பொருளாதார நிலை உயர சொல்ல வேண்டிய பதிகம்

sivan pathigam
- Advertisement -

கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் போதுமா? அதற்கேற்ற உழைப்பு தேவையில்லையா? எந்த அளவிற்கு நாம் உழைக்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு கிடைக்கக்கூடிய பணம் தான் நம்மிடம் தங்கும். உழைப்பில்லாமல் பெறக்கூடிய எந்த செல்வமும் நம்மிடம் நிலையாக இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம்முடைய உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவும் பொருளாதார நிலை உயரவும் சொல்லக்கூடிய பதிகத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அனைத்து தெய்வங்களை நாம் வழிபடும் பொழுது அந்த தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களையும், ஸ்லோகங்களையும், பதிகங்களையும் நாம் உச்சரிக்கும் வழக்கம் நம்மிடம் பல பேருக்கு இருக்கிறது. அப்படி உச்சரிக்கும் பொழுது அதன் பொருள் உணர்ந்து அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து உச்சரித்தால் தான் அதன் முழுமையான பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் பொருளாதார நிலை உயரவும் அதே சமயம் நம்முடைய கடின உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவும் சொல்லக்கூடிய பதிகத்தை பார்ப்போம்.

- Advertisement -

சிவபெருமானை வழிபடுபவர்கள் மனம் உருகி இந்த பதிகத்தை பாடும் பொழுது அவர்களுடைய பொருளாதார நிலை உயரும் என்று கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிறந்த சான்றாக திருஞானசம்பந்தர் திகழ்கிறார். கும்பகோணம் அருகில் இருக்கக்கூடிய திருவாவடுதுறை என்னும் ஊரில் இருக்கும் மாசிலாமணீஸ்வரரிடம் இந்த பதிகத்தை பாடி தான் திருஞானசம்பந்தரே செல்வத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது.

அந்தப் பதிகத்தை நாம் அனுதினமும் மனதார கூறும்பொழுது நம்முடைய பொருளாதார நிலையும் உயரும் என்று கூறப்படுகிறது. படிக்கத் தெரியாதவர்கள் இந்த பாடலை கேட்பதன் மூலமும் அதன் பலனை பெற முடியும். இயன்றவர்கள் திருவாவடுதுறை கோவிலுக்கு சென்று அங்கிருக்கக்கூடிய சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு.

- Advertisement -

பதிகம்
“இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அழுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே.
இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை ஆரனே”

இந்த பதிகத்தில் மொத்தம் பத்து பாடல்கள் இருக்கும். அந்த பத்து பாடல்களையும் காலையிலும் மாலையிலும் மனதுருகி சிவபெருமானை நினைத்து பாடும் பொழுது நம்முடைய பொருளாதார நிலையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

இதே போல் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இரண்டு வரிகளே இருக்கக்கூடிய ஸ்லோகத்தை கூறும் பொழுதும் நம்முடைய வறுமை நிலை நீங்கி செல்வ செழிப்பு உயரும்.
மந்திரம்
“ஸ்ரீத ஸ்ரீச ஸ்ரீநிவாஸ ஸ்ரீநிதி ஸ்ரீவிபாவன
ஸ்ரீதர ஸ்ரீகர ச்ரேய ஸ்ரீமான் லோகத்ரயாச்ரய
மகாவிஷ்ணுவை நினைத்து இந்த மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர்கள் வாழ்வில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வநிலை உயரும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக எளிய பரிகாரம்

உங்களின் இஷ்ட தெய்வத்திற்கு ஏற்றார் போல் அவர்களுக்குரிய மந்திரங்களை முழு மனதோடு படித்து வழிபடுவதன் மூலம் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -