மனதில் நினைத்த வேண்டுதல் பலிக்க பரிகாரம்

temple
- Advertisement -

மனதில் நினைத்த வேண்டுதல் பலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தினம் தினம் கோவிலுக்கு போகின்றோம். ஆனால் ஏனோ தெரியாது, கோவிலுக்கு போய் நாம் வைக்கும் வேண்டுதலானது பலிப்பதே கிடையாது. சில பேருக்கு ‘எதற்கு தான் கோவிலுக்கு போகின்றோம்? எதற்கு தான் சாமி கும்பிடுகின்றோம்? என்று வெறுப்பு கூட வந்துவிடும்’. அப்படி கிடையாதுங்க.

நீங்கள் வைக்கும் உண்மையான வேண்டுதலை அந்த கடவுள் நிச்சயம் நிறைவேற்றி வைப்பான். அதற்கான சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஒரு சேர அமைய வேண்டும் அல்லவா. அதற்கான கால நேரமும் கை கூடி வர வேண்டும். அதற்காக நாம் கொஞ்சம் காத்துக் கொண்டுதான் இருக்கணும். கோவிலுக்கு போய் இந்த முறையில் ஒருமுறை வேண்டுதல் வைத்து பாருங்கள்.

- Advertisement -

நிச்சயமாக நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதல் 48 நாட்களுக்குள் பலிக்க நிறையவே வாய்ப்பு உள்ளது. வேண்டுதல் படைக்க கோவிலுக்கு போய் எப்படி சங்கல்பம் வைக்கணும். ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

நினைத்தது நடக்க வேண்டுதல் வைக்கும் முறை

உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். 48 நாட்களும் அதே கோவிலுக்கு தான் போக வேண்டும்‌. முதல் நாள் எந்த நேரத்தில் இந்த வழிபாட்டை தொடங்குகிறீர்களோ, அதை நேரத்தில் தான் தொடர்ந்து 48 நாட்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நாளை இந்த வழிபாட்டை தொடங்குகிறீர்கள்.

- Advertisement -

நாளை காலை 8 மணிக்கு கோவிலுக்கு போகிறீர்கள் என்றால், தினமும் 8 மணிக்கு தான் அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். பிள்ளையார் கோவில், அம்மன் கோவில், முருகன் கோவில், சிவன் கோவில், எந்த கோவிலாக இருந்தாலும் அதே கோவிலுக்கு 48 நாள் போகணும். கோவிலை மாற்றக்கூடாது.

கோவிலுக்கு போய் அந்த இறைவனின் முன்பாக நின்று கொண்டோ, அல்லது அமர்ந்து கொண்டோ உங்கள் மனதில் இருக்கும் ஒரு கோரிக்கையை வையுங்கள். அந்த கோரிக்கை நிறைவே வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை வைத்துவிட்டு கோவிலை 21 முறை வலம் வர வேண்டும். பிறகு கோவிலில் நமஸ்காரம் செய்து கொண்டு இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, வீடு திரும்பவும்.

- Advertisement -

இதே போல ஒரு விஷயத்திற்காக, ஒரு வேண்டுதலுக்காக, 48 நாள் கோவிலுக்கு சென்று, தினமும் 21 முறை வளம் வந்து, இறைவனிடம் பிரார்த்தனை வைத்தால் உங்கள் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். முழு மனதோடு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்களேன். உங்கள் மனதில் நினைத்த அந்த ஒரு நல்ல காரியத்தை சீக்கிரம் அந்த இறைவன் நிறைவேற்றி வைப்பான். ஒரு சங்கல்பத்தை ஒரு நாள் நினைப்பது பெரிய விஷயம் அல்ல.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நடக்க மார்கழி தீபம்

இரண்டாவது நாள் நினைப்பது பெரிய விஷயம் அல்ல. அதே சங்கல்பத்தை தொடர்ந்து 48 நாளும் மேற்கொள்ளும் போது, அது ஒரு தவமாக மாறி, அந்த தவம் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றி வைக்கும். இதுதான் இந்த வேண்டுதலில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -