இத்தனை நாட்கள் பூஜை செய்தும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லையா? பலநாள் பூஜை செய்த பலனை, ஒரே நாளில் இறைவனிடமிருந்து பெற இதுவும் ஒரு வழி.

poojai
- Advertisement -

நிறைய பேருக்கு இந்த வருத்தம் மனதிற்குள் இருக்கும். ‘நான் இறைவனை அன்றாடம் வழிபாடு செய்கின்றேன். நம்பிக்கையோடு நினைத்து தினந்தோறும் பூஜை செய்தும் எனக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் தோல்வி ஒன்று மட்டுமே நிரந்தரமாக இருக்கின்றது. துன்பத்தைத் தவிர சந்தோஷத்தை அனுபவிக்க கூட முடியவில்லை.’ இப்படி பட்ட கஷ்டம் உங்களுக்கும் இருந்தால், உங்களுக்காகவே சொல்லப்பட்டுள்ள பதிவுதான் இது. ஆன்மீக ரீதியாக நாம் செய்யும் பூஜையில் பலன் கிடைக்கவில்லை என்றால் அந்த இறைவனின் பார்வையை நம்மேல் விழச்செய்து வரங்களைப் பெற்றுக் கொள்வது எப்படி? தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

poojai1

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவார்கள். இந்த வார்த்தை முழுக்க முழுக்க உண்மையானது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளின் கையால் பூஜை செய்பவர்களுடைய வீட்டில் கஷ்டம் என்பது நிச்சயமாக இருக்காது.

- Advertisement -

காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ குழந்தைகளுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது அவர்களுடைய கையாலேயே வீட்டில் பூஜை செய்யச் சொல்ல வேண்டும். அதாவது தாய் தந்தையரும் உடன் இருக்க வேண்டும். மற்ற வேலைகளை பெரியவர்கள் செய்தாலும், ஒரு சிறிய தீபத்தை ஏற்றி அவர்களது கையில் கொடுத்து விடுங்கள். அந்தத் தீபத்திலிருந்து பூஜை அறையில் இருக்கும் தீபத்தை ஏற்ற வைத்து, உங்களுடைய வீட்டில் அந்த குழந்தையை பூஜை செய்யச் சொல்லவேண்டும்.

poojai

ஒரு வீடு என்று இருந்தால் கட்டாயமாக காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ தீப வழிபாடு கட்டாயம் மேற்கொள்வார்கள். வீட்டில் இறை வழிபாடு செய்யும் போது அந்த சமயத்தில் குழந்தைகள் கட்டாயம் இருக்க வேண்டும். குழந்தைகள் செய்யும் பூஜைக்கு நிச்சயமாக உடனடி பலனை அந்த ஆண்டவன் மறுக்காமல் கொடுத்து விடுவான். அதோடு மட்டுமல்லாமல் அந்த குழந்தைகளுக்கு இறைவழிபாடு செய்ய வேண்டும் என்ற பழக்கமும் சிறுவயது முதலே வர தொடங்கும்.

- Advertisement -

சரி, உங்களுடைய வீட்டில் குழந்தைகள் இல்லை. என்ன செய்வது. எல்லோரும் வளர்ந்து விட்டார்கள். பரவாயில்லை, உங்களுடைய அக்கம்பக்கம் வீட்டில் இருக்கும் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஒரு நாள் அவர்களை உங்களுடைய வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு ஏற்ற வஸ்திரங்களை தானமாக கொடுத்து, அந்த குழந்தைகளுக்கு பாதபூஜை செய்து, அந்தக் குழந்தையை உங்களுடைய வீட்டில் தீபம் ஏற்றி பூஜை செய்யச் சொல்வதும் நல்ல பலனை கொடுக்கத்தான் செய்யும்.

poojai

பல நாட்கள் பூஜை செய்தும் பலன் இல்லை என்று நினைப்பவர்கள், உங்கள் வீட்டு வழிபாட்டு முறையில் இதை மட்டும் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலனை உடனடியாக அந்த ஆண்டவன் கொடுப்பான் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -