வாரத்தில் 2 நாள் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். இந்த உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பெயர், புகழ், பதவி, அந்தஸ்து, உங்களைத் தேடி வரும்.

amman1
- Advertisement -

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே இந்த ஆசை நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். நம்முடைய பெயர் புகழ் அந்தஸ்து உயர வேண்டும், நம்மைப் பற்றி நாலு பேர் நல்லவிதமாக பேச வேண்டும், நம்மை பார்த்தால் அடுத்தவர்களுக்கு பிடிக்க வேண்டும், எப்போதும் வசீக வசீகரத் தோற்றத்தோடு அழகாக இருக்க வேண்டும், என்ற ஆசைகள் ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனதிலும் உண்டு. ஆனால் இந்த பிரபல்யம், பெயர், புகழ், அந்தஸ்தும், மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கிடைப்பது கிடையாது. ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் அது. உதாரணத்திற்கு சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகளை பார்க்கும்போது நமக்கும் ஆசை வரும். நாமும் இதுபோல பிரபல்யமான மனிதர்களாக இருக்கக் கூடாதா, நாமும் இவர்களைப் போல அழகாக ஸ்டைலாக இருக்கக் கூடாதா, என்று. அப்படிப்பட்ட ஆசை நிறைவேற வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

உயர் பதவி கிடைக்க திருநீற்றுப்பச்சை இலை திலகம்:
உயர் பதவி கிடைக்க வேண்டும். வியாபாரத்தில் நான்கு பேர் மதிக்கும்படி நிறைய லாபம் சேர்க்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும். நாம் பேசுவதை நான்கு பேர் கேட்க வேண்டும். அழகான தோற்றம் கிடைக்க வேண்டும். நம்மை பார்த்தால் நான்கு பேர் இரண்டு கைகளை கூப்பி கும்பிடும் அளவிற்கு மரியாதை மிக்க மனிதர்களாக மாற வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எளிமையான பரிகாரம் தான். இந்த திலகத்தை வாரத்தில் இரண்டு நாள் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். அது எந்த திலகம். அதை எப்படி தயார் செய்ய போகின்றோம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான் இது.

- Advertisement -

திருநீற்றுப்பச்சை இலை என்ற ஒரு செடி உள்ளது. பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லியோ அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டு அந்த இலையை எடுத்து வாருங்கள். கொஞ்சமாக நாட்டு மருந்து கடைகளில் விற்கும் புனுகு நமக்கு தேவை. ஒரு சின்ன டப்பா வாங்கிக் கொள்ளுங்கள். இந்த திருநீற்றுப்பச்சை இலையை கையில் வைத்து கசக்கி பிழிந்தால், அதிலிருந்து கொஞ்சமாக சாறு கிடைக்கும்.

அந்த சாற்றில் இந்த புனுகை கலந்து நெற்றியில் திலகமாக வைத்துக் கொண்டால் போதும். பெயர் புகழ் அந்த உயர் பதவி என்று எல்லாம் உங்களைத் தேடி வரத் தொடங்கிவிடும். உங்களுடைய பெயரை சொன்னால், உங்கள் ஊரில் யாருக்குமே ‘தெரியாது’ அப்படி என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு நீங்கள் ஊரே பேசும் பிரபல்யமான மனிதராக மாறிவிடுவீர்கள். நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு உங்களுக்குத்தான் கிடைக்கும்.

- Advertisement -

இதை எந்தெந்த கிழமைகளில் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை மட்டும் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் போதும். வாரந்தோறும் இந்த திலகத்தை நெற்றியில் வைத்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நல்ல மாற்றங்களை நீங்களே உணருவீர்கள். அதிகபட்சம் 3 மாதங்களில் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தை நிச்சயமாக நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: பல வருடங்களாக வேலை தேடியும் கிடைக்காதவர்கள், தொழிலில் எந்த வித முன்னேற்றமும் இல்லாதவர்கள் வீட்டில் இந்த சிறிய மாற்றத்தை செய்து பாருங்கள். நீங்கள் கனவிலும் நினைக்காத முன்னேற்றம் உங்களை தேடி வரும்.

எல்லோராலும் செய்யக்கூடிய எளிமையான பரிகாரம் இது. ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரம் இது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் பிரபல்யமாக வேண்டும், நீங்களும் வாழ்க்கையில் பெயர் புகழ் அந்தஸ்து, உயர் பதவியை பெற வேண்டும் என்றால் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -