உங்க வீட்டு பூஜை அறை இப்படி தான் இருக்கா? இருந்தால் நிச்சயம் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா?

vilakku-kalkandu
- Advertisement -

ஒரு வீட்டில் மற்ற அறைகளை விடப் பூஜை அறை பிரதானமானது. பூஜை அறையாக இல்லாவிட்டாலும் பூஜை செய்வதற்கு என்று தனியான ஒரு இடம் இருந்தால் கூட அவ்விடம் மிகவும் தூய்மையாகவும், தெய்வீக மணம் கமழும் படியும் வைத்திருப்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும் ஒரு அற்புத செயலாகும். இத்தகைய பூஜை அறை எப்படி இருப்பது நமக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்? எவரும் வெல்ல முடியாத பாக்கியசாலியாக பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

vilakku1

சாஸ்திர சம்பிரதாயப்படி ஒருவருடைய வீட்டில் காலை, மாலை இரண்டு வேளையும் குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் விளக்கு எரிகிறது எனில் அந்த வீட்டில் நிச்சயம் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு! இருப்பினும் அவற்றை நம்மால் கடைப்பிடிக்க முடியாது எனும் பட்சத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான காலகட்டத்தில் எப்பொழுதும் பூஜையறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அதன் பின் விளக்கினை அணைத்து விடலாம்.

- Advertisement -

அதே போல மாலையிலும் 6 மணியிலிருந்து 7 மணி வரை விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அவ்வீட்டில் எவ்விதமான சண்டை, சச்சரவுகளும் நிகழாது. மேலும் குடும்பத்தில் எந்த விதமான சுபகாரியத் தடைகள் உண்டாகாமல் நமக்கு நிரந்தரமாக மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும். ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காக கொஞ்ச காலம் செய்வது, சரியாகக் கடைப் பிடிக்காமல் இருப்பது என்று இருந்தால் அதில் எந்த பயனும் இல்லை. எப்பொழுதும் முழுப் பக்தியுடன், இறைவனை நினைந்து காலை, மாலை விளக்கேற்றி வர அத்தனை பாக்கியங்களும் உண்டாகும்.

thulasi-theertham

அப்படி நீங்கள் விளக்கு ஏற்றும் வேளையில் கட்டாயம் அந்த இடத்தில் விளக்கிற்கு அருகில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். அதில் துளசி இலை, பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை நீங்கள் சேர்ப்பது இன்னும் சிறப்பு. இவை பணத்தை ஈர்க்கும் அற்புத சக்திகளாக இருக்கின்றது. அதே போல விளக்கேற்றும் பொழுது நைவேத்தியம் படைக்க வேண்டும். இதற்காக நாம் மெனக்கெட்டு எதையும் செய்யத் தேவையில்லை.

- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் கல்கண்டு, முந்திரி, உலர் திராட்சை போன்ற ஏதாவது ஒன்றை வைத்தால் கூட போதும். விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு ஏற்றுவது செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது. பூஜை அறையில் பஞ்சபூதங்களும் நிறைந்து இருக்குமாறு நாம் செய்து விட்டு பின்னர் விளக்கு ஏற்றுவது தான் நல்லது. நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களும் இணையும் இடத்தில் தான் தெய்வம் ஆகர்ஷணம் ஆகிறார்.

kalkandu

எனவே விளக்கு ஏற்றி பக்கத்தில் தண்ணீரை வைத்து, நைவேத்தியம் படைத்து, காலை, மாலை இரண்டு வேளையும் நீங்கள் சதா சர்வகாலமும் தொடர்ந்து செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு எவ்விதமான தோல்வியும் ஏற்படாது. வாழ்வில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். சுகபோக வாழ்க்கை அமையும். சுபகாரியத் தடைகள் விலகும். மனசஞ்சலங்கள், குழப்பங்கள், மன உளைச்சல் எதுவும் ஏற்படாது. இறை சிந்தனை முழுமையாக இருப்பவர்களுக்கு என்றும் தோல்வி இல்லை.

- Advertisement -