வீட்டில் சில பொருட்களை எந்த திசையில் மாற்றி அமைத்தால் பிரச்சனைகள் தீரும் என்கிற ரகசியம் தெரியுமா?

home-mahalakshmi
- Advertisement -

வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்கள் ஒரு சில இடங்களில் வைக்கும் பொழுது சுபீட்சம் நிலவும் என்பது ஆன்மிக சிந்தனையாக இருந்து வருகிறது. வாஸ்து படி ஒரு சில பொருட்கள் ஒவ்வொரு திசையில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு விதமான பலன்கள் கொடுக்கின்றன என்று கூறப்படுகிறது. இந்த வகையில் வீட்டில் இந்த சில பொருட்களை இந்த திசையில் மாற்றி அமைப்பதால் பிரச்சனைகள் தீரும்? என்பது போன்ற தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டில் எல்லா இடங்களிலும் பணத்தை சிதற விடக்கூடாது. பணம் என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருப்பதால் அதை முறையாக ஓரிடத்தில், ஒரு திசையில் பத்திரப்படுத்தி வைத்து அந்த திசையில் இருந்து பணத்தை எடுக்கும் பொழுது நமக்கு பணம் வீண் விரையம் ஆகாது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி வடக்கிற்கு அதிபதியாக விளங்கும் குபேர பகவான் இருக்கும் திசையில் பணத்தை வைப்பது முறையாகும்.

- Advertisement -

தேக்கு மரம் என்பது தேக்கி வைக்கக் கூடிய அற்புதமான ஒரு மரம் என்பதால் தேக்கு மரத்தாலான பீரோ அல்லது பெட்டியில் பெரிய பெரிய பணக்காரர்கள் பணத்தை வைப்பது உண்டு. அது போல உங்களிடமும் தேக்கு மரத்தில் சிறிய பெட்டி இருந்தால் அதில் பணத்தை போட்டு பூட்டி வையுங்கள். வடக்கு திசையில் அதை வைத்து ஒவ்வொரு முறை பணத்தை பெரிய விஷயத்திற்காக நீங்கள் எடுக்கும் பொழுது அந்த திசையில் இருந்து பணத்தை எடுத்து பாருங்கள். வீண் விரையம் ஆகாது. மேலும் மேலும் பணம் பெருகுவதை நீங்கள் காணலாம். சிறுசிறு செலவுகளுக்கு மற்ற இடங்களில் நீங்கள் பணத்தை வைத்தாலும் பெரிய செலவுகளுக்கு இது போன்ற திசைகளில் பணத்தை வைக்கும் பொழுது நல்ல லாபம் உண்டு.

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை வடக்கு அல்லது கிழக்கு என்று மாற்றி அமைத்துப் பாருங்கள். சிலர் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் கண்ணாடி அமைத்தால் நேர்மறை ஆற்றல்கள் நீங்கிவிடும் என்று கூறுவது உண்டு. இது உண்மை அல்ல! முகம் பார்க்கும் கண்ணாடி வடக்கு மற்றும் கிழக்கில் பார்த்து வைக்கும் பொழுது நமக்கு நேர்மறை ஆற்றல் பெருகத்தான் செய்யும் குறையாது. பெரிய அளவிலான கண்ணாடிகள் படுக்கை அறை மற்றும் குளியல் அறை தவிர மற்ற அறைகளில் அமைக்கலாம்.

- Advertisement -

துளசி செடி, நெல்லி மரம், மாதுளை மரம் மற்றும் மருதாணி செடி போன்றவற்றை வடகிழக்கு திசையில் வைத்து வளர்த்து வர நமக்கு கிடைக்க வேண்டிய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பது நியதி. இந்த இடத்தில் இந்தச் செடிகளை வைத்து வளர்த்தால் நமக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேரும். இழந்த பொருட்கள், சொத்துக்கள், பணம் போன்றவை திரும்ப நம்மிடம் வரும் என்று நம்பப்படுகிறது. அது போல வீட்டில் பூஜை அறையில் சிவன், பார்வதி, முருகன் மற்றும் விநாயகர் ஆகியோரின் சிலை அல்லது படங்கள் கிழக்கு நோக்கி இருந்தால் நமக்கு தடை இல்லாத செல்வம் பெருகும்.

தோஷங்கள் எதுவாயினும் அது விலகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இறந்தவர்களின் படத்தை ஒருபோதும் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் அமைக்கக் கூடாது. தெற்கு திசையில் இறந்தவர்களின் படத்தை மாட்டி வைப்பது முறையாகும். அதே போல பூஜை அறையில் இறந்தவர்களின் படத்தை அமைக்காமல் இருப்பது நல்லது. இப்படி நீங்கள் திசை பார்த்து சிலவற்றை மாற்றி அமைப்பதால் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

- Advertisement -