வீட்டில் தீயாய் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு கூட சீக்கிரமே ஒரு தீர்வு கிடைக்கும். இந்த 4 தீபங்களுக்கு அப்படி ஒரு சக்தி உண்டு.

deepam3
- Advertisement -

சில வீடுகளில் நிம்மதி என்ற ஒரு வார்த்தைக்கு இடமே இருக்காது. ஒரு பிரச்சனை முடிவதற்குள் பின்னாலேயே அடுத்த பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்து விடும். சிலருக்கு பணப்பிரச்சனை இருக்கும். சிலருக்கு கடன் தொல்லை இருக்கும். சிலருக்கு உடல் ரீதியாக ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்கும். சிலருக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு திருமணம் நடப்பதில் பிரச்சனை இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். சிலருக்கு சொத்து சுகம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், சில வீடுகளில் சண்டை சச்சரவே ஒரு பிரச்சனையாக இருக்கும். இதில் உங்கள் வீட்டில் எந்த பிரச்சனை தீயாக எரிந்து கொண்டிருந்தாலும் சரி, அந்த பிரச்சனைக்கு கூடிய விரைவில் ஒரு தீர்வு கிடைக்க உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த நான்கு தீபங்களை ஏற்றினால் போதும்.

swasthik

நான்கு திசைகளிலிருந்து வரும் பிரச்சனைகளை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி சுவஸ்திக் சின்னத்திற்கு உண்டு. ஸ்வஸ்திக் சின்னம் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் லாபம் இருக்கும். இறைவனின் வசிய தன்மை இருக்கும். ஒருவிதமான நேர்மறை ஆற்றலை நான்கு பக்கத்தில் இருந்தும் ஈர்க்கும் சக்தி கொண்டதுதான் இந்த ஸ்வஸ்திக் சின்னம்.

- Advertisement -

முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறை அலமாரியில் இருந்தாலும் சரி, அல்லது பூஜை அறைக்கு கீழே தரையில் இடம் இருந்தாலும் சரி, அந்த இடத்தை மஞ்சள் தண்ணீரால் நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள்.

deepam2

நான்கு திசைகளையும் நோக்கி, நான்கு முனைகள் சுவஸ்திக் சின்னத்தின் இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் நான்கு திசைகளையும் நோக்கி நான்கு மண் அகல் தீபங்களை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்திடம் உங்களுடைய கோரிக்கையை வைக்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத பிரச்சனை எதுவோ அந்த ஒரு பிரச்சனைக்கு தீர்வை தர வேண்டி, மனதார இந்த நான்கு தீபத்தை ஏற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த தீபத்தை ஏற்றலாம். கட்டாயமாக நல்லெண்ணெய் ஊற்றி மண் அகல் விளக்கில் தீபமேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

coconut oil 2

இந்த தீபம் குறைந்தது ஒருமணி நேரம் வரை எரிய வேண்டும். தீபம் எரிந்து முடியும் போது, தீபத்தை கருக விடாமல் பூவை கொண்டு தீபத்தை மலை ஏற்றி விடுங்கள். தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய கோரிக்கைகளை குலதெய்வம் இஷ்ட தெய்வத்திடம் முன்வைக்கும்போது உங்களுடைய பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்க தொடங்கும்.

krambu

இந்த தீபத்தை ஏற்றும் வாரங்கள், கடந்து செல்ல செல்ல, அதாவது 3 வார வெள்ளிக்கிழமை, 5 வார வெள்ளிக்கிழமை என்று தீபங்களை நீங்கள் ஏற்றி வர, படிப்படியாக உங்கள் பிரச்சனை எப்படி தீர்ப்பது என்பது உங்களுக்கே தெரியாது. ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒருவகையில் பிரச்சினைக்கான தீர்வினை அந்த ஆண்டவன் உங்களுக்கு காட்டிக் கொடுத்துவிடுவான். அந்த ஆண்டவனின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற இந்த நான்கு தீபத்தை ஏற்றி அனைவரும் பலன் பெறவேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -