3.3.2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு

bairavar
- Advertisement -

பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் பைரவர் வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. நாளைய தினம் 3.3.2024 ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை அஷ்டமி திதியும் வந்திருக்கிறது. ஆகவே இந்த நாள் மிக மிக சிறப்பு வாய்ந்த நாள். எதிரி தொல்லை விலக, கடன் தொல்லை நீங்க, கண்திருஷியில் இருந்து விடுபட, நாளைய தினம் எல்லோரும் பைரவர் கோவிலுக்கு சென்று அவரை வழிபாடு செய்ய வேண்டும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை. மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகுகால நேரம். இந்த நேரத்தில் பைரவருக்கு நிச்சயம் எல்லா சிவன் ஆலயங்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கும். தவறாமல் அங்கே சென்று கலந்து கொண்டு உங்கள் வழிபாட்டை மேற்கொள்ளவும். இதோடு சேர்த்து, ரொம்பவும் கடன் பிரச்சனை உள்ளவர்கள் நாளைய தினம் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றியும் இப்போது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கடன் தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

இந்த வழிபாட்டை நாளைய தினம் ராகு கால நேரத்தில் செய்ய வேண்டும். அதாவது நாளை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் இதை செஞ்சிருங்க. முடியாதவர்கள் இரவு 9:00 மணிக்குள்ளாவது இந்த வழிபாட்டை செய்யணும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பரிகாரத்திற்கு எட்டு, 1 ரூபாய் நாணயங்கள் தேவை.

அதை முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சதுர வடிவில் இருக்கும் சிவப்பு நிற துணி தேவை. புது துணியை வெட்டி எடுத்து தண்ணீரில் அலசி காய போட்டு வச்சுக்கோங்க. ஒரு தாம்பல தட்டின் மேல் அந்த துணியை விரித்து இந்த எட்டு நாணயங்களையும் வைக்க வேண்டும். பைரவரை மனதார நினைத்துக் கொண்டு ‘ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிட்டு அந்த துணியை முடிச்சு போட்டுக்கோங்க.

- Advertisement -

சிறிது நேரம் அந்த முடிச்சை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, காலபைரவரை நினைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம், கடன் சுமை எல்லாம் சீக்கிரம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, அதிகமாக உங்கள் வீட்டில் பணப்புழக்கம் இருக்க கூடிய இடத்தில் இந்த முடிச்சை வைத்து விட வேண்டும். அடுத்த தேய்பிறை அஷ்டமி வரை இந்த முடிச்சு அப்படியே இருக்கட்டும்.

அடுத்த தேய்பிறை அஷ்டமி வரும் போது இந்த முடிச்சில் இருக்கும் நாணயங்களை கழட்டி, அந்த நாணயத்தோடு இன்னும் கொஞ்சம் காசு போட்டு, பைரவருக்கு அரளிப்பூவோ அல்லது வேறு ஏதாவது பூஜை பிரசாதமுமோ வாங்கிக் கொண்டு போய் கொடுத்து விடுங்கள். முடிந்தால் இந்த காசோடு இன்னும் கொஞ்சம் காசு போட்டு புனுகு வாங்கி பைரவர் கோவிலுக்கு கொடுப்பது ரொம்ப சிறப்பான பலனை தரும்.

- Advertisement -

இதே போல தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி திதியில் எட்டு, 1 ரூபாய் நாணயங்களை பைரவரை நினைத்து முடிச்சு போட்டு பீரோவில் வைத்தால் உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீரும்‌. கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை. கடன் தீரும் வரை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க வராகி அம்மன் பூஜை

ஒரு மாதம் செய்யும்போதே உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல மாற்றம் தெரியும். பைரவரின் பாதத்தை நம்பிக்கையோடு பற்றி கொண்டவர்களுக்கு நிச்சயம் தோல்வி கிடையாது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -