உடல் வலிமை பெறவும், முடி வளர்ச்சிக்கும் உதவக்கூடிய இந்த முத்திரையை எப்படி செய்ய வேண்டும்? கையை இப்படி செஞ்சா முடி வளர்ச்சி அதிகரிக்குமா என்ன?

- Advertisement -

இழந்த உடல் வலிமையையும், கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்க செய்ய கூடிய அற்புதமான ஆற்றல் இந்த முத்திரையில் ஒளிந்து கொண்டுள்ளது. இந்த முத்திரையை புத்தர் கையில் நாம் பார்க்கக் கூடும். புத்தர் கடவுளைப் போல கையை வைத்துக் கொள்ளவில்லை, அவர் இம்முத்திரையை தெரிந்து தான் கடைப்பிடித்திருக்கிறார். இதனால் உண்டாகக் கூடிய நன்மைகள் அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். புத்தர் கையில் இருக்கும் இந்த பிரித்வி முத்திரை நமக்கு எந்த வகையில் உதவி செய்யும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

இந்தப் பிரித்வி முத்திரை திசுக்களின் பலத்திற்கு பெருமளவு உதவி செய்கிறது. தொடர்ந்து இந்த முத்திரையை கையில் வைத்துக் கொண்டு தியானம் மேற்கொண்டால் திசுக்கள் பலம் பெற்று சோர்வுடன் இருப்பவர்கள் பூரண குணமடைந்து எழுந்து குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு ரொம்பவே சக்தி வாய்ந்த இந்த பிரித்வி முத்திரை உள்ளுறுப்புகள் மற்றும் தனிமங்களை அதிகரித்து உடல் எடை மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.

- Advertisement -

கைகளை நீட்டி கட்டை விரலை, மோதிர விரலின் மீது வைத்து நன்கு அழுத்தம் கொடுத்தால் அது தான் பிரித்வி முத்திரை ஆகும். இந்த பிரித்வி முத்திரை வெறுமனே அப்படியே செய்யக் கூடாது. தியான நிலையில் நன்கு முதுகுத் தண்டுவடம் நிமிர்ந்து இருக்கும்படி அமர்ந்து கொள்ள வேண்டும். கண்களை மென்மையாக மூடிக் கொண்டு இரு கைகளிலும் இது போல பிரித்வி முத்திரையை அழுத்தம் கொடுத்து பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு 30 நிமிடம் செய்தால் உங்களுடைய முடி வளர்ச்சி அதிகரிக்க தொடங்கும்.

இந்த முத்திரையினால் ஏற்படக்கூடிய அதிர்வுகள் செல்களின் இயக்கத்தை தூண்ட செய்கிறது. இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரித்து மேலும் உடம்பில் இருக்கும் பிராண சக்தியை அதிகரிக்கச் செய்து நமக்கு நல்ல நேர்மறையான சிந்தனைகளையும் வலுப்பெற செய்கிறது. குழப்பம், மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றை நீக்கி நமக்கு பல்வேறு நன்மைகளையும் அளிக்கிறது.

- Advertisement -

என்னதான் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டாலும் உடல் எடையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தால் நீங்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடையை கணிசமாக உயர ஆரம்பிக்கும். உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் தேவையற்ற உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இந்த முத்திரையை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

திசுக்கள், சதை, தோல், எலும்புகள், குருத்தெலும்புகள் போன்றவற்றை நல்ல வலிமையாக்க கூடிய சக்தி இந்த பிரித்வி முத்திரைக்கு உண்டு. இந்த முத்திரையை ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அல்லது அதற்கு மேலும் நீங்கள் தாராளமாக செய்யலாம். இது மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. மேலும் நம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்கிறது. உடல் எவ்வளவு தான் சோர்வுற்றாலும், நீங்கள் உங்களுடைய தசையை இறுகச் செய்து, வலிமையாக்க கூடிய அற்புதமான ஆற்றலைக் கொடுக்கக் கூடிய இந்த முத்திரையை பல்வேறு நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. காய்ச்சல், டைபாய்டு, மஞ்சள் காமாலை, அல்சர், எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்தி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. நீங்களும் இதை ட்ரை பண்ணி பயனடையுங்கள்.

- Advertisement -