இந்த இரண்டு செடிகளையும் வீட்டின் வாசலில் ஒன்றாக சேர்த்து வளர்த்து வந்தால் அள்ள அள்ள குறையாத செல்வம் பணமும் நம்மிடம் வந்தடையும்

cash
- Advertisement -

வீடு என்பது கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாகவும், மனநிறைவுடனும் வாழும் ஓர் இடமாகும். ஆனால் வீட்டிற்கு வந்தாலே தொல்லையாக இருக்கிறது, இந்த இடத்தில் நிம்மதியே இல்லை என்று புலம்புவர்களை அதிகமாக பார்த்திருப்போம். இதற்கு காரணம் அவர்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகமாக இருப்பதேயாகும். இவ்வாறு ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்ததென்றால் அந்த குடும்பத்தினரிடையே எப்பொழுதும் பிரச்சனை, மணகசப்பு, உடல்நல குறைபாடு, குழந்தைகள் படிப்பில் கவனம் இல்லாமல் இருத்தல் போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதனை சரிசெய்ய வீட்டின் வாசலில் இந்த இரண்டு செடிகளை வளர்த்தால் போதும். அனைத்து வரங்களும் நமக்கு கிடைத்துவிடும். அவ்வாறு சிறப்புமிக்க இரண்டு செடிகளை பற்றியும் அவற்றினால் உண்டாகும் பலன்களை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Home 1

முந்தைய காலத்தில் எல்லாம் நமது முன்னோர்கள் பல வழிமுறைகளை கடைப்பிடித்து வந்தனர். அவர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஆன்மீகப் பலனும், மருத்துவ குணங்களும் சேர்ந்தே இருந்தன. அவ்வாறு வீட்டின் வாசலில் சாணி தெளிப்பது, குளிக்கும் பொழுது மஞ்சள் பூசுவது, வீட்டின் வாசலில் வேப்பிலை கட்டுவது இது போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன.

- Advertisement -

இவற்றைப் போலவே வீட்டில் செடிகள் வளர்ப்பதிலும் மிகுந்த கவனத்துடனும், காரியத்துடனும் செயல்படுவார்கள். அவ்வாறு நன்மைகள் தரக்கூடிய செடிகளை வீட்டில் முறையாக வளர்த்திட வேண்டும். ஒரு சில செடிகளின் மூலம் வீட்டிற்கு அதிர்ஷ்டங்களும் ஒரு சிலவற்றின் மூலம் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலும் வரக்கூடும். இவ்வாறு அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகள் துளசி மற்றும் அருகம்புல். இவை இரண்டையும் ஒன்றாக ஒரே தொட்டியில் வைத்து வளர்ப்பதனால் பல புண்ணியங்களும், செல்வ செழிப்பும் உண்டாகும.

flower-garden

அருகம்புல்:
எமனின் மகன் அனலன் எவரொருவர் உடம்பில் வேண்டுமானாலும் புகுந்து அவரின் சக்தியை உறிஞ்சும் சிறப்பான வரத்தைப் பெற்றிருந்தான். இவ்வாறு அனைவரின் சக்தியையும் உறிஞ்சி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த அனலனின் கொடுமைகளை தேவர்களும், முனிவர்களும் விநாயகரிடம் முறையிட, அவர் அனலனை அப்படியே விழுங்கினார். அப்பொழுது அவர் உடல் முழுவதும் சூடாகி இந்த உலகம் முழுவதுமே சூட்டினால் தகித்தது. இந்த சூட்டை தணிப்பதற்காக எவ்வளவு குளிர்ந்த நீரினை அவர்மீது கொட்டியும் அவரின் சூடு தணியவில்லை. அப்பொழுது அங்கு வந்த முனிவர்கள் 21அருகம்புல்லை பறித்து விநாயகர் மீது வைத்தனர். உடனே அவர் உடல் முழுவதிலும் இருந்த சூடு தனிந்தது. அந்த நேரம் முனிவர்கள் விநாயகரிடம் எவர் ஒருவர் இந்த அருகம்புல்லை வைத்து உங்களை வழி படுகிறார்களோ அவர்களுக்கு வேண்டிய வரங்களை வணங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு விநாயகரும் அப்படியே ஆகட்டும் என்று ஆசி வழங்கினார். இதனால்தான் அனைவரும் அருகம்புல்லை வைத்து விநாயகரை வழிபடுகின்றனர்.

- Advertisement -

துளசி:
துளசி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. துளசியை வீட்டில் வைத்துப் பூஜிப்பதன் மூலம் மகாலட்சுமி வீட்டிற்குள் நுழைவார்கள். அவர்கள் நுழைவதன் மூலம் பெருமாளும் நமது வீட்டிற்கு வருவார். இதனால் நமது வீட்டில் பணம், நகை போன்ற அனைத்து செல்வங்களும் பெருகிக் கொண்டே இருக்கும்.

pul

இவ்வாறு சிறப்புமிக்க துளசி மற்றும் அருகம்புல்லை ஒரே தொட்டியில் சேர்த்து வைத்து வீட்டின் வாசற்படிக்கு அருகில் வைத்து விடவேண்டும். இப்படி செய்வதால் உங்களுக்கு வேண்டிய அனைத்து வரங்களும் கிடைத்து உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அழிந்து வீடு எப்போதும் மன அமைதியுடனும் செல்வ செழிப்புடனும் இருக்கும்.

- Advertisement -