழுது அந்தத் தேங்காயை எந்த திசையில் எப்படி வைக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் உண்டு. 3 கண் இருக்கும் பகுதி தேங்காயை இறைவனின் வலது புறமும், நமக்கு இடது புறமாகவும் வைக்க வேண்டும். மற்றொரு பகுதியை இறைவனின் இடது புறமும், நமக்கு வலது புறமாக இருக்கும்படி வைத்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: 5
அனைவரது வீட்டிலும் கஜலட்சுமி அல்லது காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுவது வழக்கமாகும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கிற்கு அடியில் ஒரு தட்டு வைத்து, அதன் மீது மஞ்சள் அரிசி மற்றும் மலர்கள் வைத்து ஏற்ற வேண்டும். ஏனென்றால் அம்மனை எப்பொழுதும் சிம்மாசனத்தில் மட்டுமே அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வர நமது குடும்பத்திற்கு எப்போதும் நன்மை மட்டுமே நடக்கும்.

- Advertisement -