தீர்க்க முடியாத எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவற்றிற்கு உடனே தீர்வு கொடுக்கும் இந்த பூட்டு பரிகாரம்

lock
- Advertisement -

இந்தப் பிரபஞ்சம் பலதரப்பட்ட மனிதர்களை கொண்டுள்ளது. மனிதர்களில் ஆண்-பெண் என இரு இனங்கள் இருக்கின்ற போதும், உலக மக்கள் தொகையில் எவர் ஒருவரும் மற்றவரைப் போல இருப்பதில்லை. உருவத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொருவரிடமும் பலதரப்பட்ட மாற்றங்கள் இருக்கின்றன. அதுபோலத்தான் மனித வாழ்வில் சூழ்நிலையை பொருத்து பலவிதமான பிரச்சனைகள் அவனைச் சூழ்ந்து கொள்கின்றன. பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை என்பது நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் எவருக்கும் அமைவதில்லை. போராட்டம் இல்லாமல் எந்த ஒரு விஷயமும் தானாக கிடைப்பதில்லை.

அது போலத்தான் முடிவில்லாத பிரச்சனைகள் என்று எதுவும் கிடையாது. ஒரு சில பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவதற்கு மனித சக்தியுடன் தெய்வத்தின் அருளும் சேர்ந்து தேவைப்படுகிறது. அவ்வாறு தெய்வத்தின் அருளைப் பெற்று தீர்க்க முடியாத பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு மீண்டு வர இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தால் போதும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

மனிதனுக்கு இருக்கின்ற பிரச்சனைகளை சமாளித்து அவற்றை தீர்த்து வெளிவருவதற்கு மன தைரியமும், ஆற்றலும் இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு சிலர் தன்னை எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை சமாளித்து அதிலிருந்து எளிதாக விட்டுவிடுகின்றனர். ஆனால் எவ்வளவு போராடினாலும் ஒரு சிலரால் பிரச்சனையிலிருந்து விடுபட்டு மீண்டு வெளியே வர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள்.

இதனால் மற்ற வேலைகளில் மீதும் கவனம் செலுத்த முடியாமல் தனது மகிழ்ச்சியை தொலைத்து விடுகின்றனர். இவ்வாறு பிரச்சனைகளை தொடர விடாமல் அவற்றை ஒரு முடிவுக்கு கொண்டுவர இறைவனின் அருள் நிச்சயம் தேவைப்படுகிறது. அதற்காக சிவபெருமான் கோவிலுக்குச் சென்று செய்ய வேண்டிய ஒரு சிறப்பு பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலனைப் பெற முடியும்.

- Advertisement -

அதற்காக ஒரு பெரிய அளவிலான பூட்டு ஒன்று வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த பூட்டின் சாவி போட்டு திறக்கும் பகுதி அதன் முன் திசையில் இருக்க வேண்டும். இந்தப் பூட்டைத் திறந்து பார்க்காமல் அப்படியே கடையிலிருந்து வாங்கி வர வேண்டும். அதனை வீட்டின் பூஜை அறையில் வைத்து பன்னீர் தெளித்து மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பிறகு 11 நாட்களுக்கு காலை விளக்கேற்றி இந்த பூட்டிருக்கு தீப, தூப ஆராதனை காண்பிக்க மனதில் இருக்கும் பிரச்சனையை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக பதினோராம் நாள் செவ்வாய், வெள்ளி, திங்கள் கிழமை இது போன்ற நாட்களில் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பதினோறாம் நாள் காலை பூஜை செய்து முடித்த பின்னர் இந்த பூட்டை சிவபெருமான் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு கோவிலில் பூஜை செய்யும் குருக்களிடமோ அல்லது கோவிலுக்கு வெளியே யாசகம் கேட்பவர்களிடமோ வெற்றிலை பாக்கு, பழம் வைத்து கொடுத்து பூட்டை திறக்க சொல்ல வேண்டும்.

பிறகு அந்தப் பூட்டை அவர்களிடமே கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து தலைக்கு குளித்து விட்டு, மறுபடியும் கோவிலுக்கு சென்று இறைவனிடம் மனதார வேண்டிக் கொண்டு, வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு இருந்துகொண்டிருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவை உடனடியாக தீர்ந்துவிடும்.

- Advertisement -