நீங்கள் செய்த பாவங்களால் தொடர்ச்சியாக துன்பத்தை அனுபவித்து வருகிறீர்களா? இதை எல்லாம் செய்தாலே போதும், உங்கள் பாவ கணக்கு குறைந்து புண்ணிய கணக்கு பெருகிக்கொண்டே போகும்.

paavam theera
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் உயர்வுக்கும், தாழ்விற்கும் நாம் செய்த பாவ புண்ணியங்களே காரணமாக இருக்கிறது. நமது பாவம் புண்னனிய கணக்கை அடிப்படையாக வைத்து அதற்கேற்ப சந்தோஷத்தையும், சங்கடத்தையும் நவகிரகங்கள் நமக்கு அருள்கின்றன. அந்த வகையில் நவகிரகங்களை சாந்தி படுத்தி நமது புண்ணிய கணக்கு அதிகரி சில எளிமையான பரிகாரங்கள் உள்ளன. வாருங்கள் அவை என்னவென்று பார்ப்போம்.

பொதுவாக நாம் இரவு படுக்கப் போவதற்கு முன் அருகில் குடிப்பதற்காக தண்ணீர் வைப்பது இயல்பான செயலே. ஆனால் அதில் மீதமான தண்ணீரை நாம் காலையில் கீழே ஊற்றி விடுவோம். அதற்க்கு பதிலாக அந்த தண்ணீரை தொட்டாசினிங்கி செடிக்கு ஊற்றுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றது என்பது நாம் அறியாத ஒன்று.

- Advertisement -

நம் வீட்டிற்கு அருகில் ஏதேனும் பசுமாடு இருப்பின், அந்த பசு மாட்டிற்கு சாப்பிட ஏதாவது கொடுப்பதன் மூலம் சந்திர பகவானின் அருள் நமக்கு கிடைக்கும். இறுதி சடங்குகளுக்கு பொருள் உதவியோ அல்லது பண உதவியோ செய்தால் சனி பகவானின் அருள் நமக்கு கிடைத்து, நம்முடைய ஆயுள் அதிகரிக்கும். நம்முடைய ஆசான்கள் மற்றும் சாதுக்களை நாம் வணங்குவதும், புண்ணிய யாத்திரைக்கு யாரேனும் செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உதவுவதும், ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு பொருளுதவி கொடுத்து உதவுவதும் குரு பகவான் அருள் கிடைக்க காரணமாகிறது.

தொன்மையான கோவில்களில் உள்ள குளங்களை சுத்தம் செய்வதும், தூர் வாருவதும் அல்லது புதிய குளங்களை வெட்டுவதும் அல்லது தண்ணீர் தொட்டி அமைத்து தருவதும் தேவதைகளின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்க உதவுகிறது. சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதும், பசித்தவர்களுக்கு உணவு அளித்தலும், தொழு நோயாளிகளுக்கு வைத்திய செலவு செய்தலும், சூரிய பகவானின் அருள் கிடைக்க உதவும் செயல்களாகும். மேலும் இதனால் நம்முடைய ஆரோக்கியம் மேம்படும். நம் வம்சம் விருத்தி அடையும்.

- Advertisement -

ஏழை பெண்ணின் திருமணத்திற்கு உதவுவதும், நாம் இருக்கும் இடத்தில் பூமியை தொட்டு வணங்குவதும், வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதும் செவ்வாய் பகவானின் அருள் கிடைக்க உதவுவதாகும். இதனால் நமக்கு அஷ்ட சுகங்களும் கிடைக்கும். புதன்கிழமைகளில் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்தலும், புதிதாக வாங்கிய துணிகளை தானம் தருவதும், அன்னதானம் செய்வதும் புதன் பகவானின் அருள் முழுமையாக கிடைக்க உதவுகிறது. மேலும் இதனால் நாம் செய்யும் தொழில் சிறப்பாகவும், செம்மையான வாழ்க்கை கிடைக்கவும் புதன் பகவான் அருள் புரிவார்.

எங்காவது நாகத்தை பார்க்கும் பொழுது அதை அடிக்காமல் இருப்பதும், குடிகாரன், குடி கெடுத்தவன், குரு துரோகி போன்றவர்களுடன் பழகாமல் இருப்பதும், ராகு கேதுவின் ஆசி பெற உதவுகிறது. பாழடைந்த கோவில்களை சுத்தம் செய்து விளக்கேற்றுவதாலும், பிரதோஷ காலத்தில் அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுப்பதாலும், பச்சரிசி மாவு மற்றும் வெல்லம் கலந்து கோவில் சுற்றுப்புறங்களில் போடுவதாலும் தேவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் நம் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: எந்த தெய்வத்தை எந்த மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் என்ற இந்த சூட்சமத்தை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும், வாழ்க்கையில் தோல்வி என்ற வார்த்தைகே இடமில்லை.

இந்த சிறு சிறு செயல்களை நாம் அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் இதற்குரிய புண்ணியங்கள் நம்மை வந்து சேரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதை நாம் தெரிந்து கொண்டு அடிக்கடி செய்வதன் மூலம் நவகிரகங்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து, நம் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், அதிலிருந்து வெளிவந்து நல்ல நிலையை அடைய இந்த செயல்கள் நமக்கு உதவி புரிகின்றன.

- Advertisement -