செல்வ வளம் பெருக எளிய பரிகாரம்

lakshmi money
- Advertisement -

ஒரு மனிதனுக்கு தேவையான 16 வகையான செல்வங்களையும் தரக்கூடிய அற்புத ஆற்றல் மிகுந்த தெய்வமாக திகழக்கூடியவர் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு செல்வ செழிப்பில் எந்தவித குறையும் இருக்காது. அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை பூஜை செய்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் மிகவும் எளிமையான வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமி தாயாருக்கு விருப்பமான பொருட்கள் என்று பல பொருட்கள் இருக்கின்றன. அவற்றை நாம் பயன்படுத்தும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதைவிட தினமும் நாம் விளக்கேற்றி வழிபாடு செய்யும்பொழுது ஒரே ஒரு சிறிய சூட்சமத்தை நாம் செய்தாலேயே மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம். மிகவும் எளிமையான பரிகாரம்தான்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தினமும் மாலை நேரத்தில் செய்வதன் மூலம் நம் வீட்டில் செல்வ செழிப்பு என்பது மேலோங்கும். மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் பொழுது இந்த பொருட்களை மட்டும் மகாலட்சுமி தாயாருக்கு வைத்தால் போதும் வேறு எந்தவிதமான பூஜைகளும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்று கூறப்படுகிறது. அந்த பொருட்கள் தான் வெற்றிலை பாக்கு, நாணயங்கள்.

ஆறு வெற்றிலைகளை எடுத்து அதில் மூன்று பாக்குகளை வைக்க வேண்டும். பிறகு நம்மிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு நாணயத்தை வைக்க வேண்டும். அது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று எந்த ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் அந்த வெற்றிலை பாக்கிற்கு மேல் வைத்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு மகாலட்சுமி தாயாரின் மந்திரத்தையோ அல்லது பாடலையோ உச்சரிக்க வேண்டும். இவை எதுவுமே தெரியாது என்பவர்கள் “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி” இன்று 21 முறை கூறவேண்டும். அவ்வளவுதான் பூஜை முடிந்து விட்டது. இதை போல் தினமும் நாம் செய்ய வேண்டும். மறுநாள் காலையில் அந்த நாணயத்தை எடுத்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெற்றிலை பாக்கை நாமும் உபயோகப்படுத்தலாம், பிறருக்கும் தரலாம். இப்படி நாம் தொடர்ந்து 54 நாட்கள் செய்ய வேண்டும். 54 நாட்கள் செய்து முடித்த பிறகு அந்த நாணயங்கள் அனைத்தையும் எடுத்து அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நாளை நிலை வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை வைத்து மகாலட்சுமி தாயாரை நினைத்து வழிபாடு செய்தால் நம் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -