இந்த மரத்தின் அடியில் 5 நிமிடங்கள் அமர்ந்தாலே, ஆயிசுக்கும் அழியா ஐஸ்வர்யம் பெருகும். குபேரன் குடியிருக்கும் இந்த மரத்தைப் பற்றி உங்களுக்கு தெரியாதா?

Kuberan valipadu
- Advertisement -

குபேரன் குடியிருக்கும் மரம் இது. குபேரனுக்கு வீடாக சொல்லப்பட்டுள்ள ஒரு அற்புதமான மரத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த மரத்தை வீட்டிற்கு உள்ளேயும் வைத்து வளர்க்கலாம். அதாவது காம்பவுண்ட் சுவருக்கு உள்ளேயும் இதை வைத்துக் கொள்ளலாம். அப்படி காம்பவுண்டுக்கு உள்ளே இடம் இல்லாதவர்கள் வீட்டிற்கு வெளிப்புறத்தில் இடம் இருந்தால் அங்கேயும் இந்த மரத்தை வைத்து வளர்க்கலாம். வீட்டின் கொள்ளை புறத்திலும் இந்த மரத்தை வைத்து வளர்க்கலாம்.

இந்த மரத்தை பார்க்கும்போது, இந்த மரத்தின் நிழலில் அமரும்போது நீங்கள் செலவு செய்யக்கூடிய ஒவ்வொரு நிமிடமும், உங்களுக்கு அளவில்லா ஐஸ்வர்யத்தையும் மன அமைதியையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. அந்த அளவுக்கு அற்புதமாய்ந்த அந்த மரம், எந்த மரமாக இருக்கும். நீங்களும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா? வாங்க பார்த்து விடலாம்.

- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கக்கூடிய மரம் தான் இது. புங்கமரம் (புங்கை மரம்), இந்த மரத்தை நம் கையாலேயே நம் வீட்டில் நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும். ரொம்பவும் சுலபமாக இந்த மரம் வளர்ந்து விடும். (நர்சரி கடைகளில் கேட்டால் உங்களுக்கு சுலபமாக இந்த செடி விடும்.) புங்க மரத்தை மனக்கவலையோடு இருக்கும் போது பார்த்தாலே போதும். நம்முடைய மனது லேசாகும். அதற்கு காரணம் அந்த மரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களாக கூட இருக்கலாம்.

இந்த அழகான அமைதியை தரக்கூடிய புங்க மரத்தை ஒவ்வொரு வீட்டிலும் வைத்து வளர்ப்பது அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும். இதை குபேர பகவானின் மரம் என்றும், குபேர பகவான் தங்கக் கூடிய வீடு என்றும் கூட சிலர் சொல்லுகிறார்கள். மரத்தை வளர்த்து அந்த மரத்தின் நிழலில் தினமும் கொஞ்ச நேரத்தை செலவழியங்கள். குடும்பத்தோடு அந்த மரத்தின் அடியில் அமர்ந்து சந்தோஷமாக நேரத்தை கழித்தாலும் அது உங்களுக்கு மிக மிகப் பெரிய அளவில் நன்மையை கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

பெரிய பெரிய அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களில் வசிப்பவர்கள் புங்க மரத்தை வைத்து நிச்சயமாக வளர்க்க முடியாது. ஏன் என்றால் இது சின்ன அளவில் இருக்கக்கூடிய செடி அல்ல, கொஞ்சம் பெரிய அளவில் மரம் போல் வளரும் அல்லவா. அப்படிப்பட்டவர்கள் நீங்கள் தான் புங்கமரம் இருக்கக்கூடிய இடத்திற்கு தேடி போக வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் வற்றாத செல்வம் நிறைந்திருக்க வேண்டுமா? அப்படியானால் வெந்திய குளியல் முறை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த இடத்தில் புங்க மரம் இருந்தாலும் அந்த இடத்தில் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, அந்த மரத்தின் அடியில் அமர்ந்து நேரத்தை செலவிட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றத்தை உணருவீர்கள். போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஐஸ்வர்யத்துடன் வாழ்வதற்கு இந்த புங்க மர பரிகாரம் மிக மிக சிறப்பு வாய்ந்தது. இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் விருச்ச சாஸ்திரத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன்களாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -