வீட்டில் சண்டை சச்சரவுகள் எதுவும் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வதற்கு முருகப்பெருமானை இந்த முறையில் வழிபட வேண்டும்.

kudumba ottrumai
- Advertisement -

நம்முடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்வதற்காகவே பிறந்தவர்கள் தான் நம் குடும்ப உறுப்பினர்கள். குடும்பம் என்றதும் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று ஒரு சூழ்நிலையில் இருக்கும். பிறகு அதுவே கணவன், மனைவி, பிள்ளைகள் என்று மாறும். இப்படி எந்த சூழ்நிலையில் குடும்பம் இருந்தாலும் அந்த குடும்பத்தில் ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்க முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

ஒரு குடும்பத்தில் யாரேனும் இருவருக்கு சண்டை ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய நிம்மதியும், சந்தோஷமும் போய்விடும். மறுபடியும் அந்த சந்தோஷம் வருவதற்கு பல நாட்கள் ஆகும். இது எப்போதாவது நடந்தால் பரவாயில்லை. ஆனால் சிலரின் இல்லங்களில் தினம் தினம் ஏதாவது ஒரு ரூபத்தில் சண்டைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

- Advertisement -

அதனால் அவர்கள் குடும்பத்தில் சந்தோஷமோ, நிம்மதியோ எதுவுமே இருக்காது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்ப ஒற்றுமைக்காக முருகப்பெருமானை மனதார நம்பிக்கையுடன் வழிபட வேண்டும். எப்படி வழிபட வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.

முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையான செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு முருகப்பெருமானின் புகைப்படத்தை சுத்தம் செய்து அவருக்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அவருக்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாளத்தை வைத்து அதில் குடும்பம் ஒற்றுமையுடனும், சந்தோஷத்துடனும் இருக்க வேண்டும் என்ற நேர்மறை வார்த்தைகளை உபயோகப்படுத்தி நம்முடைய கோரிக்கையை ஒரு வெள்ளை நிற பேப்பரில் எழுத வேண்டும். அந்த பேப்பரில் நான்கு முலையிலும் சந்தனம் குங்குமம் வைத்து அந்த பேப்பரின் மேல் சிறிது உதிரிப்பூக்களை வைக்க வேண்டும்.

அடுத்ததாக மற்றொரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நம் கை அளவில் பச்சரிசியை எடுத்து அதில் நிரப்ப வேண்டும். பிறகு அந்த பச்சரிசிக்குள் ஒரு ரூபாய் நாணயத்தை வெளியில் தெரியாத அளவுக்கு உள்ளே வைக்க வேண்டும். அதற்கு மேலும் சில உதிரிப்பூக்களை வைக்க வேண்டும். இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து மனதார வழிபட வேண்டும்.

- Advertisement -

இதே போல் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் முருகப்பெருமானை நினைத்து வழிப்பட வேண்டும். நம்முடைய கோரிக்கை எழுதப்பட்ட பேப்பரை எதுவும் செய்யாமல் மேலிருக்கும் பூவை மட்டும் மாற்றினால் போதும். மற்றொரு தாம்பாளத்தில் இருக்கக்கூடிய பச்சரிசியை எறும்புகளுக்கும், பறவைகளுக்கும் உணவாக வழங்க வேண்டும். பிறகு அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து விட்டு புதிய நாணயத்தை வைக்க வேண்டும்.

ஒன்பது வாரங்கள் இந்த வழிபாட்டை செய்த பிறகு அருகில் இருக்கும் முருகன் கோவிலில் நாம் எடுத்து வைத்திருக்கும் ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்களை உண்டியலில் சேர்க்க வேண்டும். அப்பொழுது நாம் எழுதி வைத்திருந்த அந்த கோரிக்கை பேப்பரையும் உண்டியலில் செலுத்தி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தங்க நகை சேர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தங்கத்துடன் இந்த பொருட்களை சேர்த்து வையுங்கள்.

இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அது யாராக இருந்தாலும் அவர்களுக்கிடையே இருந்து வந்த சண்டைகள் அனைத்தும் நீங்கி மன ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடனும், சந்தோஷமாகவும் வாழலாம்.

- Advertisement -