கடுமையான கண் திருஷ்டியையும் கலங்கடிக்க செய்யும் பூண்டு! உங்களை அழிக்க நினைப்பவர்களை அழிக்கும் அற்புத சக்தி இதற்கு உண்டு தெரியுமா?

poondu-milagai-thirusti
- Advertisement -

கடுமையான கண் திருஷ்டி ஒருவரை என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? சாதாரணமாக ‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது’ என்று திருஷ்டியை பற்றி ஒரு பழமொழி பரவலாக கூறப்படுவதை கேட்டிருப்போம். கல்லால் அடிக்கும் வலியை விட, ஒருவர் நம்மை பார்க்கும் தீய பார்வைகள் அதிக வலியை கொடுக்கும் என்பது இதன் அர்த்தம் ஆகும். அடுத்தவர்களின் பொறாமை எண்ணத்தை ஒழித்துக் கட்டக்கூடிய சக்தி இந்த பூண்டிற்கு உண்டு. கடுமையான கண் திருஷ்டியை கலங்கடிக்க செய்யக்கூடிய பூண்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்கிற ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

பொதுவாக திருஷ்டிகள் அமாவாசை தோறும் கழிக்கப்பட வேண்டும். கடை வைத்திருப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் அல்லது தொழில் நடத்துபவர்கள், அலுவலகம் வைத்து நடத்துபவர்கள் போன்றவர்கள் கட்டாயம் அமாவாசை தோறும் தேங்காய், எலுமிச்சை பழம், பூசணிக்காய் என்று வரிசையாக திருஷ்டி சுற்றி போட வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் சகல விதமான கண் திருஷ்டி கோளாறுகளும், செய்வினைகளும் விடுபடும். இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், தொடர்ந்து செய்து வருவது உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு நல்லது.

- Advertisement -

அதே போல குடும்பத்திலும், குறிப்பிட்ட நபர்களின் தனிப்பட்ட விஷயத்திலும் நிறையவே திருஷ்டிகள் ஏற்படுவது உண்டு. புதிதாக ஒரு பொருள் வாங்கினால் கூட நண்பர்களும், உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் நம்மை பார்த்து கண் வைப்பது உண்டு. இது போல நாம் நன்றாக இருப்பதை மற்றவர்கள் எப்போதும் விரும்புவதில்லை எனும் பொழுது கண்டிப்பாக வாரம் தோறும் குடும்பத்திற்கும், உங்களுக்கும் திருஷ்டி சுற்றிக் கொள்வது ரொம்பவும் நல்லது.

திருஷ்டி சுற்றுவது என்பது மற்றவர்களிடமிருந்து எதிர்மறை ஆற்றல்கள் நம்மை ஆட்கொள்ளாமல் இருக்க நாம் நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளையமாக கருதப்படுகிறது. திருஷ்டிகள் கழிந்தால் நமக்குள் இருக்கும் அந்த உத்வேகம் குறையாமல் தொடர்ந்து அப்படியே இருக்கும். இதனால் நாம் அடைய நினைக்கும் இலக்கை சுலபமாக அடைந்து விடலாம். நடுவில் எந்த விதமான இடையூறுகளும் இல்லாமல் இருக்க இது போல அடிக்கடி திருஷ்டிகள் சுற்றி போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கடுமையான கண் திருஷ்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லங்களில் எப்பொழுதும் ஒரு விதமான நெகட்டிவ் வைப்ரேஷன் இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும், சம்பாதித்த பணம் கையில் நிலைக்காமல் போகும். அடிக்கடி மருத்துவமனைக்கு செலவு செய்வது அல்லது ஏதாவது ஒரு வழியில் பணம் விரயமாகி கொண்டிருக்கும். மேலும் ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் விரிசல் விழ ஆரம்பிக்கும். உடல்நல கோளாறுகள் மட்டுமல்லாமல், மனநல கோளாறும் அதிகரிக்க துவங்கும். எனவே இது போன்றவர்கள் 7 பற்கள் கொண்ட வெள்ளைப் பூண்டை வாங்கி வந்து வையுங்கள்.

ஒரு பூண்டில் ஏழு பற்கள் மட்டும் இருக்க வேண்டும். இந்த பூண்டுடன் ஏழு நீட்டு மிளகாய் என்று சொல்லப்படும் வரமிளகாயை காம்புடன் சேர்த்து அப்படியே ஒரு நூலில் கட்டிக் கொள்ளுங்கள். இதை வீடு, கடை, அலுவலகம், தொழில் செய்யும் இடம் எங்கு உங்களுக்கு திருஷ்டிகள் கடுமையாக இருக்கிறதோ, அங்கு வாசலில் கட்டி தொங்கவிட்டு விடுங்கள். இதை அடிக்கடி மாற்ற வேண்டாம், 48 நாட்களுக்கு ஒரு முறை இதை கால்படாத இடத்தில் தூக்கி எறிந்து விட்டு, வேறு ஒன்றை மாட்டி வைத்து விடுங்கள். இதனால் கடுமையான கண் திருஷ்டிகள் நீங்கி, நன்மைகள் வர துவங்கும். பொல்லாத திருஷ்டிகளுக்கு ரொம்பவே சக்தி உள்ள எளிய பரிகாரம் இது!

- Advertisement -