உடம்பையும் மனதையும் சுறுசுறுப்பாகும் வார்த்தை

amman7
- Advertisement -

உடம்பு சரியில்லாத நேரத்தில் தானாக மனசு சரியில்லாமல் போகும். மனசு சரியில்லாமல் போய்விட்டால், தேவையில்லாத நோய் நொடி வந்து நம்முடைய உடம்பை கெடுத்து விடும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் சரி, மனது சரியில்லை என்றாலும் சரி, சோகமாக உட்கார்ந்தே இருக்கீங்க, சோகமாக படுத்தே இருக்கீங்க, மனதையும் உடம்பையும் சுறுசுறுப்பாக மாற்ற வேண்டும்.

அடுத்தடுத்து தலைக்கு மேல வேலை, அந்த பாரத்தை கீழே இறக்கி வைக்க வேண்டும். இந்த பிரச்சினையில் இருந்தெல்லாம் தப்பிக்க தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை என்ன செய்வது, ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான குறிப்பு இதோ இந்த பதிவில் உங்களுக்காக. நமக்கு கஷ்டம் வரும் சமயத்தில் எப்போதுமே நம்மை விட மேலிடத்தில் இருப்பவர்களை சித்தித்து பார்க்கக் கூடாது. நம்மை விட கீழே இருப்பவர்களை பாருங்கள் அப்போதுதான் நம்முடைய மனது லேசாகும்.

- Advertisement -

நமக்காவது இருக்க வீடு, உடுக்க உடை சாப்பிட சாப்பாடு இருக்கிறது. இது எதுவுமே இல்லாமல் இன்னும் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுடைய நிலைமையை சிந்தித்துப் பாருங்கள். இதுபோல எப்போதுமே பாசிட்டிவாக யோசிக்கும் போது, பாசிட்டிவ் எனர்ஜி எப்போதும் நம்மிடம் இருக்கும். தன்னம்பிக்கையும் எப்போது நம்மிடம் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.

உடல் சோர்வு நீங்க ஸ்விட்ச் வோர்ட்

சரி சரி கஷ்டம் வரும்போது சொல்ல வேண்டிய வார்த்தை என்ன அதை சொல்லுங்கள் என்று நீங்கள் சிந்திப்பது நன்றாகவே புரிகிறது. ‘change adjust limit be’ இதுதான் அந்த சுவிட்ச் வோர்டு. எந்த பிரச்சனையில், உங்களுடைய மனது அழுத்தத்துடன் இருக்கும்போதும் சரி, 5 நிமிடம் இந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

தானாக உங்களுக்குள் ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். அந்த மன அழுத்தம் நீங்கும். உடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏதாவது இருந்தாலும் அதிலிருந்து வெளிவருவதற்கு இந்த வார்த்தை ஒன்றே போதும். அதற்காக மருந்து மாத்திரை சாப்பிடாமல் மருத்துவரிடம் செல்லாமல் இருக்கக் கூடாது. மருந்து சாப்பிடுங்க டாக்டர்கிட்ட போங்க. வந்து ரெஸ்ட் எடுக்கும் போது, 5 நிமிஷம் இந்த வார்த்தையையும் சொல்லுங்கள் நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும்.

தலைவலியாக இருக்கிறது, வயிறு வலியாக இருக்குது, கை கால் உடல் அசதி இருக்கிறது, கண் திருஷ்டி பட்டதால் உடல் அசதி இருக்கிறது, என்னும் சமயத்தில் நீங்கள் உறங்க செல்வதற்கு முன்பு இந்த வார்த்தையை சொல்லிவிட்டு உறங்க சென்றாலும் உங்கள் உடம்பை பிடித்த பிணி தீரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இதேபோல நீங்கள் வெளியே எங்கேயோ இருக்கிறீங்க. ஆபீஸ் அல்லது கடை எந்த இடத்தில் இருந்தாலும் சரி, திடீரென்று உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை பார்த்து உங்களுடைய மனது சோகமடைந்து விடும். ஏதோ ஒரு சம்பவம் உங்களுடைய மனதை காயப்படுத்தி விடும். அப்படிப்பட்ட சோகமடைந்த மனதை புத்துணர்ச்சியாக மாற்றவும் இந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் துளசி செடி வழிபாடு

நீங்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு நல்ல பலன் தெரியும் பட்சத்தில் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வழி காட்டிய புண்ணியம் உங்களை வந்து சேரும். நல்லது நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -