துன்பம் தீர ஆஞ்சநேயர் வழிபாடு

hanuman dheepam
- Advertisement -

வாழ்க்கையில் துன்பத்தை சந்திக்காத மனிதர்கள் என்று ஒருவரை கூட நம்மால் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துன்பத்தில் தான் இருப்பார்கள். ஏதாவது ஒரு பிரச்சனையை சமாளித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இது தான் இயற்கையின் நியதியும் கூட. ஆனால் ஒரு சிலருக்கு வாழ்க்கை துன்பமும் துயரமும் மட்டுமே நிறைந்ததாய் இருக்கும்.

அவர்கள் நிம்மதியாய் வாழ்ந்த காலங்கள் என்று சொல்லக்கூட எதுவும் இருக்காது. ஒரு துன்பம் போனால் இன்னொரு துன்பம் என மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். இப்படியானவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் நிலையை மாற்றிக் கொள்ள அனுமனை வழிபட்டால் சரியாகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

துன்பம் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு

இந்த வழிபாட்டை தீராத மன வேதனைகளும் கஷ்டத்திலும் இருப்பவர்கள் யாரிடமும் தங்களுடைய வேதனையை பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் கட்டாயமாக செய்யலாம். இதன் மூலம் அவர்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஆஞ்சநேயர் தனியாக இருக்கும் சன்னதியாக இருந்தாலும் சரி அல்லது கோவிலில் ஆஞ்சநேயர் என தனியாக இடம் இருந்தாலும் சரி.

- Advertisement -

கோவிலுக்கு செல்லும் போது ஒரு அகல் விளக்கு சுத்தமாக பசு நெய் பஞ்சத் திரி எடுத்துச் செல்லுங்கள். ஆஞ்சநேயருக்கு முன்பாக அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சத்தில் போட்டு தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தீபத்தின் முன் அமர்ந்து ஹனுமன் சாலிசா படிக்க வேண்டும்.

இது உங்களுக்கு படிக்க தெரிந்தால் அப்படியே படிக்கலாம் அல்லது யூட்யூபில் போட்டு விட்டு கேளுங்கள். ஆனால் அனுமன் சாலிசா கட்டாயமாக கேட்கவும் படிக்கவும் செய்ய வேண்டும். அதே நேரத்தில் கோவிலுக்குள் நீங்கள் சென்று தீபம் ஏற்றி இந்த வழிபாடு செய்யும் பொழுது யாரிடமும் பேசக் கூடாது. கோவிலில் குறைந்தது அரை மணி நேரமாவது இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் பெருக தமிழ் புத்தாண்டு கனி காணுதல் முறை

இந்த முறையில் 48 வாரங்கள் தொடர்ந்து அனுமனை வணங்கும் போது உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் கர்மாக்களும் தீரும் என்று சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் சந்திக்கக்கூ டிய அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்ம வினை காரணம் என்று சொல்லப்படுகிறது.இந்த வழிபாடு அதையும் சரி செய்யக்கூடியதாக அமையும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்யலாம்.

- Advertisement -