நீங்கள் கடனாக கொடுத்து ஏமாந்த பணத்தை வெறும் 15 நாட்களில் திரும்ப வாங்கி விடலாம். இந்த 1 இலையை மட்டும் தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டு வந்தால் போதும்.

amman2.
- Advertisement -

நம்பி தான் நமக்குத் தெரிந்தவர்களுக்கு பணத்தை கடனாக கொடுக்கின்றோம். ஏதோ ஒரு கெட்ட நேரம், கொடுத்த பணத்தை நம்மால் திரும்பவும் வசூல் செய்ய முடியவில்லை. கைநீட்டி வாங்கியவராலும் சூழ்நிலை காரணமாக கடனை திருப்பித் தர முடியவில்லை. என்ன செய்வது. அதற்காக கொடுத்த கடனை திருப்பி கேட்காமல் இருக்க முடியுமா. நமக்கென்று சில தேவைகள் இருக்கும் அல்லவா. அது நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அல்லவா. நம்மிடம் கைநீட்டி வாங்கியவருக்கும் பிரச்சனை தீர வேண்டும். நமக்கும் பிரச்சனை தீர வேண்டும். நம்மிடம் கைநீட்டி கடன் வாங்கியவருடைய மோசமான நிலைமை மாறி, அவரே பணத்தைக் கொண்டு வந்து திருப்பி தரும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

நீங்கள் கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் உங்கள் கைக்கு திரும்பி வர செய்ய வேண்டிய பரிகாரம். ஒரே ஒரு இலை பரிகாரம். இந்த இலையை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து, அந்த இலையில் நீங்கள் யாரிடம் கடன் கொடுத்தீர்களோ, அந்த நபரின் பெயரையும், எவ்வளவு தொகை உங்களுக்கு வர வேண்டுமோ அந்த தொகையையும் எழுதி விட்டால் போதும். 15 நாட்களுக்குள் வாரா கடன் வசூலாக கூடிய வாய்ப்புகள் உள்ளது. அது என்ன இலை. அது என்ன பரிகாரம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

வாரா கடனை வசூல் செய்ய பூவரச இலை பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு பூவரச இலை கட்டாயம் தேவை. அந்த இலையை வீட்டிற்கு எடுத்து வந்து தண்ணீரில் லேசாக கழுவி ஈரத்தை காய வைத்து விடுங்கள். பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த பூவரச இலைக்கு மேல் நீங்கள் யாரிடம் கடன் கொடுத்தீங்களோ, அவங்களுடைய பெயர், எவ்வளவு கடன் கொடுத்தீர்களோ அந்த தொகையை எழுத வேண்டும்.

இதை சாதாரண நீள நிற பேனாவில் எழுதலாம். கருப்பு நிற பேனாவை பயன்படுத்தக் கூடாது. தொகையை எழுதி இந்த இலைக்கு உள்ளே பச்சை கற்பூரத்தை வைத்து, அப்படியே லேசாக சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி இதை குலதெய்வ படத்திற்கு பின்பக்கம் இடம் இருந்தால் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் குலதெய்வ பாதத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

குலதெய்வம் தான் துணை. குலதெய்வம் தான் இந்த கடனை திரும்பவும் வாங்கி நம் கையில் கொடுக்க வேண்டும் என்று குலதெய்வத்தை சரணாகதி அடைந்து ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்ய வேண்டும். அந்த இலையை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. நீங்கள் கொடுத்த பணம் உங்கள் கைக்கு மீண்டும் திரும்பி வரும் வரை அந்த இலையானது அந்த குலதெய்வப்படத்தின் அருகிலேயே இருக்கட்டும். தினமும் குலதெய்வத்திடம் வாரா கடன் வசூலாக வேண்டும் என்று மட்டும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

நீங்கள் கடன் கொடுத்த நபர் வேண்டுமென்றே உங்களுக்கு கடனை திருப்பி தராமல் இருந்தாலும் சரி, அல்லது அவருடைய சூழ்நிலை மேலும் மேலும் அவர் நஷ்டம் அடைந்தது கடனை திருப்பி தர முடியாமல் இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு வகையில் அவருக்கும் நல்லது நடந்து, அந்த பணத்தை கொண்டு வந்து, அவரே உங்களிடம் நன்றி சொல்லி அந்த பணத்தை திரும்பவும் ஒப்படைத்து விடுவார், அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இந்த பூவரச இலை பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: வாரத்தில் 2 நாள் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். இந்த உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பெயர், புகழ், பதவி, அந்தஸ்து, உங்களைத் தேடி வரும்.

15 நாட்களில் உங்கள் பணம் உங்கள் கைக்கு திரும்பி வரவில்லை என்றாலும் அடுத்து ஒரு சில நாட்களில் நிச்சயம் வரும். அது வரைக்கும் இலை உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும். பணம் மீண்டும் உங்கள் கைக்கு வந்தவுடன் இலையை கால்படாத இடத்தில் கிழித்து போட்டு விட வேண்டும். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -