செய்யும் பூஜையில் முழுமையான பலனை பெற பரிகாரம்

poojai
- Advertisement -

தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் தினம்தோறும் சாமி கும்பிடுவாங்க. தன்னுடைய கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று மனைவி தினம் தோறும் சாமி கும்பிடுவாங்க. இப்படித்தான் நம் மனசுக்கு பிடித்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று, நாம் வேண்டுதல் வைப்பதும், பூஜை செய்வதும் வழக்கமாக இருக்கு.

ஆனால் அடுத்தவர்களுக்காக இப்படி நாம் வைக்கக்கூடிய வேண்டுதல், முழு பலனையும் பெற, நம்முடைய வேண்டுதல் முழுசாக நிறைவேற வேண்டும் என்றால், அந்த பூஜையில் கட்டாயம் இந்த ஒரு பொருள் இருக்கணும். அது என்ன பொருள். இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஆன்மீகம் சார்ந்த ஒரு புத்தம் புதிய அரிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பூஜையில் முழு பலனும் கிடைக்க

பொதுவாகவே அடுத்தவர்கள் மனதார செய்யும் ஆசீர்வாதத்துக்கு அதிக சக்தி உண்டு என்று சொல்லுவார்கள் பெரியவர்கள். நாலு பேர் வாயால், நல்லா இரு என்ற ஆசீர்வாதம் கிடித்தாலே போதும் நாம வாழ்க்கையில் நல்லா இருந்திடலாம். இதனால் தான் திருமணம் காதுகுத்து வளைகாப்பு போன்ற நல்ல விசேஷங்களில் ஆசீர்வாதம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்த ஆசிர்வாதம் செய்ததில் முக்கியமாக இருக்கக்கூடிய பொருள் அட்சதை. நாம் நினைத்திருக்கின்றோம் வெறும் கல்யாணத்துக்கு மட்டும் தான் அர்ச்சதை போட்டு ஆசீர்வாதம் செய்வார்கள் என்று. அப்படி கிடையாது, எல்லா நல்ல காரியத்திற்கும் ஆசிர்வாதம் பண்ணும் போது அட்சதை தேவை. நம் வீட்டிலேயே ஒரு சின்ன கிண்ணத்தில் எப்போதும் அட்சதையை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கொஞ்சம் பச்சரிசியில் மஞ்சள் தூள் கொஞ்சமாக நெய் விட்டு கலந்தால் அட்சதை தயாராகிடும். வீட்டு பெரியவர்கள் காலில் யாராவது விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் அவர்களுடைய கையில் இந்த அட்சதையை கொடுத்து ஆசீர்வாதம் செய்ய சொல்லுங்கள். அது ரொம்ப ரொம்ப நல்லது. சரி இப்போது பதிவுக்கு வருவோம்.

உங்கள் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், சோம்பேறித்தனத்தை எல்லாம் விடுத்து விட்டு, சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், அவனுடைய திறமை ஏதாவது ஒரு ரூபத்தில் வெளிவர வேண்டும் என்று சாமி கும்பிடுறீங்க. கொஞ்சம் நல்லா வளர்ந்த பிள்ளையாக இருந்தால் நல்ல வேலை கிடைத்து நல்ல திருமணம் வாழ்க்கை அமைய வேண்டும் என்று சாமி கும்பிடுவீங்க.

- Advertisement -

உங்க பிள்ளை சாமி எல்லாம் கும்பிட மாட்டாங்க. அவங்களுக்கு அதில் நம்பிக்கையும் கிடையாது. உங்க பிள்ளைக்காக நீங்க வேண்டுதல் வைக்கிறீங்க. தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உங்கள் கையில் சிறிது அச்சதையே வச்சுக்கோங்க. உங்க பிள்ளை எப்படி எல்லாம் வாழ்க்கையில் நல்ல முன்னேறனுமோ அப்படி எல்லாம் சாமிகிட்ட சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

கையில் இருக்கும் அட்சதையே கொண்டு போய் உங்கள் பிள்ளையின் தலைமீது போட்டு ஆசீர்வாதம் பண்ணிருங்க. அவ்வளவு தாங்க, தினமும் இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே உங்களுடைய வேண்டுதல் கூடிய சீக்கிரம் நிறைவேறிவிடும். உங்கள் கணவருக்காக தினமும் வேண்டிக்கிட்டு வழிபாடு செய்தாலும், உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் யாருக்காக நீங்கள் வேண்டுதல் வைத்தாலும், அந்த வேண்டுதலை முடித்துவிட்டு அந்த அட்சதையை அவர்கள் தலையில் போட்டு விட்டால் போதும்.

இதையும் படிக்கலாமே: 3.3.2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு

அவர்களுக்கான நல்லது கூடிய சீக்கிரத்தில் நடந்து விடும். உங்களுடைய வேண்டுதலும் சீக்கிரத்தில் பலித்து விடும். இவ்வளவு தாங்க, ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -