கடன் மற்றும் தொழில் பிரச்சினை தீர நெல்லிக்காய் பரிகாரம்.

amla pariharam
- Advertisement -

பிரச்சனைகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கை என்பது யாருக்கும் அமையாது. ஆனால் அந்த நிம்மதியை தேடித்தான் நாம் பல வகைகளில் போராடிக் கொண்டிருக்கின்றோம். குடும்பம், தொழில், கடன் அல்லது நமக்கே ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவோம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நெல்லிக்காயை வைத்து நமக்கு வரக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக சுகமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதற்கு சுக்கிர பகவானின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். சுக்கிர பகவானின் அருள் இருந்தால் மட்டும்தான் அனைத்து விஷயங்களிலும் நமக்கு நிம்மதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், சுகமான வாழ்க்கையை வாழ்வதற்கும், நிம்மதியாக இருப்பதற்கும் சுக்கிர பகவானின் அருள் கண்டிப்பாக தேவை.

- Advertisement -

சுக்கிர பகவானுக்கு உரிய கனியாக நாம் நெல்லிக்கனியை கூறுகிறோம். நெல்லிக்கனியில் பல உயரிய சத்துக்கள் இருக்கின்றது. அதை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது அது நமக்கு பல வகைகளில் நன்மை தருகிறது. அதோடு மட்டுமல்லாமல் நெல்லிக்கனிக்கு என்று ஆன்மீக ரீதியாகவும் பல நற்பலன்கள் இருக்கின்றன.

இந்த நெல்லிக்கனியை யார் ஒருவர் தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு உடல் ரீதியாக எந்த பிரச்சினையும் ஏற்படாது என்பது மருத்துவ ரீதியான உண்மையாக இருந்தாலும் தினமும் காலையில் நெல்லிக்கனியை உட்கொள்பவர்களுக்கு சுக்கிர பகவானின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அடுத்தபடியாக நம்முடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள், எப்படிப்பட்ட கடன் பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு புதன்கிழமை அன்று மூன்று நெல்லிக்கனிகளை வாங்கி தங்களை விட வயதில் மூத்தவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதன் மூலம் கடன் பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது.

தொழில் ரீதியாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் தீருவதற்கு ஆறு நெல்லிக்கனிகளை வெள்ளை நிற துணியில் கட்டி தொழில் செய்யும் இடத்தில் வடமேற்கு மூலையில் கட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி தொழில் லாபகரமாக நடக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை இந்த நெல்லிக்கனிகளை மாற்ற வேண்டும்.

- Advertisement -

நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர்வதற்கு வீட்டில் நெல்லிக்கனி மரத்தை நட்டு வளர்க்க வேண்டும். அவ்வாறு நட்டு வளர்க்கும் போது நம்முடைய கைகளால் நம்முடைய உள்ளங்கையில் நீரை ஊற்றி அந்த மரத்திற்கு ஊற்றுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து சுக்கிர பகவானின் அருளால் சுகமான வாழ்க்கையை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: வாங்கும் தங்க நகைகள் நிலைத்திருக்க செய்ய வேண்டியவை.

பல மருத்துவ குணங்களும் மகத்துவ குணங்களும் நிறைந்த நெல்லிக்கனியை நாமும் முறையாக பயன்படுத்தி நம் வாழ்வில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சுகமான வாழ்க்கையும் வாழலாம்.

- Advertisement -