பாவம் நீங்கி கோடி புண்ணியம் தேடி வர இன்று இரவுக்குள் இந்த தீபத்தை ஏற்றுங்கள்

suriya dheepam
- Advertisement -

இன்றைய சுபயோக வாழ்க்கை வாழ பொன் பொருள் எல்லாம் தேவை. அதை மேலும் மேலும் சம்பாதித்து சேர்த்துக் கொண்டு செல்லலாம். ஆனால் சம்பாதித்த அனைத்தையும் வைத்துக் கொண்டு சுகமாய் வாழ வேண்டுமெனில் நிச்சயம் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த புண்ணியத்தை நாம் மட்டும் அல்லாது நம்முடைய அடுத்த சந்ததியர்க்கும் சேர்த்து சேர்க்க வேண்டும்.

ஆகையால் தான் இன்றைய வாழ்க்கை நாம் நல்ல முறையில் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் எந்த பாவ செயலிலும் ஈடுபடாமல் வாழ வேண்டும் என்று வேதங்கள், சாஸ்திரங்கள், இதிகாசங்கள் எல்லாம் வலியுறுத்துகிறது. இதையெல்லாம் சரியாக நாம் கடைபிடித்தால் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

- Advertisement -

மனிதனாக பிறந்த அனைவரும் இந்த பிறவியில் நிச்சயம் தெரியாமல் ஏதோ ஒரு பாவத்தை நாம் செய்திருப்போம். அப்படி செய்த பாவங்கள் எல்லாம் கூட தீரக் கூடிய அற்புதமான ஒரு யோக நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. இந்த நாளில் இப்படி ஒரு தீபத்தை ஏற்றும் போது பாவம் தீர்ந்து புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோடி புண்ணியம் பெற கோதுமை தீபம்
இந்த தீபத்தை இன்று காலை 10:45 மணி முதல் 11.45 மணிக்குள் ஏற்றலாம் அல்லது மாலை 5.30 மணிக்கு மேல் 8.30 மணி வரை ஏற்றலாம். இந்த தீபத்தை பூஜை அறை வரவேற்பறை சமையலறை என இந்த மூன்று இடங்களிலும் ஏற்றலாம்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்ற ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு அல்லது கோதுமை இரண்டில் ஏதாவது ஒன்றை முழுவதுமாக பரப்பி வைத்து விடுங்கள். அதன் நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கிழக்கு முகமாக தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். இதற்கென புதிதாக அகல் வாங்க வேண்டியது இல்லை. இந்த தீபமானது அரை மணி நேரம் வரை கிழக்கு பார்த்தவாறு எரிய வேண்டும்.

அதன் பிறகு இந்த தீபத்தை அணைத்து விடுங்கள். தீபம் ஏற்ற பயன்படுத்திய கோதுமை மாவு அல்லது கோதுமையை அன்றைய தினமே சமைத்து வீட்டில் உள்ளவர்கள் நெய்வேத்தியமாக உண்ண வேண்டும். ஞாயிறு என்றாலே சூரிய பகவானை குறிக்கும். அவருக்கான தானியமெனில் அது கோதுமை. பாவங்கள் தீர்ந்து புண்ணியத்தை தேடி தரக் கூடிய இந்த தீபத்தை இந்த நாளில் ஏற்றுவது மிகவும் சிறந்தது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் சண்டை சச்சரவுகள் எதுவும் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு முருகப்பெருமானை இந்த முறையில் வழிபட வேண்டும்.

இருளை நீக்கி பிரகாசத்தை தரும் சூரிய பகவானை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால் பாவம் என்னும் இருள் நீங்கி புண்ணியம் என்னும் ஒளி பிறக்கும். நம்முடைய தீராத பிரச்சனைகள் கடன்கள் என அனைத்துமே சேர்ந்து தீர்ந்து நல்லதொரு வழி பிறக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -