புழுவெட்டை நீக்க இந்த ஒரு காய் இருந்தால் போதும்.

pulufettu
- Advertisement -

ஒருவருடைய தலை முடி தான் அவருடைய அழகை மேலும் மெருகூட்ட காரணமாக விளங்குகிறது. அப்படிப்பட்ட தலைமுடியில் பல பிரச்சினைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக சிலருக்கு புழுவெட்டு என்று சொல்லக்கூடிய பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனையை எந்த முறையில் சரி செய்ய வேண்டும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக புழுவெட்டி என்பது தலையில் ஆங்காங்கே சிறு சிறு இடங்களில் மட்டும் முடி சுத்தமாக உதிர்ந்து விடுதலையே ஆகும். இதற்கு பல வகைகளில் காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான காரணமாக மரபணு மாற்றம் திகழ்கிறது. தைராய்டு, சர்க்கரை நோய் போன்ற நோய்களைப் போலவே இந்த புழுவெட்டும் ஒருவகையான நோயாகவே கருதப்படுகிறது.

- Advertisement -

இதை சரி செய்வதற்கு மருத்துவர்களிடம் நாம் செல்லும் பொழுது அவர்கள் பல மாத்திரைகளை தருவார்கள். அந்த மாத்திரைகளை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் நமக்கு பக்க விளைவுகளை அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக இயற்கையான முறையில் எந்த வகையில் புழுவெட்டை சரி செய்யலாம் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

இந்த புழுவெட்டை முதலில் நாம் சரி செய்வதற்கு நம்முடைய மனதை ஆரோக்கியமான நிலையில் பராமரிக்க வேண்டும். எந்த அளவுக்கு மனது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். அதையும் மீறி இந்த பிரச்சனைகள் வந்துவிட்டாலும் நாம் மன மகிழ்ச்சியோடு இருந்தோம் என்றால் படிப்படியான முறையில் இந்த பிரச்சனை தீர ஆரம்பிக்கும்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் இந்த புழுவெட்டு ஏற்பட்ட பகுதிகளில் நாம் சில இயற்கை முறையான வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் அந்த இடத்தில் மறுபடியும் முடி வளர்வதற்குரிய வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அவற்றுள் நமக்கு மிகவும் முக்கியமாக பயன்படக்கூடியதுதான் தும்பட்டி காய். இதை குமட்டிக்காய் என்றும் கூறுவோம்.

இது பொதுவாக ஆற்றங்கரை ஓரங்களிலும், ஏரி கரைகளிலும் காணப்படும் ஒரு வகையான காய். இது பார்ப்பதற்கு தர்பூசணிக்காய் போலவே தென்படும். ஆனால் இதில் கசப்பு சுவை அதிகமாக இருக்கும். இதை உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதற்கு பதிலாக புழுவெட்டு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த காயை எலுமிச்சம் பழத்தை நறுக்கி தடவுவது போல் தடவ வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு தடவுவதன் மூலம் புழுவெட்டு என்பது முற்றிலும் நீங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முடி உதிர்வு தடுக்கப்படுகிறது. இதோடு இதன் மருத்துவ குணம் நிற்க வில்லை. தலையில் இருக்கக்கூடிய ஈறு, பேன், பொடுகு போன்ற பிரச்சினைகளையும் இது தடுக்க உதவுகிறது. இந்த பிரச்சினைகள் எதுவுமே இல்லை என்றால் என்றாலேயே முடி உதிதல் பிரச்சினை என்பது குறைந்து விடும். அதோடு மட்டுமல்லாமல் புழுவெட்டு ஏற்பட்ட இடங்களில் அதிக அளவு கவனம் செலுத்தி இந்த காயை தேய்ப்பதன் மூலம் அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தூண்டப்பட்டு முடி விரைவிலேயே வளரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பார்லர் போகாமலே முகம் பளிச்சின்னு மாற சிம்பிளா இதை செய்யங்க

பலரும் அனுபவரீதியாக இந்த காயை தலைக்கு உபயோகப்படுத்தி பயன் பெற்றிருக்கிறார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -