பொருளாதார நிலை உயர மகாலட்சுமி வழிபாடு.

lakshmi malligai
- Advertisement -

அடிமட்டத்தில் இருக்கும் மனிதனும், கோபுரத்தின் உச்சியில் இருக்கக்கூடிய மனிதனுக்கும் இருக்கக்கூடிய ஒரே எண்ணம் எப்படியாவது நாம் அடுத்த கட்டமாக பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற ஒன்று மட்டும் தான். அந்த அளவிற்கு பொருளாதாரம் என்பது அனைவருடைய அடிப்படை வசதிகளையும் தேவைகளையும் பொறுத்து அமைகிறது. இந்த பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பல முயற்சிகளை செய்தாலும் அந்த முயற்சிகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தடைப்பட்டு நிற்கிறது என்றாலும் அல்லது வாய்ப்பே கிடைக்காமல் கஷ்டப்பட்டாலும் மல்லிகை பூவை வைத்து மகாலட்சுமி தாயாரை வழிப்பட வேண்டும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நமக்கு கிடைக்கக்கூடிய பணவரவை தான் பொருளாதாரம் என்று கூறுகிறோம். அந்த பணவரவு நமக்கு பல மடங்காக வருவதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக வேண்டும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை நாம் பல வழிகளில் வணங்கினாலும் இந்த முறையில் வழிபடும் பொழுது கண்டிப்பான முறையில் பணவரவு என்பது அதிகரித்து பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -

பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிபாடு

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அதுவும் சந்தி வேளை என்று கூறக்கூடிய மாலை 6 மணிக்கு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். ஒரு நல்ல தேங்காயாக வாங்கிக் கொள்ளுங்கள். அந்த தேங்காயில் பன்னீர் கலந்த மஞ்சளை முழுவதுமாக தடவ வேண்டும். பிறகு அதில் 27 குங்கும பொட்டுகளை வைக்க வேண்டும். இவ்வாறு பொட்டு வைத்த இந்த தேங்காயை மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இந்த பூஜையை செய்வதற்கு நமக்கு உதிரி மல்லிகை பூக்கள் தேவைப்படும். நல்ல மல்லிகை பூவாக பார்த்து 108 மல்லிகை பூக்களை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு “ஓம் மகாலட்சுமியே நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி மல்லிகை பூவை வைத்து அந்த தேங்காய்க்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். அந்த பிரசாதம் இனிப்பு பொருளாக இருப்பது மிகவும் விசேஷமாக இருக்கும்.

- Advertisement -

பிறகு கற்பூர தூப தீப ஆராதனை காட்டி மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து தங்களுடைய பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அன்றைய இரவு முழுவதும் இந்த தேங்காயும் மல்லிகை பூக்களும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் எப்போதும் போல் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்ட பிறகு இந்த தேங்காயை இரண்டாக உடைத்து மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக படைத்து விட வேண்டும்.

அங்கு அர்ச்சனை செய்த மல்லிகை பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து நம் தலைக்கும் தேய்த்துக் கொள்ளலாம், தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தேங்காயை பிரசாதமாக நாம் எடுத்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: மனதில் நினைத்த வேண்டுதல் பலிக்க பரிகாரம்

இப்படி வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொண்டால் நம் வாழ்வில் பொருளாதாரத்தில் என்றுமே குறைவிருக்காது நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -