நாளை வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை சாத்தி வழிபாடு செய்யுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.

varahi-vilakku
- Advertisement -

இந்த உலகமே எதிர்த்தாலும் சரி, உன்னை அந்த இறைவன் கைவிட மாட்டான், என்ற உணர்வு உனக்குள் எப்போது வருகின்றதோ, அப்போது நீ இறை வழிபாடு செய்தால் போதும். நீ செய்யும் இறைவழிபாட்டிற்கு உடனடியாக கைமேல் பலன் கிடைக்கும். இந்த உலகத்தில் இறைவன் இருக்கின்றானா. இறைசக்தியை நம்பி நாம் செய்யக்கூடிய வேண்டுதலும் வழிபாட்டு முறைகளும் நமக்கு நல்லது செய்யுமா. என்ற சந்தேகம் ஒரு துளி இருந்தால்கூட, நீ பரிகாரத்தை செய்வதன் மூலமும், வழிபாடு செய்வதன் மூலமும் உனக்கு எந்த ஒரு பயனும் கிடையாது. ஆகவே நம்பிக்கை ஒன்று மட்டும்தான் பரிகாரம் என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

பொதுவாக பௌர்ணமி தினம் என்றால் அது அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் உங்களால் எந்த அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியுமோ, அந்த அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால், குறிப்பாக இந்தப் பௌர்ணமி தினத்தில் வாராஹி வழிபாட்டை எப்படி மேற்கொண்டால், நம்முடைய வீட்டில் இருக்கும் பலவிதமான கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதை பற்றிய ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வராஹி அம்மனை நினைத்து கொஞ்சமாக வேப்பிலை, கொஞ்சமாக செவ்வரளி பூ, கொஞ்சமாக விரலிமஞ்சள், கணக்கெல்லாம் கிடையாது. உங்கள் விருப்பம் போல இந்த 3 பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் நிற நூலில் இந்த மூன்று பொருட்களையும் மாற்றி மாற்றி வைத்து மாலையாகக் கட்டி கொள்ள வேண்டும்.

நாளை பௌர்ணமி தினத்தன்று மாலை 6 மணிக்கு உங்கள் வீட்டு பூஜை அறையில் வாராஹியின் சிலை இருந்தாலும், திருவுருவப்படம் இருந்தாலும் அதற்கு இந்த மாலையை சாத்திவிட்டு, தீபம் ஏற்றி வைத்து விட்டு உங்களால் முடிந்த பிரசாதத்தை வாராஹி அம்மனுக்கு நிவேதனமாக வைத்து, உடல் சுத்தத்தோடு, மன சுத்தத்தோடு உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கின்றதோ அதை மனமுருகி அம்பாளிடம் சொல்லி வேண்டிக் கொண்டால், நிச்சயமாக கைமேல் பலனை அந்த அம்பாள் வரமாக கொடுத்து விடுவாள். (அம்மனுக்கு பிரசாதமாக 1 டம்ளர் பானகம் வைத்தாலும் போதும்.)

- Advertisement -

உங்களுடைய வீட்டில் வாராஹி அம்மன் படமோ சிலையோ இல்லை என்றால் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை சாத்தலாம். எதுவுமே முடியாது என்றால் வராகி அம்மனை நினைத்து ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, அந்த அகல் விளக்கை சுற்றி இந்த மாலையை வைத்து விடுங்கள். அது போதும்.

இந்த தீபத்தை பார்த்து, இந்த தீபச்சுடரின் பிரகாசமான ஒளியில் அம்மனை உருவகப்படுத்திக் கொண்டு, உங்களுடைய கஷ்டங்களை அம்பாளின் பாதங்களில் இறக்கிவைத்து விடுங்கள். முதலில் மன பாரம் குறையும். மனதில் நிம்மதி கிடைக்கும். உங்களுக்குள் தான் இருக்கின்றார் அந்த வாராகி தாய் இருக்கின்றாள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தெம்பு உங்களுக்கு வந்துவிடும். எல்லா பிரச்சனைகளும் படிப்படியாக பனிபோல உருகத் தொடங்கிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -