புது வீட்டில் குடி போவதற்கு முன்பு, அந்த வீட்டை சுத்தம் செய்யும் தண்ணீரில் இந்த 1 பொருளை மட்டும் கலந்து சுத்தம் செய்யுங்கள். புது வீட்டில் தங்கி இருக்கும் கெட்ட சக்திகள் வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்படும்.

house
- Advertisement -

வீடு என்ற இந்த இரண்டு எழுத்து வார்த்தை தான் நம்முடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நம்முடைய நல்லது கெட்டது, சந்தோஷம் துக்கம், ஏற்றம் இறக்கம், இவைகளை நிர்ணயிப்பது நாம் குடியிருக்கும் வீடு தான். நாம் இருக்கும் வீட்டிலிருந்து, குடிபெயர்ந்து சொந்த வீட்டிற்கோ அல்லது வாடகை வீட்டிற்கோ செல்லும் போது, நம்முடைய மனக்கஷ்டத்தை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. நாம் வாழ்ந்த வாடகை வீடாக இருந்தாலும் சரி, அந்த வீட்டில், பல விசேஷங்களை செய்திருப்போம். நம் குடும்பத்தோடு பல தருணங்களில் அந்த வீட்டில் சந்தோஷமாக இருந்திருப்போம். ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக அந்த வீட்டை விட்டு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை அமைந்துவிட்டது. கட்டாயமாக அந்த வீட்டை விட்டு செல்பவர்களுடைய அந்த ஏக்கம் அந்த வீட்டிலேயே தான் தங்கியிருக்கும். இது ஒரு விதம்.

milk3

சில பேர் வாழும் வீடு, சிலருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவே கொடுக்காது. மிகவும் கஷ்டப்பட்டு வறுமையில் வாடி பல இன்னல்களை சந்தித்து அந்த வீட்டில் வாழ்ந்திருப்பார்கள். பல கஷ்டங்களை தாண்டி அந்த வீட்டை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். இது இரண்டாவது விதம். சரி, இதில் நம் குடி போகக்கூடிய அந்த புது வீட்டில் எப்படிபட்ட மனநிலை மையை கொண்டவர்கள் வாழ்ந்து இருந்தாலும் சரி, அந்த வீட்டில் மீண்டும் நாம் குடிபோகும் போது மற்றவர்களுடைய ஏக்கமோ, மற்றவர்களுடைய துரதிர்ஷ்டமோ அந்த வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டமோ நஷ்டமோ தீய சக்திகளோ நம்மைத் தாக்கி விடக்கூடாது. இதற்கு அந்த வீட்டை கழுவும் போது நாம் எந்த பொருளை சேர்த்து சுத்தம் செய்வது.

- Advertisement -

சுண்ணாம்பு தாங்க அந்த பொருள். வெற்றிலை பாக்குடன் சேர்த்து போடும் சுண்ணாம்பு. வீடு குடி செல்வதற்கு முன்பாக அந்த வீட்டை நீங்கள் சுத்தம் செய்யும்போது, அந்த வீட்டை கழுவி விட பயன்படுத்தும் தண்ணீரோடு சிறிதளவு சுண்ணாம்பை கலந்து கரைத்து அதன் பின்பு அந்த வீட்டை சுத்தம் செய்துகொள்ளுங்கள். நீங்கள் குடிபோகும் வீட்டில் தீயசக்தி இருந்தாலும் சரி, அடுத்தவர்களின் ஏக்கம் மன கஷ்டம் தரித்திரம் எது இருந்தாலும், எல்லாவிதமான தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல் அந்த வீட்டைவிட்டு நிச்சயம் விரட்டி அடிக்கப்படும்.

sunnambu

குறிப்பாக நீங்கள் பால் காய்ச்சப் போகும் அந்த நாளுக்கு, முந்தைய நாள் வீட்டை இப்படி சுத்தப்படுத்தி விடுங்கள் அவ்வளவுதான். அதன் பின்பு அந்த வீட்டில் பால் காய்ச்சும் போது கட்டாயமாக ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து தான் பால் காய்ச்ச வேண்டும். காலையில் பால் காய்ச்சி முடித்துவிட்டு அந்த மஞ்சள் பிள்ளையாரை அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டும்.

- Advertisement -

பால் காய்ச்சிய அடுத்த நாள், அந்த மஞ்சள் பிள்ளையாரை எடுத்து கொஞ்சம் தண்ணீரில் போட்டு கரைத்து அந்தத் தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள் போதும். இந்த பரிகார முறையினை நீங்கள் சொந்த வீட்டிலும் பின்பற்றலாம். வாடகை வீட்டுக்கு குடி போனாலும் பின்பற்றிக் கொள்ளலாம்.

milk

இதை செய்யும்போது அந்த வீட்டிலிருக்கும் எப்பேர்பட்ட எதிர்மறை ஆற்றலும் உங்களை எதுவும் செய்யாது. வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற்றப்பட்டு, மகிழ்ச்சியோடு வாழ, குடும்பம் சந்தோஷமாக இருக்க சுத்தம் செய்யும் தண்ணீரில் சுண்ணாம்பை கரைக்க மறக்காதீர்கள். குடி சென்ற பின்பு வீட்டில் நன்மைகள் மட்டுமே நடக்க, மஞ்சள் பிள்ளையாரை தண்ணீரில் கரைத்து அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க மறக்காதீர்கள். உங்கள் வீடு சந்தோஷமான கோவிலாக மாற ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்ட சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

- Advertisement -