வீட்டில் இருக்கும் சகல பிரச்சனைகளை சரி செய்ய சர்க்கரை பரிகாரம்.

sakkarai siva lingam
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. பணி செய்யும் இடம் முதல் குடும்பம் சுற்றத்தார் அக்கம் பக்கம் என எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும். அவையெல்லாம் சமாளித்து தான் நாம் வாழ வேண்டும். இது ஒரு புறம் இருந்தாலும் ஒரு சிலருக்கு வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி இருக்காது, எதற்கெடுத்தாலும் சண்டை, பணவரவில் பற்றாக்குறை, உடல் நல கோளாறு, எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதில் ஒரு முடக்கம் தொழிலில் முன்னேற்றம் இல்லாத சூழ்நிலை இது போன்ற பிரச்சனைகளை சமாளிப்பது உண்மையில் கடினமான காரியம் தான். அதிலும் இந்த குடும்ப பிரச்சனையும் பண பிரச்சனையும் தலையெடுத்தால் சமாளிப்பது மிக மிகக் கடினம்.

- Advertisement -

இப்படியான பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க நமக்கு மன தைரியமும் முயற்சியும் தேவை. இத்துடன் சேர்த்து இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் பொழுது இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

குடும்ப பிரச்சனை பணப் பிரச்சனை தீர

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் சர்க்கரை, ஊதுவத்தி இரண்டு மட்டும் தான். அதே போல் இந்த பரிகாரத்தை நாம் சிவாலயத்தில் தான் செய்ய வேண்டும். ஆகையால் இந்த பரிகாரம் செய்ய ஆலயத்திற்கு செல்லும் போது சுத்தமான தண்ணீரும் சிறிதளவு சர்க்கரை ஊதுவத்தியை கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -

பெரும்பாலான சிவாலயங்களில் சிவலிங்கங்கள் வெளிப்புறங்களில் தனியாக வைத்திருப்பார்கள். அது போன்ற ஒரு ஆலயத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள். அங்கு சென்று நீங்கள் கொண்டு சென்றிருக்கும் தண்ணீரில் சர்க்கரையை கலந்து சிவலிங்கத்துக்கு உங்கள் கையாலே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் வேளையில் உங்களுடைய பிரச்சனைகள் எதுவோ அது தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இதை செய்த பிறகு 11 சந்தன ஊதுபத்திகளை ஏற்றி அவருக்கு ஆராதனை காட்டி அங்கேயே சுருக்கி வைத்து விடுங்கள். இதில் 11 சந்தன ஊதுபத்தி மட்டும் எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் செய்யும் பொழுது மிக மிக நல்ல பலனை கொடுக்கும். இதைத் தவிர மற்ற நாட்களில் செய்தாலும் தவறில்லை. ஆனால் முதல் வாரம் எந்த கிழமையில் இந்த பரிகாரம் செய்கிறோமோ அடுத்தடுத்த வாரங்களில் அதே நாளில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களின் பிரச்சனைகளை பொறுத்து இதை எத்தனை வாரம் செய்வது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஓரிரு வாரங்கள் இதை செய்த உடனேயே உங்களுடைய பிரச்சனைகள் தீர்வதற்கான வழிகள் பிறக்கும். அதையும் மீறி அதிகமான பிரச்சனையில் இருப்பவர்கள் தொடர்ந்து மூன்று மாத காலம் இதை செய்வது நல்லது. ஒரு வேளை தனியாக சிவலிங்கம் இல்லாவிடில் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யும்படி கோவில் பூசாரியிடம் கேட்டாவது இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: தோஷங்களை நீக்கும் வாழைத்தண்டு திரி தீபம்.

இந்த பரிகார மிக மிக எளிமையானது தான் ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் உங்கள் குடும்பப் பிரச்சனை அனைத்தும் தீர, சிவபெருமானின் அருள் ஆசி பெற இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -